pATal38 pATal37.html pATal38.html pATal39.html ஏரெழுபது மகாகவி கம்பர் 38. பயிர்வளர்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 37. பயிர்முதற் சிறப்பு. | 39. ஏற்றத்தின் சிறப்பு. | அகெடமி

38. பயிர்வளர்தற் சிறப்பு. சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும் பேர்வள வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும் ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. (இ—ள்.) கடல் சூழ்ந்த — கடலினாற்சூழப்பட்ட, பார் ­— பூமியிலே, வளரும் — தோன்றியுள்ள, இசை வளரும் — பெரும்புகழ் படைத்த, காராளர் — வேளாளரின், பயிர்—, வளரும் — வளர்கின்ற, திறத்தாலே — தன்மையாலே, சீர் வளரும் மறை — சிறப்புப்பொருந்திய வேதம், வளரும் — வளர்ச்சிபெறும்; திறல்வேந்தர் முடிவெற்றி வேதரின் கிரீடம், வளரும் — செழித்துத்தோன்றும்; பேர் வளரும் வணிகர்க்கு — பெருமைமிக்க வணிகசாதியார்க்கு, பெரு நிதியம் — பெருஞ்செல்வம், மிக வளரும் — மிகுதியாகவுண்டாகும்; ஏர் வளரும் திரு வளரும் — அழகுமிக்க (கல்விகேள்வி முதலிய) செல்வமும் செழித்துத் தோன்றும்; (எ - று.) பயிர் வளர்ந்து விளைதலே, உலகத்தில் வேதமோதுதல் முதலியன நிகழ்தற்கு ஏதுவா மென்றவாறு. மறைக்குச்சிறப்பு — மனிதராற் செய்யப்படாமை, தன்னுட்கூறியபொருள் பொய்படாமை, ஐயந்திரிபுகளைக் கொண்டு கூறாமை முதலியன. “இசைவளரும், கடல் சூழ்ந்தபார் வளரும்” என்ற இரண்டு தொடரையும் வினை முற்றாகக்கொண்டு, காராளர் பயிர் வளருந்திறத்தாலே மறைவளரும் ;..... திருவளரும்; இசைவளரும்; பாரும் வளரும் என முடிப்பினும் அமையும். வளருமென்றசொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது — சொற்பொருட்பின்வருநிலையணியாம். — (38)
பொருளடக்கம் | 37. பயிர்முதற் சிறப்பு. | 39. ஏற்றத்தின் சிறப்பு. | அகெடமி