pATal39 pATal38.html pATal39.html pATal40.html ஏரெழுபது மகாகவி கம்பர் 39. ஏற்றத்தின் சிறப்பு.
பொருளடக்கம் | 38. பயிர்வளர்தற் சிறப்பு. | 40. துலைநீரின் சிறப்பு. | அகெடமி

39. ஏற்றத்தின் சிறப்பு. காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும் ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக் காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. (இ—ள்.) காற்று — காற்றினுடைய உதவியினால், மேல் — வானத்தின்மீது, வருகின்ற — சஞ்சரிக்கின்ற, கார் - வானமானது, விடினும் — (மழைபெய்யாது) விட்டாலும், கடல் சுவறி — கடல் நீரும் வற்றி, யாற்று நீர் அற — நதியின் நீரும் வற்றிவிடுமாறு, வெள்ளியரசனும் — சுக்கிரபகவானும், தெற்கு ஆயிடினும் — தெற்கே யிருந்தாலும், நாளும் — ஒவ்வொருதினமும், ஏற்றமேகொடு — ஏற்றத் தினையே கருவியாகக்கொண்டு, இறைத்துஉம் — (நீரை) இறைத்தேனும், உலகம் விளைவித்து — உலகத்திலே (பயிரை) விளையச்செய்து, காத்து — பாதுகாத்து, உயிர் வளர்த்தல் — உலகத்துயிரை வளரச் செய்தல், காராளர் தம் கடனே — வேளாளரின் கடமையான ஒழுக்கமாம்; (எ - று.) இதனால், மழைபெய்யாத காலத்தும், வேளாளர் நீர்ப்பாங் குள்ள கிணறு முதலியவற்றில் ஏற்றத்தைக் கொண்டு இறைத்துப் பயிரையுண்டாக்கி உலகத்தாரை ஓம்புமாறு கூறப்பட்டது. வானத்திலே கார் சஞ்சரிப்பது காற்றின் பிரேரணையினாலேயே யாதலால் “காற்றுமேல் வருகின்ற கார்” என்றார். சுவறி=சுவற என்ற எச்சத்தின் திரிபாகக் கொள்ளினுமாம். அரசன் — தலைமைப் பொருளுணர்த்திற்று. வெள்ளி தெற்கேயாயிடின் பஞ்சமுண்டா மென்பது கீழ் 30-ஆஞ்செய்யுளிலும் வந்துள்ளது. காத்துமே, உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது; ஏ - இசைநிறை. — (39)
பொருளடக்கம் | 38. பயிர்வளர்தற் சிறப்பு. | 40. துலைநீரின் சிறப்பு. | அகெடமி