தக்கயாகப்பரணி
காப்பு
வைரவக் கடவுள்
உரககங்கணந் தருவன பணமணி
யுலகடங்கலுந் துயிலெழ வெயிலெழ
உடைதவிர்ந்ததன் றிருவரையுடைமணி
யுலவியொன்றொடொன் றலமரவிலகிய
கரதலந்தருந் தமருகசதிபொதி
கழல்புனைந்தசெம் பரிபுரவொலியொடு
கலகலன்கலன் கலனெனவருமொரு
கரியகஞ்சுகன் கழலிணைகருதுவாம்.
1. கடவுள் வாழ்த்து
உமாபாகர்
வேறு
1. புயல்வாழ நெடிதூழி புவிவாழ முதலீறு புகல்வேதநூ
லியல்வாழ வுமைவாழ்வ தொருபாக ரிருதாளி னிசைபாடுவாம்
2. குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனே
நிலநேமி பொலனேமி யளவாக வுககோடி நெடிதாளவே.
விநாயகக்கடவுள்
3. சதகோடி வித்தாள சதிபாய முகபாகை குதிபாய்கடா
மதகோடி யுலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம்.
4. நககோடி பலகோடி புலியேறு தனியேர நளினாலயன்
உககோடி பலகோடி குலதீப னெழுதீவு முடனாளவே.
முருகக்கடவுள்
5. ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப்
யொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழபாடுவாம்.
6. கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோ
ரடலாழி தனியேவு குலதீப ந்ருபதீப னருள்கூரவே.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
7. வழுவேறு குடகூடல் வடவாறு வழிமாற மனலாலொரோர்
கழுவேறு மமண்மூகர் கருமான வருமீளி கழல்பாடுவாம்.
8. எருதோடு கலையோடு சிலையோட மலையோட விபமோடநேர்
விருதோடு பொருதேறு புலிநேமி கிரிசூழ விளையாடவே.
9. இறைவாழி தரைவாழி நிரைவாழி யியல்வாழி யிசைவாழியே
மறைவாழி மனுவாழி மதிவாழி ரவிவாழி மழைவாழியே.
2. கடைதிறப்பு
10. தார்மார்பமு முகவிம்பமு நும்காதலர் தரநீர்
சேர்தாமரை யிறையானடி பணிவீர்கடை திறமின்.
11. கைவைக்கவு மடிதோயவு முடனின்று கவிக்குந்
தெய்வக்கொடி திசைதைவர நிற்பீர்கடை திறமின்
12. வெல்லும்பொரு ளதிகார மலங்காரம் விளங்கச்
சொல்லும்பொருள் பகருங்குழன் மடவீர்கடை திறமின்.
13. உருகுஞ்சுர ருயிருண்டன வுணர்வுண்டன வொழுகத்
திருகுங்குழ லரமங்கையர் திறமின்கடை திறமின்.
14. வேல்போனிறை பொருதுண்பது மெய்யேயுயிர் பொய்யே
சேல்போற்கடை பிறழுஞ்சில் கண்ணீர்கடை திறமின்.
15. வெங்கோல்வர நீர்பெற்ற தலைக்கோல்வர விறல்வெள்
செங்கோல்வர வருவீருயர் செம்பொற்கடை திறமின்.
16. மூவராயவரின் முதல்வராயதிதி புதல்வராயமுப் பத்துமுத்
தேவராயவர்தம் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.
17. உம்பராளுமம ராபுரந்தவிர லோகபாலரெயில் காவல்கூர்
செம்பொன்மாடநிரை ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.
18. யாவரும்பரவு மிந்த்ரரும்பழைய சந்த்ரசூரியரு மெண்டிசைத்
தேவரும்புகுதும் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.
19. பாடியும்பணிந் தும்பரவியும் பண்டைநுங்கள்வட சேடிதென்
சேடியுந்தவிர ராசராசபுரி புகுதுமாதர்கடை திறமினோ.
20. யாவர்தேவரிவர் தாமெனப்பெரிய விருவர்தேவரிவ ரெளிவருந்
தேவர்தேவர்தமி ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.
21. ஈருமதியமென முதியமதிவெருவி ராசராசநா யகர்முடிச்
சேருமதியமென விளையமதியொடுற வுடையமகளிர்கடை திறமினோ.
22. போயபேரொளி யடைத்துவைத்தபல புண்டரிகமிகு பொற்குழைச்
சேயபேரொளி மனீப்பெரும்ப்ரபை திறக்கவந்துகடை திறமினோ.
23. தாமவில்லுவெறு மொன்றுமுன்னமிவை சாமனார்கொடிகள் காமனார்
கோமவில்லென விசும்புவில்வெருவு தெய்வமாதர்கடை திறமினோ.
24. மையவாயகுரு வெளியவாயசில கெண்டைபுண்டரிக மலரினுஞ்
செய்யவாயுலக முறவுகோளழிய நறவுகொண்மகளிர் திறமினோ.
25. கலகமாரன்வெறு மொருவனாலுலகு களவுபோகவிரு காலமுந்
திலகமாருநுத லளகபாரவிரு ளருளுமாதர்கடை திறமினோ.
26. எளிவருங்கொழுந் புயமுநுங்களிரு குயமுமண்டியெதி ரெதிர்விழுந்
தெளிவருங்கலவி புலவிபோலியை தெய்வமாதர்கடை திறமினோ.
27. உலகபாடமனு வெனவுலாவுவன வொழுகுநீனயன முடையநீர்
திலகபாடமிருள் பருகவந்துநிலை செறிகபாடநிரை திறமினோ
28. அரனுமேனியிமை யவருமுண்பரென வஞ்சிநஞ்சுமமு தமுடன்
றிரைமகோததியை விடவிருந்தனைய தெய்வமாதர்கடை திறமினோ.
29. மிசையகன்றுயரு நகின்ம ருங்குல்குடி யடிபறிந்ததழ விடுமெனத்
திசையகன்றளவு மகனிதம்பதட முடையமாதர்கடை திறமினோ.
30. மகரவாரிதி மறுகவாசுகி வளையமேருவில் வடமுகச்
சிகரசீகர வருவிநீரர மகளிர்நீர்கடை திறமினோ.
31. வடபகீரதி குமரிகாவிரி யமுனைகெளதமை மகரமேய்
தடமகோததி யிவைவிடாதுறை தருணமாதர்கடை திறமினோ.
32. உருகுவாருயிர் படுபடாமுலை யுழறுமேலுல கிறுமெனத்
திருகுவார்முசி விசிவிடாதவர் திறமினோகடை திறமினோ.
33. மந்தமேசில நூபுராரவ மகிழ்நர்சேகர மதுகரஞ்
சிந்தமேல்வரு மேகலாரவ முடையநீர்கடை திறமினோ.
34. நாவிமான மணங்கமழ்ந்திள நவ்விமான மலர்பெருந்
தேவிமான விமானவாயில் புகுந்தரம்பையர் திறமினோ.
35. எளிவராமிர்த மதனனாள்படை யிறைவர்சீறினு மினியெனாத்
தெளிவராமிர்த மதனனாள்வரு தெரிவைமீர்கடை திறமினோ.
வேறு
36. நெளியுமகரவிரு குழையுமிள வெயில்விட
நிறையுமதியிரவு மழுகிநிலை கெடநகைத்
தெளியுநிலவுபக லினுமுளரி கெடமலர்
திலகவதனசுர மகளிர்கடை திறமினோ.
37. அருகுதிசையருகு கடிதடமு மிசைவெளி
அகலமடையவளர் தனதடமு மவையவை
திருகுசெருநினைய நினையநடு விடையிறு
திகிரிவரையிலர மகளிர்கடை திறமினோ.
38. உலருமுதுமர மிளமையும் வளமையு
முயிருநிலைபெற வொளிவிடுமிவருரு
வுறுதியமுதினு மிளரிவர்பிறவியு
முததியிவர்கள் லொருமகடிருமக
ளலகில்கரபதி மதனர்களரசிவ
ரவரதிகிரியு மனிகமுமகிலமு
மலகில்புவனமு மிவரிவரெனவரு
மமரர்வனிதைய ரணிகடை திறமினொ.
39. அடையவரியன கடையிருபுடையினும்
அளவுகெட நிமிர் விழிவிடமெடுதலின்
அமரரனைவரு முனிவரிலதிகழும்
அவனிதலமுற வீழபொழுதயீலெயீ
நுடையகளிரித ழுமிழ்நகையமிழ்துயிர்
உதவுமுதவியொ டுவமையிலிமையோ
டுரககுலபதி வரவவனுடன்வரு
முதிர்மையரிவய ருயர்கடை திறமினோ.
40. முடிதுமெனமறை முதலியபரவவும்
முறிதுமெனநிசி சரர்குலமிரியவும்
முரிதுமெனவௌ குலகிரிகுலையவும்
முளிதுமெனவெழு புணரிகண்மறுகவும்
மடிதுமெனமகி தலநிலைதளரவும்
மறிதுமெனவடி சுரபதிவருடவும்
வரதனொருதமிழ் முனிவரன்வரஞ்
மலயவரையர மகளிர்கடிறமினோ.
41. அலகின்மரகத முறிகளும்வயிரமும்
அபரிமிதமெரி தமனியமடையவும்
அரியதரளமு மழகியபவளமும்
அரசவரவின மழகியவுமலைகொடு
கலகமறிகடல் புகவிடுவனகதிர்
கவடுவிடுவன விவருழையிழையினுமுள
ககனதருவன மிவர்களுமெனவரு
கனகவரையர மகளிர்கடிறமினோ.
42. அளகமுகிலீரு புடையீனுமதிரவும்
அகருமணமீர்க மதமொடுகமழவும்
அதிகமிடையிடை சிலகொடியலசவும்
அமிர்துபொதிவ்ன சிலகுவடசையவும்
இளகுகலவைகொ டெழுதமைசமையவும்
எறீயுமிருகடை யினபிணையணையவும்
இறைவர்கயிலையி லீறைமகளுடன்வரும்
இமயவரையர மகளிர்கடிறமினோ.
43. எமதுமலையிறை யிகல்பொருசிலைமலை
ரவியுமதியமு முடன்வலம்வருமலை
யிருளுமிருள்கெட வெரிதமனியமலை
ரசதமலையிம மலையிலொர்சிறுகுவ
டுமதுமலையென வுயர்கயிலையையிக
ழுரிமையுடைவட வரையரமகளிரை
யுலகுவெயில்கெட வளநிலவெழநகு
முதயவரையர மகளிர்கடிறமினோ.
44. மயிலா யிறக்கி னயிர்ப்பிக்கும் வறுங்க ணென்று வாசவனார்
குயிலா யிறந்த கதைபாடக் கோலக் கபாடந் திறமினோ.
45. விண்ணிற் பகனார் தாந்துரக்கு மெல்லா விருளு மீண்டுந்தங்
கண்ணிற் புகுந்த கதைபாடக் கனபொற் கபாடந் திறமினோ.
