pATal68
pATal67.html
pATal68.html
contents.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
வேறு.
69. வாழ்த்து.
வேறு.
69. வாழ்த்து.
பார்வாழி நான்மறைநூற் பகுணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே.
(இ—ள்.) பார் வாழி — உலகம் வாழ்வதாகுக; நால் மறை நூல் பருணிதர் ஆகுதி வாழி — நான்குவேதங்களிலும்வல்ல ஞான பரிபாகமுடைய அந்தணர்களின் வேள்வியாகுதிகள் வாழ்வதாகுக; கார் வாழி — மேகம் [மழைபொழிந்து] வாழ்வதாகுக; வளவ பிரான் காவேரி நதி வாழி — சோழவரசனது [நாட்டிற் பாயும்] காவேரிநதி வாழ்வதாகுக; பெருக்காளர் பேர் வாழி — வேளாளர்களின் புகழ் வாழ்வதாகுக; பெரும் செல்வக் கிளை வாழி — (அவ் வேளாளரது) பெருத்த செல்வத்தையுடைய சுற்றத்தவர் வாழ்வ தாகுக; ஏர் வாழி — (அவர்களது) ஏர் வாழ்வதாகுக; எழுபத் தொன்பது நாடு இசை வாழி — சோழப் பேரரசுக்குட்பட்ட) எழுபத்தொன்பது நாடுகளின் புகழ் வாழ்வதாகுக; (எ - று.)
கிளை — சுற்றத்தார்க்கு ஆகுபெயர். இசைவாழி யென்றது, “இசையாற் றிசைபோயதாதலின்”. இவ்வாழ்த்து இந்நூற்கு மங்கல முடிபாயிற்று. — (69)
ஏரெழுபது முற்றிற்று.