pATal44 pATal43.html pATal44.html pATal45.html ஏரெழுபது மகாகவி கம்பர் 44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு.
பொருளடக்கம் | 43. பைங்கூழ்ச்சிறப்பு. | 45. களைகளைதற்சிறப்பு. | அகெடமி

44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு. கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர் ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார் பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின் நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. (இ—ள்.) கார் தாங்கும் — வானினால் தாங்கப்பெற்ற [வானம் மழை பொழிவதால் விடாது பெருகிவருகின்ற], காவேரிநதி — காவேரிநதியை, தாங்கும் — பயனுள்ளதாகச் செய்யவல்ல, ஏர் தாங்குவார் — உழவுத்தொழிலை மேற்கொண்டவரான, காராளர் — வேளாளர், பார் தாங்கும் மன் உயிரின் — உலகினால் தாங்கப்பெற்ற நிலைபெற்ற பிராணிகளின், பசி — பசியை, தாங்கும் — போக்கிப் பாதுகாக்கவல்ல, பைங் கூழின் — பசுமையான பயிருக்கு வேண்டிய, நீர் — நீரை, தாங்குவார் — (உரியபடி) பாய்ச்சுபவராய், நிலம் தாங்கு கின்றார் அலரோ — இந்நிலவுலகத்தையே தாங்குகின்றவர்களல்லரோ? அன்றி — அவரையல்லாமல், தாங்கவல்லார் யாவரே — (இந்நிலவுலகத்தவரைத்) தாங்கவல்லவர் யாவர்? (எ - று.) நீர் தாங்குதல் — நீரைக்கட்டிவைத்துச் செய்க்கு வேண்டியபோது பாயச்செய்தல். கார்தாங்கும் காவேரி என்பதற்கு — (மழை வறந்து போனாலும்) அம் மழைபோல நீரையுதவித் தாங்குகின்ற காவிரி என்று உரைப்பதும் உண்டு. தாங்குதலென்ற சொல் ஒரே பொருளில் பன்முறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணி யாம். — (44)
பொருளடக்கம் | 43. பைங்கூழ்ச்சிறப்பு. | 45. களைகளைதற்சிறப்பு. | அகெடமி