46. புக்கா வுதிகள் பலவேற்றும் போரி லேற்றுஞ் சிரமொருவர்
முக்கா லீழந்த கதைபாட மூரிக் கபாடந் திறமினோ.
47. ஊத்தைத் தலைநீத் துய்ந்தொழிந்த
வொருமா மடிக ளொருமுருட்டு
மோத்தைத் தலைபெற் றமைபாட
மூரிக் கபாடந் திறமினோ.
3. காடு பாடியது
48. நெடுங்குன் றேழும் பிலமேழு நேமிக் கிரியுங் கடலேழும்
ஓடுங்கும் பாகத் துறைமோடி யுறையுங் காடு பாடுவாம்.
49. பால்வறந்துகீழ் நின்றகள்ளியும்
பசைவறந்துபோய் மீமிசைச்
சூல்வறந்துபோய் மாகமேகமுஞ்
சுண்டவீமவெரி மண்டவே.
50. பிணங்கடுங்கனலு மின்றிவெந்துநில
வாய்நிமிர்ந்துபில வாயபேய்
நிணங்கரைந்துருக நெய்யைநீரென
நினைத்துநாவினை நனைக்குமே.
51. சிரந்தெரிந்தன வறிந்தறிந்துகுவை
செய்துபைரவர்கள் செந்நிலம்
பரந்தெரிந்துபொடி செய்யமற்றவை
பரிக்கவந்தவர் சிரிப்பரே.
52. புற்றினின்றெழு புயங்கசூடிகை
நெருப்புவிட்டசிறு பொறியெனப்
பற்றிநின்றன வனந்தமின்மினி
யினந்தனித்தனி பரப்பவே.
53. பிணப்பறைக்குர லுவந்துவந்துசில
பேய்துணங்கையீடு தொறுமிடுங்
கணப்பறைக்குரல் படப்படச்சிறிது
செவிடுபடுமமரர் கன்னமே.
54. பள்ளிவேலைவிடு கானநாடிபடை பாடிவீடுகொள் படங்கெனக்
கள்ளிவேலிகளின் மீதெழப்பல சிலம்பிநூல்கொடு கவிக்குமே.
55. காதுமேயிறைவி திகிரிபூதமுங் கழுதுமேககன முழுதுமே
போதுமேயிரவி புரவியூடு நடு புகுதுமேனகுது நகுதுமே.
56. யோகமுதலீறைவி கோயின்மிசைநிருதர்
யூதம்வரவலகை யொட்டுமே
மேகமுருமொடற வெற்புமிறகொடற
மேலையெயிறுகொடு வெட்டுமே.
57. நீலவரைநிரைகள் போலுமவுணர்தொகை
நிற்குமேயிறைவி கிற்குமே
காலவிறுதியெரி போலமுகில்வயிறு
காயவருமுருமு கக்குமே.
58. ஈரல்சுருளமுளி பேய்களெரிதலையொ
டேறுசருகுட னெடுத்தெழுஞ்
சூரனிரைகளெரி சூளைநிரைகளென
வானினிடையிடை சுழிக்குமே.
59. பூதமலரினை பொங்குகழுதிரத
மெங்குமெழநடுவு புதையவந்
தோதமுகளிறுதி போதநடுநடுவு
முழுகுமெழுகிரியு மொக்குமே.
60. யாமுமிமையவர் தாமும்வெருவர வீமவெரியிர வெரிதொறுந்
தாமுமெரிவன போலவெரிவன தாபமிலசில தீபமே.
61. ஈடுபடுமிறை மகள்பொறாமைகொ
லீதுபொறாமைகொ லிறைவர்தங்
காடுபடுசடை யூடுமுருவு
கரந்துவருவது கங்கையே.
62. வெம்புகருநடர் வந்தவனமெனும்
விந்தவனமென வேளவுங்
கொம்புவிடுவன கொங்குகமழ்வன
கொந்துசொரிவன கொன்றையே.
63. கண்டமலைவன சண்டதருநிரை கந்துளெழமிசை கதுவவுஞ்
சண்டவெரியினு ணின்றுகுளிர்வது தங்களொருச்று திங்களே.
64. படப்படப்பொடி யாகவெங்குள பாதவாதிக ளாதவஞ்
கடச்சுடப்பொடி யாயெழச்சுழல் சூறைபுகுவன பாறையே.
65. புறசோலை பூதங்க ளும்பேயும் யாவும் புகுஞ்சோலையே
யறச்சோலை தானும் பிரானும் பயின்றாடு மச்சோலையே.
66. வெற்ப நேகசிக ரத்துடன் மிடைந்தனவென
கற்ப கோடிவிழ நீடுவன கற்பதருவே.
67. வாரி சாலையனு மாலய நமக்கெனவரும்
பாரி சாதமுள சாதகர் பராவுவனவே.
68. பாலை தாழமது மாரிசொரி யும்பருவநாண்
மாலை தாழ்வன வநேகமுள மந்தாரமே.
69. மீதெ டுத்தபணை யாவையும் விமுங்கவெழுசெந்
தாதெ டுத்தன வநேகமுள சந்தானமே.
70. சுவடு கொண்டபொழி லேழின்ஞிமி றுத்துறுமொரோர்
சுவடு கொண்டவரி சந்தன வனங்கவினவே.
71. பூவைத் தாலும் புகுதற் கரும்பொலங்
காவைத் தாலைந்து சோலை கவினவே.
72. மலைதருவன கடறருவன மணியணிபணி மகுடத்
தலைதருவன புவுதருவன தருவனகர தருவே.
73. பொங்க மளிப்புண ரித்துயில் வல்லி புறங்கடையிற்
சங்க மளிப்பன ரத்ன விதஞ்சத கோடியே.
74. பாகன கங்குழை வித்த பவித்ர பயோதரிதன்
கோகன கங்கன கஞ்சத கோடி கொடுப்பனவே.
75. துதிக்கோடு கூர்கலை யுகைப்பான் விடாமுல்லை
நூறாயி ரங்கிளைகொ டேறா விசும்பிவர்
மதிக்கொடு தைவர விழுத்தண் கொழுந்துகளை
வாயா வெனக்கொண்டு மேயாது மான்மதியே.
76. வாருஞ் சடாடவி முடித்தேவர் தந்தேவி
வன்மா னுகைத்தகொடி பொன்மா தவிக்கொடிகள்
ஊரும் பகற்றேரை முட்டுவன கட்டுவன
வுருகா கொழுந்துமுகை கருகா செழுந்துணருமே.
77. பிரமற்கு மம்மனை பெறுங்கற்ப கக்கொடிகள்
பெருவான மேறுவன வருவான மாறுவன
பரமற்கு மீதுமிடை சடையொக்கு மென்பதுகொல்
பறியா பெருஞ்சுழியு மெறியா தரங்கமுமே.
78. சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண் டாயிரஞ்
சுடரொடுஞ் சூழ்வருவரே
தேரியர்க டிகிரியுந் திகிரியோ வவைதொறு
நிலாவர வுலாவருவதே.
79. சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன
சிவாகம விதந்தெரிவரே
பூவகம் விடாதவர்க ளோதவுட னோதுவர்
பரம்பர புரத்தரகுமே.
80. கான நாடிதிரு முன்றில்கவி னக்கஞலுவர்
வான நாடியர் வணங்கவரு மாதருளரே.
81. ஓலக் கடனெருப்பி னுலகேழு முருகங்
கால கடையினுங் கொடியகட் கடைகளே.
82. புங்கப் படைவிழிக் கடையிலன் றிவர்புரூஉப்
மங்கத் தகிலமும் படுகொலைப் படுவதே.
83. நச்சுக்கண் முலைமே லிடுதுநிற்கு நகுபொற்
கச்சுக்கு மடையப் புடவிகை யடைகொலோ.
84. மின்போல்வ ரவரே யவர்மருங்கு லினிவே
றென்போல்வ தெளவெண் ணுவதெனில்லை யிணையே.
85. நின்ன்ற கன்றவிடை தேடியவரை தேமியனவுஞ்
சென்ன்ற கன்றன் நிதம்படு வில்லைதிசையே.
86. அங்ங்கண் முனரிமல ரன்மையது திங்களறியத்
திங்ங்க ளன்மையர வறியவில சூத்திலகமே.
87. அடைய மோகினிக ளாயினர்கொ லவ்வுருநினை
துடைய மோகினியை யொக்கவுளர் யோகிàΩிகளே.
88. சூழு மின்னொழ்லி நிவந்துசுர நாடியர்களுந்
தாழு மின்மினிக ளாகவுளர் சர்மினிகளே.
89. தரவ ரும்புடவி குறையவுளர் சாகினிகளே
பரவ ருந்தகைய நாயகிப தாகினிகளே.
90. நகுத குங்கடவு Šύதகைய மாதர்நகைபோய்
மொகுமொ கென்றகில லோகமு முழங்குவனவே.
91. தலைய ரிந்துவிடு வாருயிர் விடார்தலைவிமுன்
னிலைய ருத்தமது மெய்யெரியி னின்றெரிவரே.
92. அகவனச முகவனச மவைமலர வரிவார்
நகவனச மலர்குவிய வலம்வருவர் நகரே.
93. கொக்கொ ழுங்குபட வோடிமுகில் கூடியனையா
ரக்கொ ழுங்குபடு கஞ்சுக மலம்பவுளரே.
94. இந்தி ராதியரு மெக்கமல யோனிகளுமே
சந்தி ராதியரு மத்தலைவி சாதகர்களே.
95. அடையாள முளரித் தலைவியாதி மடவா
ருடையா டிருவகம் படியில்யோ கினிகளே.
96. சுழல்வட்டத் துடிகொட்டத் துனைநட்டத் தினரே
தழல்வட்டத் தனிநெற்றித் தறுகட்கொட் பினரே.
97. கழுவைப்புக் கறவெட்டிக் கவர்சுற்றத் தினரே
யுழுவைச்சிற் றுரிவைப்பச் சுதிரப்பட் டினரே.
98. அகைமத்தத் தனிவர்க்கத் தளகக்கொத் தினரே
பகைகுத்திப் பயில்சத்திப் பருமுக்கப் பினரே.
99. உகுநச்சுத் தலைநெட்டெட் டுரகக்கச் சினரே
தகுபுத்தப் புதுமக்கட் டலைமக்கட் டினரே.
100. குடரட்டத் தொருசெக்கர்க் குருதிப்பொட் டினரே
படர்பொற்கைச் செறியக்குச் சரிபப்பத் தினரே.
101. இருபக்கத் தொருபக்கத் தெறிவச்ரத் தினரே
யெர்ருபக்கத் தொளிவட்டத் தொருபொற்றட் டினரே.
102. தழைவர்க்கக் கருவெப்புத் தடிசக்ரத் தினரே
கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட்கட் சியரே.
