pATal37
pATal36.html
pATal37.html
pATal38.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
37. பயிர்முதற் சிறப்பு.
பயிரின் முதன்மையைச் சிறப்பித்துக் கூறுவது.
37. பயிர்முதற் சிறப்பு.
அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே.
(இ—ள்.) அந்தணர்க்கு — பிராமணர்க்கு, முதல் — முதன்மையாகச் சிறந்திருப்பது, வேதம் — வேதமேயாகும்; அரசருக்கு—, முதல், வெற்றி — (பகைவரை) வெல்லுதலேயாம்; முந்திய சீர் வணிகருக்கு — முற்பட்ட புகழையுடைய வணிகர்கட்கு, முதல்— ஆயம் முதல் —ஆதாயத்திற்குக் காரணமான மூலதனமாம்; உலகில் வந்த — இவ்வுலகத்திற் பிறந்த, உயிர்தமக்கு எல்லாம் — உயிர்கட் கெல்லாம், மருந்து ஆக வைத்த — மருந்தாகவைத்துள்ள, முதல் — முதலாவதோ, செந்தமிழ்க்கு முதல் ஆய — செந்தமிழைப் பயில்வதிலே தலைமைபெற்ற, திருவாளர் — சீமான்களாகி உழவுத்தொழிலைப் புரிபவரான வேளாளரின், செய்முதல் —விளைவயலின்கணுள்ள பயிர்முதலேயாம்; (எ-று.)
அந்தணர்க்கு வேதமும், அரசர்க்குவெற்றியும், வணிகர்க்கு மூலதனமும் முதலாகும்; இங்ஙனம் ஒவ்வொருசா தியார்க்கு முதலா கும் வேதம் முதலியனபோல் வல்லாமல், திருவாளர் செய்முதல், உலகிலுயிர்க்கெல்லாம் மருந்தாகின்ற முதலாகு மென்க. செய் முதலை மருந்து என்றது-பசிநோய் உடலை வருத்தாது காத்தல் பற்றியாகும். திருவுக்கு உழவே காரணமா மாதலால், அத்தொழி லைப்புரியும் வேளாளரை 'திருவாளர்' என்றது. இங்கு அந்தணர் முதலிய ஒவ்வொருசாதியார்க்கே முதலாகும் வேதம் முதலியவற் றைவிட, வேளாளர் செய்முதல் உலகத்துயிர்க்கெல்லாம் முதலா கும் என அதற்கு மேன்மைதோன்றக்கூறியது - வேற்றுமையணி யின்பாற்படும். ஆயம் - வடசொல்; ஆதாயம், இலாபமென்பது, பொருள். "முதலிலார்க்கூதிய மில்" என்பது, இங்குக் காணத் தக்கது. — (37)