4. தேவியைப் பாடியது
103. கவனமாவெர டீராறு கதிரும்வாரி யூடாடு
கனல்கடாவி யோரேழு கடலும்வாரு மாலால
மவனிவேவ வான்வேவ வளறுவேவ வேவாம
லயிலுநாதன் மாதேவி யகிலலோக மாதாவேஎ.
104. அனகபூமி கோலோக மருகுநேமி பாதாள
மயனிவாச மேழ்தீவு மசலமேழு சேழ்காவு
கனகலோக மேழாழி கஞலவீதி போதாத
கலகபூத வேதாள கடகமேய மாயோனே.
105. இரவையீரு மீர்வாள்கொ லெனவிடாது பாதாள
விருளைவேறு யோய்நூறி யெழிலியேழொ டேழாய
பரவையோளி வாளேறு படநடாவி மீள்சோதி
படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே.
106. நிகரவேறு வேறாய நிலவுவிசு பேரார
நிபுடமாலை மாலயாறு நிமிரவீழ்வ போல்வீழ
மகரவேறு மீராளி மதுகையேறு மாறாடி
வதனபாக மேய்வாகு வலையமோது காதாளே.
107. தமரநூபு ராதார சரணியார ணாகாரி
தருணவாணி லாவீசு சடிலமோலி மாகாளி
யமரர்வாழ்வு வாழ்வாக வவுணர்வாழ்வு பாழாக
வருளுமோகி னீயாகி யமுதபான மீவானே.
108. எறியவோவி மாவாத மிரியவீசி யூடாடு
மெழிலிபீறி மாமேரு விடையைநூறி யோராழி
முறியமோதி வான்யாறு முழுதுமாறி யாகாய
முடியவேறி மேலாய முகடுசாடு தாளாளே.
109. வழியுநீறு வேறார மகிழுமோரொ ரோர்கூறு
மறமறாத வாணாள மடமறாத மானாள
வொழியுமோரொ ரோர்கூறு மொருவராகி நேராகி
யுடையகேள்வ ரோர்பாதி யுருகுகாதல் கூர்வாளே.
110. அதரசோதி மீதாடு குமுதவாச வாயார
வமிழ்தமாக நேராக வகிலலோக மீரேழு
முதரசோபி தாநாபி கமலவாயி னான்மீள
வுமிழுநீலி மேலாய வுவணவூர்தி யூர்வாளே.
111. வலையவாள ராமீது துயில்விடாத தான்மான
மதியமூர்ச டாமோலி மகிணர்தாமு மீதோடி
யலையுமேக லாபார கடிதடாக மாநாக
வமளியேறி னாராக வழகுகூர நேர்வாளே.
112. போர்ப்பன தீம்புகையோ புராதனரோ மப்புகையே
ஆர்ப்பான பல்லியமோ வந்தரதுந் துமியுமே.
113. பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே
விரவுவன பூதமோ விண்முதலைம் பூதமே.
114. ஆடுவன தோகையோ வயனுர்தி யன்னமுமே
பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே.
115. வனமலரோ பூமாரி வானக்கற் பகமலரே
கனசலமோ வபிடேகங் கடவுட்கங் காசலமே.
116. வயங்குகுழை மதியமோ வாளிரவி மண்டலமே
தயங்குகவுத் துவமோபூண் டனிச்சோதிச் சக்கரமே.
117. சார்த்துவன கோசிகமோ தன்பேழைத் தமனியமே
ஆர்த்துவன வறுசுவையோ வந்தமிலா வமுதமுமே.
118. கொடும்புரிசை நேமியோ கொற்றப்போர் நேமியே
இடுந்திலக மான்மதமோ வெண்டிசைய மான்மதமே.
119. அடிச்சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே
முடிச்சூட்டு முல்லையோ முதற் கற்பு முல்லையே.
120. எல்லைநான் மறைபரவு மிறைமகளைச் சிறிதுரைத்தாந்
தொல்லைநா யகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம்.
121. வாயெழப் புகைந்துகீழ் வயிற்றெரிந்து மண்டுசெந்
தீயெழுக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே
122. புரண்டுபோத வேரிவாரி போனபோன பூமிபுக்
கிரண்டுபோது முண்டுமுண்டி லாதபோ லிருப்பவே.
123. பாதியிற் பிலந்துழாவு பாறுகால மாறுகால்
ஓதியிற் செவித்துனைத் தினைக்குமுத் துடுப்பவே.
124. எழுங்கடற் பகைப்பிணத்தும் ரவிதிகந்த வெல்லைபோய்
விழுங்கடற் பகைப்பிணத்து மோடியுண்டு மீள்பவளே.
125. எயிறிரண்டு தட்டினு டுமிவ்விரண்டெ ழுந்துபாழ்
வயிறறிந்து தாழ்செறித்து வைத்தவொத்த வாயவே.
126. வயங்களிற் புறப்பொருப்பில் வேரிவாரி வந்துதிக்
கயங்களிற் கடாமிடா மடுத்தெடுத்த கையவே.
வேறு
127. உலரெலும்பொ டொசிநரம்பி னுடலினின்ற குடலைபோன்
றலர்சிலம்பி யிழைசுழன்று வெளியடங்க வணிவவே.
வேறு
128. குறிக்குமெக் கொழுக்களுக்கு மிக்கடிக்கொ டுக்கொடுத்
தெறிக்குமெப் பிறைக்குமெட்டி ரட்டிநெட்டெ யிற்றவே.
129. கதுப்பிறக் கழுக்களிற் பழுக்களைக் கடித்துழிப்
புதுப்பிணத் திரைப்புமிக் கடிப்பொருப் பொருப்பவே.
130. புரக்குமற் புதத்துயிர்க் கிழத்திபுக் குமிழ்தமக்
கிரக்கமற் றிருப்பதற் கெடுத்துளைத் திளைப்பவே.
வேறு
131. மதிதுரந்து வரவொழிந்த மதநினைந்து சதமகன்
பதிதுரந்து படையயின்று சிறதவிந்த பசியவே.
132. கருநிறங்கொ டுருவுகொம்பு வெருவுமும்பர் கழிவிடும்
பரிபிளந்து தசைமிசைந்து சிறிதவிந்த பசியவே.
133. இருவிசும்பு வறிதியம்ப விடிவிழுந்த தெனவிழும்
பெருவிலங்க லனபுயங்க பிசிதவுண்டு பெறுபவே.
134. வாரியுண்டு மேகவிந்த்ர வாகனங்கள் வாய்விடுஞ்
சோரியுண்டு சூன்முதிர்ந்த போன்மிதந்த தோலவே.
வேறு
135. மிசைபெறாதுகுற ளானகூவிகளும்
விம்மி யுள்ளதிசை செம்மியே
திசைபெறாதுதடி யாதபாரிடமு
முடைய ளுலகுடைய செல்வியே.
6. கோயிலைப்பாடியது
136. இக்கணங்கள் வந்துசூழும் யோகயாமளத்தினாள்
மெய்க்கணங்க ளேவிரும்பு கோயில்யாம் விளம்புவாம்.
வேறு
137. கீழுமேழுநிலை மேலுமேழுநிலை கோயில்வாயிலிரு கிரியுமே
சூழுமேழ்கடலு மகழிசக்ரகிரி புரிசைகாவலொரு சூலமே.
138. பூதநாயகர் மகோதராதிகள் புரக்கவாயின்முறை புகுவார்
வேதநாயகி விமானபீடிகை யநேககோடிவட மேருவே.
ஆலமரம்
139. அப்பெரும்பழைய கோயிலூடகில லோகநாயகி யமர்ந்ததோர்
ஒப்பருங்கடவு ளாலமுண்டதனை யுள்ளவாசிறி துரைத்துமே.
வேறு
140. முடுகியபுறம்பு நீர்நலிய முகடுபடு மண்டகோளகையை
நெடுகியவரம்பி லாதபணை நிரைகொடுசு மந்தநேமியது.
141. விரிகடல்கொளுந்தி வேவவிழ வருமிகுபதங்க ராறிருவர்
எரிவிரிசுரங்க ளாறியெழ வெழுகுழையசைந்த சாகையது.
142. சதுமுகன்முடிந்த வூழியொரு சருகிலையுதிர்ந்து தூர்புனலி
னிதுமுதலவைந்து பூதமென விருநிலம்வழங்கு சோபையது.
143. இறுதியினெரிந்து பாருருக வெழுகனல்கரிந்து போயவிய
உறுதியினைந்த சாகைதொறு மொருதனிகுளிர்ந்த நீர்மையது.
144. படியடியெறிந்து கால்பொருது பலகுலவிலங்கன் நேருவொடு
குடியடிபறிந்த நாளுமொரு குழைசலனமின்றி நீடுவது.
145. மழையெனவுகங்க ளேழெழிலி வரவரவிசும்பின் மாறுவது
பழையனபொதும்பி லேழுமெழுப ரவையுமடங்கு கோளினது.
146. அரிதனிதுயின்ற தோரிலையி லரனவையிருந்த நீழலது
விரிசுடர்நிவந்த சாயைமதி மிசையிடைவிளங்கு சோபையது.
147. இசையனபிலங்க நேழுமத நிடையிடைவுழுந்த வேர்விவர
மிசையனபதங்க ளேழுமதன் விடுகவடுதந்த கோடரமே.
148. உரியபலவண்ட கோடிபுகு முதரமொடனந்த கோடியுகம்
அரிதனிதுயின்ற தோரிலையி லதனதளவியம்பு வாரெவரே.
149. கடநாகத் தீருரிவை யான்விரிப்பக் கடற்றிவலைப்
படநாகப் பெரும்பாய லரிவிரிக்கும் பணையதே.
150. கோழியான் மயிலதனிற் குலமயிலி லொருமயிலே
ஆழியா னேறுவது மதனுவணத் துவணமே.
151. அயனுடைய வூர்தியத னன்னத்தோ ரன்னமே
பயனுடைய கின்னரமும் மதிற்பிறந்த பறவையே.
152. பைந்தாக மிருநான்கு மதன்வேரிற் பயில்வனவே
கைந்நாக கிருநான்கு மதன்வீழிற் கட்டுபவே.
தேவியின் அமளியான அரவரசு
153. அப்படிய தொருகடவு ளாலின்கீ ழமளியா
யெப்படியுந் தனிதாங்கு மாவரசை யியம்புவாம்.
154. மாயிரும்பயோ ததித்தொகையென
வாள்விடுந்திவா கரத்திரளென
வாயிரம்பணா மிதப்பரவைய
தாயிரஞ்சிகா மணிப்ரபையதே.
155. வேலைநின்றெழா வுகக்கனலென
வேகநஞ்சறா மதிப்பிளவென
மாலையும்படா விழித்திரளது
வாய்தொறுங்குவா லெயிற்றணியதே.
156. நேரியன்பதா கையிற்புலியென
நேரியன்றரா தாப்புயமென
மேருவும்பொறா வயப்பொறையது
மேருவின்பரா ரையிற்பெரியதே.
தேவியின் விற்றிருக்கை
வேறு
157. திரண்டகலை கூடிநிறை திங்கள்குடை
யாகநிழல் செய்யமுறையால்
இரண்டருகும் வாடையொடு தென்றல்குளிர்
சாமரை யிரட்டிவரவே.
158. குறிக்குமிகு பாலுமுள தீபமென வேறுசில கூறவுனவோ
எறிக்குமதி யும்பருதி யுஞ்சுடரெடுப்பன விரண்டருகுமே.
வேறு
159. எளிதளித்தன சுரர்தருத்தொகை யிரவிபுற்கிட வெழிலியுந்
தளிதளித்திரு தனுவெடுத்தன தகனமாற்றது கனமே.
160. வட்டமொத்தன வண்ணமொத்தன
மதுகையொத்தன வானில்வந்
திட்டவிற்க வீரண்டுதங்க
ளிரண்டுவிற்களு மென்னவே.
தேவியின் பஞ்சாயுதங்கள்
தண்டாயுதம்
161. பொங்குதிரிபுரம் வெந்துபொடிபட
வந்துபொருமொரு பொருநர்கைத்
தங்குமலைசிலை கொண்டபொழுதுல
கங்கள் தகைவது தண்டமே.
கட்காயுதம்.
162. தடிந்ததுரக குலங்களுரக பிலங்கள்வயிறு தழங்குமா
வடிவுந்தகுருதி படிந்துபருதிகண் மட்கவருமொரு கட்கமே.
வில்
163. எறிப்பவெறிபடை நிசிசரன்சிர மொருபதுங்கர முருபதுந்
தறிப்பவொருசரம் விடுவதுங்கடல் சுடுவதுங்குனி சாபமே.
சங்கம்
164. இகலுநிசிசர கணமுமவுணரு மிடியின்மலையென மடியவெப்
பகலும் ரவியொளி யிரியநிலவொளி விரியவருமொரு பணிலமே.
சக்கராயுதம்.
165. இருவருதயமு முருளவொளிவிடு மெனையபலரிர ணியரெனும்
ஒருவருரமிரு பிளவுபடநடு முகிரிதனதொரு திகிரியே.
தேவிதிருமேனியின் மரகசோதி.
166. அரவினமளியி னகிலபணமணி
யடையமரகத மானவோர்
இரவிவெயிலிலன் மதியுநிலவில
னிறைவியொளிவெளி யெங்குமே.
வேறு
167. கோகனக னாள்பெறு கொடுங்கனக னாகமிரு கூறுபடுகூர்
ஏகநக நாயகி யனந்தசய நத்தினி திருந்தருளியே.
வேறு
168. எறிபடை வல்லவிசயை யிசைகெழு தெய்வமகளி
ரெழுவரும் வெள்ளைமுளரி யினிதுறை செல்வமகளு
மறிகடல் வையமகளு மலர்கெழு செய்ய திருவும்
வரவிரு மெல்லவுரகன் மணியணி பள்ளியருகே.
ஆளுடைய பிள்ளையார் சமணரை வாதில் வென்ற கதை
169. வருகடை தெய்வமகளென் மருமகள் வன்னிவதுவை
மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய
தொருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி
யொளிதிக ழல்லிகமழு மொருமனை வல்லியெனவே.
170. எழுமலை கொல்லுமசனி யிளமயில் வள்ளிகணவ
னிறைமலை வில்லிபுதல்வ னிகன்மக ளையைகளிறு
கழுமல முய்யவிரவு கலியுக வெல்லைபொருத
கதைகளி லுள்ளதமணர் கழுமிசை கொள்வதிதுவே.
வேறு
171. பொய்கைசூழ்புக லிப்பெருந்தகை
பொன்னிநாடு கடந்துபோய்
வைகைசூழ்மது ராபுரித்திரு
வாலவாயை வணங்கியே
172. ஞாயில்கொண்ட மதிற்புறம்பர
சமயகோளரி நண்ணியே
கோயில்கொண்ட மடத்தைவெங்கனல்
கொண்டுகுண்டர் கொளுத்தவே.
173. திருமடத்தெரி யிட்டகுண்டர் கிடக்கவவ்வெரி தென்னனிற்
பெருமடத்தர சைச்சுடத்திரு வாய்ம்லர்ந்தது பிள்ளையே.
174. பிள்ளைகொண்ட சினத்தொடக்கனல்
சென்றுதென்னர் பிரானுயிர்
கொள்ளைகொண்டுட லங்கிளர்ந்து
கொதிப்பவந்து கொளுந்தவே.
175. யந்திரங்கள் வரைந்துகட்டி விரைந்துகுண்ட ரெடுக்குமா
மந்திரங்களின் மிக்கபேரழல் மாதிரங்களின் மண்டவே
வேறு
176. ஆலிவெந்து மந்த்ரம்வெந்தி யந்த்ரம்வெந்த மைந்ததோர்
பீலிவெந்து பாயும்வெந்து பிண்டியேற மண்டவே.
வேறு
177. ஒருவரும்பொரு வாததென்ன னிரண்டுகண்களு மொத்தபேர்
இருவரும்பெரி தஞ்சியாமினி யென்செய்வேமென வெண்ணியே.
178. விலங்கினாரிலர் வெம்மையெம்மையுமேன் முனிந்திடு வான்மிகக்
கலங்கினானிறை பிள்ளையாரை யழைத்துமே லிதுகாலமே.
179. என்றுபோயதி காரி வைதிக ராகசிங்க மிருந்துழிச்
சென்றுமுன்னர் விழுந்தபின்ன ரெழுந்துதங்குறை செப்புமே.
180. கச்சைக்கிரி நேரியர் பாவைதிருக்
காவற்கிறை வாவிது காலமெனக்
கொச்சைப்பெரு மானடி தன்முடியிற்
கொண்டானதி காரி குலச்சிறையே.
181. உவரிப்பரு முத்த நிரைத்ததிருப்
பள்ளிச்சிவி கைப்புடை யும்பர்வரக்
கவரிச்சிறு தென்ற லசைப்பமிசைக்
கொற்றக்குடை வந்து கவிப்பவுமே.
182. மேகத்தொரு பந்த ரெடுத்துடுவாம்
வெண்முத்த மொழுக்கி மினற்கொடியால்
மாகத்து நிரைத்து மழைச்சிலையால்
வழிதோரண மிட்டனன் வாசவனே.
183. சதுரா னனனுஞ் சக்ரா யுதனுஞ்
சந்த்ரா தவரு மிந்த்ரா தியரும்
மதுரா புரிவா தறிவா மெனமேல்
வரவந் தனன் வை திகவா ரணமே.
வேறு
184. ஆலயுங்கடி திற்புலர்ந்து கலந்துகுண்டர் துடைக்குமப்
பீலியுஞ் சுறு நாறியேறி யெரிந்துபோன பிரம்புமே.
வேறு
185. பொறைசூழ்வரை யிற்புலி யேறெழுதும்
பொன்மேரு வரைப்பெரு மான்மகளார்
மறைசூழ்திரு வெள்ளி மலைப்பெருமான்
மகனாரடி வந்து வணங்கியுமே.
186. மன்காதலி னுய்வதிவ் வையமெலா
மலையாண்முலை யாரமு துண்டவனே
என்காதல னெம்பெரு மானிவனுக்
கிதுவோதக வென்றன னென்றலுமே.
187. மாமான்மர பிற்பகன்மண்டிலமொத்
தெரிமண்டின னென்னு மகீபதிநின்
கோமான்மர பிற்சசி மண்டிலநேர்
குளிரும்படி காணுதி கோமளமே.
188. என்னக்களி கூரு மிளங்கொடியோ
டெதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்
தென்னற்கரு கேயொரு பீடிகையிட்
டினிதேறி யிருந்தருள் செய்கெனவே.
189. ஏறிச்செழி யற்கரு கிட்டதிருப்
பள்ளித்தவி சின்க ணிருந்தருளச்
சீறிச்சமண் மூகர் குலச்சிறையார்
செவிவேவன சிற்சில செப்புவரே.
190. வருவானொரு சோழிய வைதிகனாம்
வந்தாலிவன் மாளிகை வாயிறனில்
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ
மீளச்செழி யன்றிரு மேனியையே.
191. தண்ணார்மதி யக்கவி கைச்செழியன்
றனிமந்திரி காண்முனி புங்கவரோ
ரெண்ணாயிர வர்க்கும் விடாதவெதுப்
பிவனால்விடு மென்ப திழித்தகவே.
192. என்றாரவ ரென்றலு மேகெடுவீ
ரெரியாலர வாலிடி யான்முடியச்
சென்றார்பவ மேழினு மிம்படியே
செல்வாரிவர் முன்பு செயிர்த்தவரே.
193. நாணீரறி யீருறி வல்லமணீர்
மதுரேசனை யெங்குல நாயகனைக்
காணீரிவர் தந்திரு நீறிடவே
முகிலூர்தி பெறாத கவின்பெறவே.
194. ஏயேயிம வான்மக ளார்மகனே
யெந்தாய் சித்தாகுல வேரரியுஞ்
சேயேவர சைவ சிகாமணியே
திருநீறினி யிட்டருள் செய்கெனவே.
195. எப்புத்தரொ டெவ்வம ணுங்களைவார்
திருநீறிவ னெற்றியி லிட்டலுமே
வெப்புத்தடை பட்டது பட்டளவே
வேவாத வுடம்புடை மினவனே.
196. உய்யாவுண ராவிழி யாவருகே
சரியாவொரு கேசரி யாசனமேல்
வையாவதி காரிக ளும்பெருமாண்
மகளாரும் வணங்க வணங்கினனே.
197. சுடுகின்ற மருங்கிரு பாலுமிருந்
தனைவேமும் விடாது தொடத்தொடவே
விடுகின்ற வெதுப்பை வெறும்பொடியால்
விடுவித்தன னாமிவன் வேதியனே.
198. யாம்யாது மிதற்கு முயன்றிலமோ
வெம்மந்த்ரமும் யந்த்ரமு மில்லைகொலோ
கோமானிவ னைப்பணி கின்றதெனீ
றணிகின்றதெ னென்று கொதித்தெழவே.
199. கெடுவீர் கெடுவீ ரிவைசொல் லுவதே
கேட்டே னடிகள் விவர்கே வலரோ
விடுவீர் விடுவீ ரினியென் னெதிர்நீர்
வெங்கோ பமுமுங்கள்விவா தமுமே.
200. நீர்வந்து தொடத்தொட வெந்துருகா
நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்
கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங்
காடொத்தனென் யானிவர் கைப்படவே.
201. ஒருநீயொரு மாணி யிடும்பொடியா
லுய்ந்தேனுயி ரென்ப துரைத்தனையேல்
வருநீரினு மிட்டு நெருப்பினுமிட்
டறிவோமிரு மந்த்ரமும் யந்த்ரமுமே.
202. எரியாதன தீயி லிடிற்கொடுபோ
யெறிவைகையி லேயிடில் வைகையுடன்
சரியாதன வேடுடை யார்தவமே
தவமாவது மேலிது சாதனமே.
203. வேமேடுடை யாரையும் வைகையிலே
விட்டாலதன் மீது மிதந்தொழுகிப்
போமேடுடை யாரையு நீகழுவிற்
புகுவிப்பது தெக்கண பூபதியே.
204. என்னக்கடி தெண்பெரு வெற்பும்விடா
வெண்ணாயிர மூகரு மிப்படியே
பன்னப்பெரி தஞ்சிய வச்சமுடன்
பகலோன்மர பிற்பெறு பைந்தொடியே.
205. மலைகொண்டெழு வார்கடல் கொண்டெழுவார்
மிசைவந்து சிலாவரு டஞ்சொரிவார்
நிலைகொண்டெழு வார்கொலை கொண்டெழுதற்
கிவரிற்பிறர் யாவர் நிசாசரரே.
206. குழைதந்தனை செந்தமிழ் மண்டலமுங்
கொடிமாஅக ருங்குன் றங்களிகூர்
மழைதந்தென வந்தனை வாழியினிப்
பிரமாபுர மேற மறித்தருளே.
207. கேள்பற்றி யமண்கெடு வாரொடுபோர்
கெட்டேனடிகே ளொட்டே னெனவே
தாள்பற்றி வணங்கி வணங்கிவிடாள்
தவனன்குல வல்லி தடுத்தலுமே.
208. காதிற் கனகக்குழை நின்றிலகக்
கமழுங்குழன் முன்பு கலந்தசையச்
சோதித்திரு நெற்றியில் நீறிலகச்
சுட்டிக்கலன் மீது துலங்கவுமே.
209. கனலெங்கன லக்கன லால்விளையுங்
கார்காரவை வந்து தருங்கலுழிப்
புனலெம்புனல் யாமிடு மேடுசுடா
போகாதிரி யக்கொடு போமெனவே.
210. நீரோடு நெருப்பிவை நும்மனவே
யிதுநிச்சய மாகிலு நின்னெதிரிப்
பாரோடு விசும்பு பனிப்பவினிப்
பணிகொள்ளுதும் யாமிது பாரெனவே.
211. என்னுஞ்சமண் மூகருநான் மாறையோ
ரேறுந்தமிழ் நாடனும் ரகுமரபிற்
பொன்னும்பெரு நம்பி குலச்சிறையும்
போய்வைகையில் வாது களம்புகவே.
212. கனலிற்புகு மேடிறை கண்ணின்மதன்
கையம்பென வெந்தன கையரிடப்
புனலிற்புகு மேடிறை வைகையுடன்
போகவிடி னுங்கடல் புக்கனவே.
213. பொற்பங்கன லிற்புகு மேடுறவும்
புனலிற்புகு மேடெதிர் போகவுமேழ்
வெற்பும்பிள வோட வொலித்தனவால்
வேதங்களு மைம் பூ தங்களுமே.
214. மேனின்ற சுராசுர ரார்த்தனரே
திருமாலும் விருஞ்சனு மார்த்தனரே
பானின்ற சராசர மார்த்தனவே
பதினாஉல கங்களு மார்த்தனவே.
215. வாராயிவ ராகம துல்லபமும்
வருமெங்கன் சிவாகம வல்லபமும்
பாராய்வழு தீயிது பாருருவத்
திருவிக்ரம மின்று படும்படியே.
216. ஒருகூன்மிசை வைத்த திருக்கைபுறத்
தொருகூன்மிசை வைத்தனர் வைத்தலுமே
இருகூனு நிமிர்த்தன தென்னவர்கோன்
முதுகுந்தட மார்பு மிடம்பெறவே.
217. ஆதிச்செழி யற்கொரு கைம்மலர்பொன்
னடையப்புக லிக்கிறை வெப்பழலால்
வேதிக்க வுடம்பொரு பொன்மயமா
யொளிவிட்டு விளங்கினன் மீனவனே.
218. வேதப் பகைவர் தம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
கேதப் படுமெண் பெருங்குன்றத்
தெல்லா வசோகு மெறிகெனவே.
219. மண்ணா வுடம்பு தங்குருதி
மண்ணக் கழுவின் மிசைவைத்தார்
எண்ணா யிரவர்க் கெளியரோ
நாற்பத் தெண்ணா யிரவரே.
220. கொன்று பிள்ளை யூர்புக்கார்
குண்டர்நரகக் குழிபுக்கார்
என்று சொல்லி யகிலகலா
வல்லி யிறைஞ்சி யிருத்தலுமே.
221. தெம்முன் சென்று நம்பிள்ளை
செய்த தொருபோர் செப்பினையால்
நம்முன் தவள முளரிமிசை
யிருக்கப் பெறுதி நாமகளே.
பேய் முறைப்பாடு
222. என்றிறைவி நாமகட்குத் திருவுள்ளஞ்
செய்யக் கேட்டிருந்த பேயில்
ஒன்றிறையுங் கூசாதே யுறுபசிநோய்
விண்ணப்பஞ் செய்ய லுற்றே.
வேறு
223. ஒற்றைத் தலைவெட் டுண்டதுகொண்
டோடிச் சென்றான் சென்றாலென்
மற்றைத் தலையுந் தானுமாய்
வணங்கி நின்றான் மலரோனே.
224. உலகிற் பெரிய கபாலத்தே
யொருவ ருதிர மேற்றூற்றி
விலகிற் பிழையார் சூலத்தே கொண்டார்
கணவர் வெற்றுடலே.
225. கூறாக் குதற்கு வாளிலரோ குத்தி தூக்க வேலிலரோ
பழம்படியே தசமுகனை விட்டார்தம் பாட்டறிவே.
வேறு
226. குழம்படியேம் புகவிழுந்து பொருப்படியிற்கொள்ளாமே
பழம்படியே தசமுகனை விடட்டார்தம் பாட்டறிவே.
227. வைய முண்ணோங் கடன்மடோ மற்றும் புவன முற்றும்போய்
ஐய முண்ணோங் கடனஞ்சு குடியோமுங்க ளடியோமே.
வேறு
228. கார்மலையச் சந்தனமும் வடவிமயக் காரகிலும்
போர்மலையக் கடவதொரு பிள்ளைக்குப் போக்குதியே.
229. எப்பயறு மெக்கனியு மெக்கிழங்கு மெத்தேனுந்
தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே.
230. மிக்கள்ளுங் கறியநந்த மிடாப்பலவுந் தடாப்பலவு
மெக்கள்ளு மொருபிள்ளை மடுத்தாட வெடுத்துதியே.
231. சூரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநான்
ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிறைத்தனம்.
232. அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவ ரற்றநாள்
விசும்புதூர விழும்பிணங்க ணிணங்களூற மிசைந்தனம்.
233. அறந்தவாமல யப்பொருப்பி லகத்தியற்கமு தாகநீர்
வறந்தவாரிதி யேழின்மீனு மெடுத்துவாயின் மடுத்தனம்.
வேறு
234. மிடையப்போய் நரம்புடலும் வெறுந்தலையே தலையாகி
அடையப்போ யடியோமு மாண்டலையா யற்றனமே.
235. வற்றியே யுடம்பிழிந்தோ மற்றொருமா னிடவுடம்பு
பற்றியே நின்றடியோம் பணிசெய்யப் பணிவாழி.
236. வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்ட காபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே.
237. கட்டரணம் வல்லவனை நடைகொண்டார் காவிரிப்பூம்
பட்டினமும் பாடாதார் பசியன்ன பசியினமே.
பேய்களின் கனாக்காட்சி
வேறு
238. விரைந்திருந்து தின்பதற்கு முண்பதற்கு மேமிகக்
கரைந்திருந்து கண்டுயின்று காணுநற்க னாவமே.
239. கடன்முகந்து தனியெழுந்த முகில்விழுந்த கனவுகண்
டடன்முகந்த திகிரிமொய்ம்ப னமளிமண்டி யறிதுமே.
240. கடைபயின்ற பவனமண்ட முகடுகொண்ட கனவொடும்
புடைபெயர்ந்து தனிவிரிஞ்சன் முளரிசென்று புகுதுமே.
வேறு
241. என்றுபேயடைய நின்றுபூசலிட
விங்குநின்றுபடை போனபேய்
ஒன்றுபேருவகை சென்று கூறுகெள
வோடிமோடிகழல் சூடியே.
242. இரைத்தகூர்பசி யுழந்தபேய்களினி
யென்பின்வாருமென முன்புசென்
றுரைத்ததோவதுவு மில்லையோதிரிய
யாகசாலைபுக வோடவே.
243. ஓடுகின்றதனை நின்றபேய்தொடர
வோடியோடியுளை யப்பிடித்
தாடுகின்றகொடி மாடமுன்றில்விட
வையைகண்டருளி யதனையே.
244. அஞ்சலென்றுதிரு வாய்மலர்ந்தயனு
மம்பரத்தவனு மும்பரும்
எஞ்சலின்றியுட னின்றவிந்தபடி
யெம்படைக்குரைசெய் கென்னவே.
8. காளிக்குக் கூளி கூறியது
245. பாவியார்சிறு தக்கனாரொரு பக்கமாய பரம்பரன்
தேவியான்முனி வுண்டுபட்டது கேண்மினென்றது செப்புமே.
தக்கன் யாகம்
246. எல்லைநாயக ராசராச புரேசரீச ரிதற்கெனுந் [யே
தொல்லைநான்மறை நிற்கமற்றொரு கேள்விவேள்வி தொடங்கி
247. கங்கைமாநதி வீழ்புறத்தது கனகலத்தொரு கனனிழைத்
தங்கண்வானவர் வருகவென்றனன் முனிவர்தன்படை யாகவே.
248. அழைத்தவானவர் பயணமென்றலு
மவுணர்நின்றில ராசையால்
இழைத்தயாக விபாகமுற்பட
வுண்ணலாமென வெண்ணியே.
தக்கன் யாகத்திற்குத் தேவர் முதலியோர் வருகை
திக்குப் பாலகர்.
249. பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன்
சேவகாத்கள் போலநாலிரு வேழமேறினர் சேரவே.
துவாதசாதித்தர்
250. திங்கள்வெண்குடை மேலெறிப்ப வருக்கர்பன்னிரு தேரினுந்
தங்கள்வெங்கதிர் நடுவெறித்தன ருடுவெறிப்பொளி தவிரவே.
ஏகாதசருத்திரர்
251. ஏறுகளிறென வேறியெரிவிழ யிசர்பதினொரு தேசருங்
கூறுபடுபிறை யாறுசுழல்சடை யோடுமுடுகினர் கூடவே.
அச்சுவினி தேவர்கள்.
252. விண்மருங்கமரர் தம்முடன்பழகி வேள்வியாவுதி யுண்ணவோ
புண்மருந்திட வெண்ணியோகடி தாயுள்வேதியர் போதவே.
மருத்துக்கள் முதலியோர்
253. மருக்கணங்களும் விசுவதேவரு மற்றையட்ட வசுக்களுங்
குருக்களும்பிற ருங்கடாவு விமானகோடிகள் கூடவே.
இந்திரன்
254. சோதிநேமியும் வச்ரமாலையு மருளிநின்று துளும்பவே
யாதுகற்பகம் யாதுமேரு வெனத்தெளிந்திலர் யாதுமே.
255. வேய்திரக்கட லேழுமம்புத மேழுமையல் விளைக்கவெம்
மாதிரக்களி றெட்டுமாதி விலங்கலெட்டு மயங்கவே.
256. குரத்துரங்கமும் வெய்யகாலு மனத்தின்மையல் கொளுத்தவே
அரக்கர்வெள்ளமு முள்லதீயு நிகர்ப்பயாரு மயர்ப்பவே.
257. மீதுபோநதி யும்பதாகையும் வேறுபட்டில விண்ணிலே
ஆதபத்ரமு மண்டகோளமு மொத்துமம்ம ரளிக்கவே.
258. விட்டகார்முகில் யாவையாவர் சுரேசரென்று வியக்கவே
இட்டகார்முகம் யாவையாவை யெடுத்தகார்முக மென்னவே.
259. அலங்கையிற்படை யுடையநம்பியொ
டதிர் பட்யோததி யனையதோர்
இலங்கெயிற்றயி ராபதத்தொடு
கடிதுவந்தன னிந்திரன்.
பிரமதேவர் வருகை.
260. மைந்தரான சுரேசரோடசு ரேசர்முன்வர மதிமருண்
டந்தணாளனு மலரில்வந்தனன் முனிவர்தன்புடை யாகவே.
திருமால்வருகை.
261. ஆதிநான்முக னொடுசுராசுரர் வரவுசொல்லி யமைந்ததோ
சோதிநேமி வலத்தினானொரு பயணநின்றது சொல்லுவாம்.
குதிரைகள்
வேறு
262. மரகத மேயென லாய வனப்பின
சூரகத மேபதி னாயிர கோடியே.
263. ஏறிய தாமிவை போகில மெனவே
கூறிய கற்கிக னேசத கோடியே.
264. கவன முவப்பன கரிய வனப்பின
பவனம் வியப்பன பற்பல கோடியே.
265. தரங்க நிரைத்தன தரள நிரைத்தன
துரங்க மெனைப்பல கோடி தொகுத்தே.
266. வெய்யன செக்கர் விசும்பு வெளுக்கச்
செய்யன வாயீர கோடி திரண்டே.
267. பைத்துர கங்கள் விசித்த படைப்பரி
கைத்துர கங்கள் கலந்திடை யிட்டே.
தேர்கள்
வேறு
268. திரையைத்தோய்வன நாலிரு
திசையைச் சூழ்வன சுழ்வரு
சிலையைப்போல்வன தானவர்
திரனைப்போழ்வன வேழ்குல
வரையைப்பாய்வன சூன்முதிர்
மழையைக்கீள்வன கால்கொடு
மதியைக்காய்வன பேரொளி
வயிரத்தேர்சத கோடியே.
269. பவனப்போர்விர வாதன
பருவத்தீயுறை யாதன
பரவைக்கால்குளி யாதன
பறியப்பேரிடி போல்வன
கவனத்தாலெழு வாரிதி
கழியப்பாய்பரி மாவின
கமலத்தோன்முடி தாழ்வன
கனகத்தேர்சத கோடியே.
270. கடையிற்காயெரி போல்விரி
கனலிக்கேகுளிர் கூர்வன
கதுவிச்சீதக லாமதி
கருகக்காயுநி லாவின
சடையிற்பாய்புனல் வானவர்
தறுகட்டீயொடு மூள்வன
தமரச்சேனைய றாதன
தரனத்தேர்சத கோடியே.
யானைகள்
வேறு
271. என்று மாதிர மெட்டினுஞ் சென்றுசென்
றென்வெட் டாவண்டம் யாவுஞ் சுமப்பன
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய
சேடன் றெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.
272. விலங்க லேழிற் றடத்துங் குலநதி
வேலை யேழினு நீர்க்கு விடுவன
பொலங்கன் மேரு கிரிச்சிக ரந்தொறும்
போக விட்டசிந் தூரப் பொடியன.
273. மழவிற் பாற்கடல் மாந்தி வளர்ந்தன
மதத்தி லக்கடற் பான்முடை மாற்றின
முழவிற் பூரித்த கும்ப குடந்தொறு
மூரி யேழ்கட லுந்தரு மூக்கின.
274. ஓடு நான்கு பரூஉத்தா ளுடையன
வுருத்த னித்தனி பாற்கட லொப்பன
கோடு நான்கின செக்கர் முகத்தின
குஞ்ச ரம்பதி னாயிர கோடியே.
வீரர்கள்
275. அப்பெ ரும்புர வித்தொகை மேலுநீ
டாட கக்கொடி யாடுபொற் றேரினும்
எப்பெ ருங்களிற் றீட்டத்தின் மேலினு
மெண்ணில் கோடிநா ராயண ரேறவே.
276. முகடு விண்ட பழவண்ட கோளமு
முன்னை மேருவு மிட்டுருக் கிப்பெருந்
தகடு செய்துகொண் டொப்பமு மிட்டன
சாத்தும் பீதக வாடை தயங்கவே.
277. பொங்க லங்கல் வருண னுரம்புகப்
பொருப்பு மத்தந் திரித்த பொழுதெழுஞ்
செங்க லங்கல் பரந்தெனப் பாற்கடல்
சேப்ப வந்த கவுத்தவஞ் சேர்த்தியே.
278. அரிசெய் நாட்டத் தரவிந்த வாணுத
லம்ம ணிக்கெதி ராகவந் தாகத்தில்
எரிசெய் தாமரைப் பூவிட் டிலையிலே
யிருந்த தென்ன வெதிர்வீற் றிருப்பவே.
279. காலை சூழ்செங் கதிர்முத லாயின
கமலக் காடன்ன கண்ணன் கமழ்துழாய்
மாலை சூழ்முடி சூழ்வரு தற்கொளி
மழுங்கி மேரு கிரிசூழ் வருவதே.
280. நதிக்குப் போத வொழுகுமுத் தாரமு
நகைசெய் வச்சிர நாயக மாலையு
மதிக்குப் புன்மறு வாய்த்தெனத் தன்றிரு
மரக தப்பெருஞ் சோதிமெய் வாய்ப்பவே.
281. அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணு
மாதிக் காதல்கூ ராயிரம் பேரிதழ்
உந்திச் செந்தனித் தாமரை நாண்மல
ரூடி ருந்த குருசிலோ டோங்கவே.
282. திறத்து மாலைத் திருமுடிப் பக்கமே
சென்ற கன்ற பணங்களுஞ் சேடனும்
புறத்து மாயிரம் வெள்ளித ழாலொரு
புண்ட ரீகமு மண்ணலும் போலவே.
283. பெயர்த்த தோரடித் தாமரைத் தாள்விடப்
பெரும்பொற் கோளகை பண்டு பிளந்ததற்
குயர்த்த தோர்வெள்ளி யண்ட கபாலமொத்
தொருத னிக்கொற்ற வெண்குடை யோங்கவே.
284. திரண்டு வந்த வராமிர்த சீகரஞ்
சிதற வீசித் திருப்பாற் கடற்றிரை
இரண்டு வந்தன வெங்கும் விடாவென
விரும ருங்குங் கவரி யிரட்டவே.
285. வாளும் வில்லுந் திகிரியுந் தண்டமும்
வளையு மென்ற கிளைபுறஞ் சூழ்வர
ஆளு மைம்படை யும்புடை சூழவந்
தம்ப ரப்பரப் பெங்கு மடைப்பவே.
286. வயங்கு மீருகு வண்ணக் கலுழன்மேல்
வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன்
இயங்கு மேரு கிரிச்சிக ர்த்திலோ
ரிந்த்ர நீல கிரிபோன் றிருப்பவே.
உமாதேவியார் செயல்
வேறு
287. இப்பரிசு வேள்விபுரி தாதைசெய லெல்லாம்
ஒப்பரிய நாயகி யுணர்ந்தன ளுணர்த்தே.
288. எந்தைபுரி வேள்வியிடை யானும்விடை கொள்ளத்
தந்தருளு கென்றனன் பணிந்திறைவர் தாளே.
289. விண்ணவர்கள் மேலுமயன் மேலுமரி மேலுங்
கண்ணுதன் முதற்கடவு ளுங்கருணை வைத்தே.
290. அழைத்தில னதற்கல்வ தென்கொலென வையன்
பிழைத்தன பொறுத்தருளு கென்றனன் பெயர்த்தே.
291. என்றலு முகிழ்த்தகுறு முறுவலொடும் ரசதக்
குன்றவர் கெடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.
292. பங்கனக லத்திறைவி வேள்விபழு தாகத்
தங்கனக லத்தமர்செய் தாதைமனை புக்கே.
293. காதலனை விட்டவ னெழுந்தருள வுங்கண்
டேதில ரெனத்தம ரிருத்தன ரிருத்தே.
294. தன்னையிகழ் தாதையொடு தங்கைய ரொடுந்தன்
அன்னையை முனிந்துலகி னன்னையருள் செய்வாள்.
வேறு
295. பின்னோர் பெறுங்கண் பெறேஎன்
என்னோ விவன்பட்ட தின்றே.
296. இழைப்பா யிழைப்பா யினியாகம்
பிழைப்பாய் பிழைப்பாய் பிதாவே.
297. யாயுங் கொடியேற் கிரங்காய்
நீயுங் கெடவோ நினைப்பே.
298. எங்கை மீரே னென்கிலீர்
நங்கைமீ ரீதோ நலனே.
299. எம்படைப்புத் தானும் யாயுங்
கும்பிடப் போலுங் குறிப்பே.
300. தந்தையார் தாயார் தலைவருக்
கெந்தையார் யாயா ரெமக்கே.
301. எனக்கு மெவற்கு மிறைவன்
தனக்கு மெவனோ தவறே.
302. இரையாசை யால்வந்த யஞ்ஞா
உரையா யுறுமோநின் னுணே.
303. வான்வந்த மண்வந்த வேள்விக்
கியான்வந்த வெளிவந்த வாறே.
304. தீக்குப் பிறந்தவில் லென்னும்
வேய்க்குச் சிறப்பென்கொல் வேறே.
305. இவ்வா றுரைத்திங்கு நின்றுஞ்
செவ்வாய் மடப்பாவை சென்றே.
306. விற்சாரு மேருப் பொருப்பின்
பொற்சரால் சாரப் புகவே.
வேறு
307. விதிநன்கமைத்து வழிபாடுசெய்து மடவாயமாகி மிடையும்
பதினெண்கணத்து மடவாருமன்னை முனிவாறுமாறு பகர்வார்.
வேறு
308. விழிவழிகருணைப் பச்சைவிளக்கே மின்னேநின்
வழிவழியடியே நீரரமகளி ரோம்யாமே.
309. இது திருமலையிது திருவடிமலர்தோய் மலர்வாவி
இதுதுறைவருமிவ டிருமகளிவள்பார் மகள்பாரே.
310. மேனிற்பன வுலகம்பொதி வெள்ளம்பொதி கள்ளச்
சேனிற்பன விடுநீர்புனை தெண்ணீர்படு சுனையே.
311. அடையப் பில நதிகீழ்விழ வண்டத்தடி யிடைபோய்
உடையப்புடை பெயர்வெள்ள முடைத்திக்குளிர் தடமே.
312. அலரோடளி தோயாதன விவ்வாவி யணங்கே
மலரோனுல கடையப்புடை பெயர்கார்களின் வைப்பே.
313. மண்முழுவது மேல்வான்முழு வதுங்கொண்டது போல
வெண்மதிதின பதிதாரகை விழவெழுசா யையதே.
314. நடுவேவரு நானாவித ரத்னங்களி னான்மேல்
உடுவேய்தரு ககனாகர ரூரொத்துள வொளியே.
315. அந்திப்போ தனையானுட னாடுந்திரு வேநின்
னுந்திப்போ திவ்வவியி னூடேயொரு மலரே.
316. படைக்குந்திரி புவனம்பின் பாழாக வெழுந்தங்
குடைக்கும்பெரு வெள்ளங்களி னுற்பத்திய தீதே.
317. இவ்வாவியி லிவை செங்குவ ளைகளேயிவை யிவைநின்
மைவார்திரு நயனங்களின் வலிபட்டன மிகவே.
318. நிரையேறிய குமுதங்களில் வெள்ளென்பன விவைநின்
விரையேறிய திருவாய்மலர் மீதூர்வன வுறவே.
319. வேதங்கவர் கிளவித்திரு மின்னேவிரை கெழுநின்
பாதங்கவர் செந்தாமரை வெண்டாமரை பண்டே.
320. குளிப்பாரில ரஞ்சாதிது கொண்டோதி முடிக்கட்
டெளிப்பார்கலை மகள்பார்மக டிருவென்பவ ரிவரே.
321. அலம்வந்தன வேதங்க ளரற்றத்திரு மலையே
வலம்வந்தனண் மழுவார்திரு நெடுமங்கல மகளே.
தேவி கைலைக்குச் செல்லுதல்.
322. என்றென்று வணங்கி வணங்கிவிடா
தெல்லாரு மிரப்ப விரப்பவதற்
கொன்றுந்தணி வின்றி விரைந்துபிரா
னுறைகோநகர் புக்கன லொண்ணுதலே.
தேவி விண்ணப்பஞ்செய்தல்
323. புக்குப்பெரு மானடி சேவடியிற்
பொன்மாமலர் கொண்டு புனைந்துபொலஞ்
செக்கர்ச்சடை யானெதிர் நின்றருளிச்
செய்தாளடை யத்தமர் செய்தனவே.
தேவியின் சினம்
324. தாய்தந்தை யெனத்தடை செய்வளினித்
தானேயென வேள்வி தகர்ப்பதுமேல்
நாதன்றிரு வுள்ள மெடுத்திலன்மற்
றதுகண்டு முனிந்தன ணாயகியே.
325. வேலெடுத்தில ரம்புதொட்டிலர் முயலகன்பெரு வெரிந்மிசைக்
காலெடுத்தில ரகிலமுஞ்சுடு கையெடுத்தில ரையரே.
326. விழித்ததில்லை நுதற்றிருக்கண் மிடற்றிலாலமு மேலெழக்
கொழித்ததில்லை யிருந்தவாவிது வென்றுநாயகி கூசியே.
தேவி பிரிந்துசெல்லல்.
327. கரந்தபாகமு நின்றபாகமும் வேறுகொண்டமை காதலாள்
புரந்தபாகமு மவற்குவிட்டிம யம்புகத்தனி போகவே.
சிவபெருமானுடைய சினம்.
328. விட்டபாகம் வலிந்துகண்டனர் வேறுகண்டிலர் மெய்ப்படப்
பட்டபாக மிரண்டுமங்கள ரில்லையன்று படாதவே.
329. இத்தனாடவி முன்சிவக்க வெரிந்தவொத்த திருண்டதண்
சந்தனாடவி வேறுபட்டது தம்மலைக்குளிர் சாரலே.
330. பைத்தபூணு முயிர்ப்பழன்றன பண்டையுண்டியு மவ்வழிக்
கைத்ததூழியி லாடுமஞ்சன முங்கிளர்ந்து கனன்றதே.
331. மதியுமன்றொரு தீவிளைந்து வளைந்துகொண்டது கங்கைமா
நதியும்வீசிய சீகரங்களின் வந்துவந்து நலித்ததே.
332. சூடுமஞ்சன வாறுசுட்டது கண்ணிசுட்டது பண்டுதாம்
ஆடுமஞ்சன முங்கொதித்த திருப்பரோதனி பையரே.
வீரபத்திரதேவர் தோற்றம்.
333. அன்றுவானவ ருய்யவையர் மிடற்றடக்கிய வாலமே [வே
சென்றுவானவ ருயிர்கொளத்திரு வுள்ளம்வைத்தமை தெரிய
334. காலைநெற்றியி னகிலமுஞ்சுடு கனலிகுறைபட விறைவர்தம்
மேலைநெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே.
சிவபெருமான் கட்டளை
335. நின்றவீரனை மாமன்வேள்வி தகர்க்கவென்று நெடுஞ்சிலைக்
குன்றவீரர் பணித்தலும்பணி யாமல்வந்தன கூளியே.
வீரபத்திரதேவர் புறப்பாடு
336. திரண்டபூத பசாசமாயிர கோடிகோடி திறத்தவாய்
இரண்டுபாலு முடன்செலத்திரு மலைவலஞ்செய் திறைஞ்சியே.
337. உலகு மூழுயுங் கொண்ட மைந்ததோர்
இலகு வைதிகத் தேரி லேறியே.
338. மாக சந்த்ரமண் டலமழுங்கநின்
றேக சந்த்ரமண் டலமெறிப்பவே.
339. மழைத்த தென்றலால் வாடையால்வகுத்
திழைத்த திவ்யசா மரையிரட்டவே.
340. கொள்ளையிற்படுங் குலவராகமான்
வெள்ளெயிற்றுமுத் தாரமின்னவே.
341. காத்தவாமையோ டுங்கபாலமுங்
கோத்தசன்ன வீரங்குலாவவே.
342. வந்தவந்தமா யவர்கண் மாய்தொறுந்
தந்ததந்தசங் கந்தழங்கவே.
343. திருக்கொண் மார்பன் றிரிவிக் ரமஞ்செய்த
உருக்கொ ணீள்குரற் காள மூதவே.
344. செய்த வேள்விவா யஞ்ஞர் தஞ்சிரம்
பெய்த சிங்கசின் னம்பி டிக்கவே.
345. ஓடி யோடிவீழ் தரும ரூர்தியின்
கோடி கோடிகொம் புகள்கு றிக்கவே.
346. கொண்ட சூலவேல் விடுபொ றிக்குழாம்
மண்ட வானமீ னிரைம யங்கவே.
347. அற்ற வில்லின்வா னடைய வுந்திருக்
கொற்ற வில்லினாண் விழிகொ ளுத்தவே.
பூதகணங்களின் செயல்கள்
348. பூத நெற்றியிற் புண்ட ரம்புகுந்
தியாது தானர்நெய்த் தோரி ழிக்கவே.
349. கூடி நாயகக் குலம்வி டுந்திருத்
தூளி சாகரா திகள்சு வற்றவே.
350. ஏனை யோரிருந் தினைய தென்னவே
சேனை வல்லபஞ் செய்த செய்தியே.
351. கொம்மை முலைமருங் கெழுவர் குமரிமார்
தம்மை யிடுகபே யென்று சாடியே.
352. படை விடாவிசும் பாள ரைப்பறித்
திடை விடாவிமா னங்க ளேறியே.
353. இடியி ருந்தகட் பதினொ ரீசர்தங்
குடியி ருத்தவூ ரெரிகொ ளுத்தியே.
354. அகலி டந்தொழுந் துவாத சாதித்தர்
புகலி டம்பொடி செய்து போகியே.
355. போழு மின்னின்முன் புகுந்தே ழுந்துகீழ்
வீழு முன்பிடித் திடிவி ழுங்கியே.
356. பூதம்யாவையும் புகவிழுங்குமா
ஓதம்யாவையுந் தேயோடியே.
வேறு
357. இந்துகாந்தக் கிரியை யிடக்கணால்
வந்துகாந்தக் கடல்செய்து மாந்தியே.
வேறு
358. முதியவானமீன் வாரிமுக்கிவான்
நதியவானமீன் முழுகிநாடியே.
359. கடவுணீலியூர் யாளிகைப்படுத்
தடவிவாரிமால் யானைவாரியே.
360. செலல்விலங்குதேன் மடைதெவிட்டியேழ்
குலவிலங்கலும் பாதிகுன்றவே.
361. கார்கிழித்தமரர் நாடுகண்டுடன்
பார்கிழித்துரகர் பூமிபற்றியே
362. குடத்தெடுத்துநல் லமுதுகொண்டவர்
படத்தெடுத்தசூ டிகைபறித்துமே.
363. கடித்துமென்றுரகர் நஞ்சுகருதியோ
குடித்துமென்றமிழ்து கொண்டுபோயுமே.
வேறு
364. எழாதவாறு மெழுந்த சுராசுரர்
விழாதவாறும் விசும்பற வீசியே.
365. பேர்த்துநின்ற வயிற்றின் பெருவெளித்
தூர்த்துநின்ற விசும்பெதிர் தோன்றவே.
366. வருதரைக்குன்று வாழுங் குழிவழி
நிருதரைப்புக நூக்கி நிரப்பியே.
வேறு
367. ஓதமும் பொருப்புமண்ணூம் விண்ணுமற்று முள்ளவெப்
பூதமுந்த்ரி சூலமிட் டுடன்கலந்து போதவே.
368. வெம்மையே புரித்தபே ரலாயுதத்தர் வெள்ளையோர்
தம்மையே யுரித்தமைத்த சட்டைமெய் தயங்கவே.
369. துற்றெழுத்த பேய்நிரை துளங்குதம் முடம்புவிட்
டற்றெழுத்த தோன்முழுச் சனம்பமீ தலம்பவே.
370. மலைப்படித்த சீயவே றுடன்பிணைத்து வாரிநீர்
அலைப்பிடித்த மீனவேறு பெய்தகா தலைப்பவே.
371. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாதுவிஞ்சை மன்னர்பாழ்
வெள்ளிவெற் பெடுத்திடுங் குதம்பைகாதின் மின்னவே.
372. குஞ்சிவேர் பறித்தகுண்டர் செம்பொனிற் குயின்றபேர்
இஞ்சிவே ரகழ்ந்துகாதி லிட்டதோ டெறிப்பவே.
373. பாரிடக் குலங்கள்பேய் நெடுங்கைகால்க விற்படக்
காருடற் சமண்குழா மநேககோடி கட்டியே.
374. படர்ந்தபார மேகவர்ந்து தின்றுபாழ் படுத்தின
கிடந்தகுண்டர் மெய்ந்நரம்பு மென்புமே கிடப்பவே.
375. ஏறுநாலு திக்கிலும் புதுப்புலால் மகழ்ந்தெழுந்
தாறுநா லமண்பிணங் கிடந்தெயிற் றலைப்பவே.
376. தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே.
377. பாலெழுங்கொல் பண்டுபோல வன்றியே பசும்புணீர்
மேலெழுங்கொ லென்றுதேரர் தேவடங்க வெட்டியே.
378. தடந்தொறும் படிந்துகைத்ரி தண்டுமேக தண்டுமாய்
மடந்தொறுங் கிடந்தசோரர் கொத்தடங்க வாரியே.
379. வேலைவா யரக்கர்தம்மை மேருவில்லி மஞ்சனச்
சாலைவாய் வெதுப்பிவா ளெயிற்றினிற் சவட்டியே.
380. காவிவண்ண னூர்தியுந்த்ரி வேதபோத காரணன்
தூவியன்ன முங்கலந்து சுட்டுவாயி லிட்டுமே.
381. சங்கெடுத் துடைத்தயின்று தன்றுதணைத் தனிப்பெருங்
கொங்குசடைச் சரோருகக் கிழங்ககழந்து கொண்டுமே.
382. கைவழிக் குலப்பொருப்பொ ரெட்டுடன் கலந்துகொண்
டவ்வழிப் புயங்கமெட்டு மம்புயத் திருத்தியே.
383. நீர்கலக்கி மீனவே றெடுத்தயின்று நீனிறக்
கார்கலக்கி வானவேறு செவ்வியோடு கவ்வியே.
384. ஆழிமால் வரைப்புறத் திறைத்துவாரி யற்றபின்
பாழிமால் கடற்பெருந் திமிங்கிலங்கள் பற்றியே.
385. அடவிமுற்று மசலமுற்று மவனிமுற்று மதிர்படத்
தடவிமுற்று முயிர்தொலைச்சி வயிறுவேட்கை தணியவே.
386. பிடிப்பிடித் துணித்துணிப் பிணிக்கெனப் பெயற்புலத்
திடிப்பிடித் தெருத்திறத் தெயிற்றரைத் திறக்கியே.
387. வாலெடுத்து நாகர்தங்கள் திவ்யபானம் வைத்தபொற்
சாலெடுத்து வாய்மடுத்து வெவ்விடாய் தணித்துமே.
388. கொண்டல்கோ லறுத்துவான யாறுகோ ளறுத்துமேல்
அண்டகோள கைப்புறத் தறாதநீ ரறுத்துமே.
வேறு
389. மண்ணிற்செந்தீ யடுப்பவுடுப்பல மாய்ந்தன
கண்ணிற்காய்ச்சிக் குடித்தனநாற்பாற் கடலுமே.
390. உயிர்ப்பெரும்பசி தீர்ந்தகொலில்லைகொ லுண்டுவெண்
தயிர்ப்பெருங்கடன் மாய்ந்தனபூதமே தாளமே.
391. அப்புளித்தயிர்க் கடலினுப்புக்கட லடையவே
கொப்புளித்தவை யிரண்டு மொன்றக்கிக் குடித்தவே.
392. பொய்க்கடற்புறத் தெய்வங்களைப்பொரித் துத்தினா
நெய்க்கடற்பசை யற்ற்தெங்குண் டினிநெய்யே.
393. வடியவாங்கி மடுக்கவெங்கேயுள வந்துதாம்
படியவன்றன றாயினதண்ணீர்ப் பரவையே.
394. கருப்புச்சாற்றுக் கடலன்றுபிழைத்ததோ கழுது
விருப்புச்சாற்றிற் குடித்தனகிடந்தன வெடித்தே.
395. மட்பெரும்பழங் கலத்தொடுமடுத்தன வெடுத்துக்
கட்பெருங்கடல் குடித்தனதடித்தன கழுதே.
வேறு
396. வேலின்மாயன்மாய் வுறவிடும்பலி
மேவுநாயகன் விடுபடைக்
காலின்மாய்வன வல்லவோவொரு
கையின்மாய்வன கடலுமே.
வேறு
397. நதிக ளேழினு முதற்கிரிக னேழினுமறா
நளினி யேழினும் வலம்புரிய நல்லனமகோ
ததித ளேழினு மெடுத்தடைய வுள்ளனவெனுஞ்
சங்க கோடிகள் குறித்தகில முந்தகாவே.
398. சக்க ரக்கிரியு மெக்கிரியு மெம்புடவியுஞ்
சமைய வந்துதக ரத்தழுவி னுந்தழுவுநின்
றக்க ரத்துலகு டைக்கினு முடைக்கு மிதிலோ
ரலகை யேயென விரிஞ்சனலம் வந்தலறவே.
399. ஒரே யிற்றினும் வயிற்றினொரு பாலுமிடவே
யுள்ள தெவ்வுலகு மல்லதொரு பூதமொருபேய்
ஈரெ யிற்றினும் வயிற்றினிரு பாலுமிடவே
றில்லை யேயென வெறித்தயன் மறித்திரியவே.
400. சுடர்கிளைத்னைய செய்யசுரி யங்கிவிரியச்
சுழல்விழிப்புகை பரந்துதிசை சூழவருபேய்
கடல்குடித்தவனி தின்றுலகு மண்டமுமெழக்
கதுவுமூழிமுடி விற்கன லெனக்கடுகவே.
401. யானை யானசில பாய்புரவி யானசிலவா
ளடவி யானசில தேரசல மானசிலநேர்
சேனை யானசில நிற்பவெவ னிற்பதெனவிச்
செல்லு நாலணியி லுந்தலைவ ரானசிலவே.
402. அங்க ணாரணர் பயோததியு மில்லைமகனா
ரம்பு யாலயமு மில்லையவர் கட்கரியாம்
எங்க ணாயகர் திருக்கயிலை வெற்புமுளதோ
வில்லை யோபிற புலங்களை யியம்புகிலமே.
403. காலெ ழுந்தபொழு தோகட லெழுந்தபொழுதோ
கனலே ழுந்தபொழு தோகயிலை யாளிகடகம்
மேலெ ழுந்தபொழு தும்பிரம ரண்டகடகம்
விண்டு டைந்தில பெருந்திகிரி வெற்புடையவே.
404. புத்தர் போதியரு கந்தர்க ளசோகுதிருமால்
புகுது மால்சத மகன்சுர தருக்கன்பொருளோ
எத்த ராதலமு நீழலிடு மேழ்பொழிதலுநே
ரெழுவி லங்கல்களு நேரடி யெழுந்திடறவே.
405. விண்ணில் வந்தமழை யும்பணியு மெவ்வடவியு
மிடைய வந்தகளி ருந்துணரும் வெற்பினடுவேழ்
மண்ணில் வந்தமண லும்பொடியும் வீரனவனோர்
வடிவின் வந்தகழு துங்குறளு மானபரிசே.
406. பூத மும்பழைய வாமனன் வளர்ந்ததனையும்
புடைபெ யர்ந்தெழ வளர்ந்துபெயர் போனகழுதின்
சாத முங்கழு தெனும்பெயர் தவிர்ந்தனநிணத்
தசைமி சைந்துடல் விசும்புபுதை யத்தணியவே.
407. கார டங்கியன தாரகை யடங்கியனகோள்
கதிய டங்கியன மூவர்சிலர் தேவர்ககனத்
தூர டங்கியன பின்னுமெழு கின்றவனிகத்
துள்ள டங்கியன வுள்ளபதி னாலுகுமே.
408. வானு மின்றிமக ராலயமு மின்றிநடுவேழ்
மண்ணு மின்றிவட வானலமு மின்றியனிலந்
தானு மின்றியற நின்றதனி மூலமுதல்வன்
றன்னை யொத்ததினி யென்னையிது தானைநிலையே.
வேறு
409. கொண்டகோடிசத கோடிகூளிகள்
குளிக்கவன்றவை தெளிக்கவே
அண்டகோடிக ளநேககோடிகளு
முடையநீர்சுவறு மடையவே.
410. மலைகள்வாரியன வேழுமுக்கியவை
விக்கியுடுவொடு மடுத்தெடுத்
தலைகொள்வாரிதிக ளேழுநக்கிநட
மாடியையைகழல் பாடியே.
411. எயிறுவெட்டுவன சக்ரவாச்னமுத
லேழ்பொருப்புமெட் டெண்பணிக்
கயிறுகட்டுவன வண்டகோடிபுனை
கையகாலன கழுத்தவே.
412. படம்பெறாமணி விசும்பிழந்துலகு
பகல்பெறாபவன மடையவோர்
இடம்பெறாவெளி யிழந்துநடுவுடு
வெழப்பெறாககன மெங்குமே.
413. இடுமிடும்பத யுகத்துவீழ்கதியி
லேழ்பிலங்களு மிறங்கவே
விடும்விடுங்கர தலத்தெழுந்துகிரி
சக்ரகிரிகிழிய வீழவே.
414. விட்டகுலகிரிக ளெட்டுமும்பர்திசை
யானையெட்டும்விழ வீழவே
சுட்டவிழியிலெழு கடலும்வற்றியெழு
தீவுமொக்கநிலை சுவறவே.
415. சங்குநேமியொ டுறங்குமேகழு
மிறங்குமேகழுந் தப்புமே
பொங்குநேமியுடன் வேவவெந்துபொரு
பொரியுமேசகல கிரியுமே.
416. விழும்விழுஞ்சிலா தலநிலம்பகிர்ந்
துரகர்விடர்நடுவு வீழவே
எழுமெழும்பணா மணிகளவ்வழியி
னிரவிகள்வருவ தென்னவே.
417. கரங்களால்ரவிகள் யாவரும்பெரிய
கால்களாலுரிய கங்கையுஞ்
சிரங்களாலரசு பணியுமாகிமுதல்
பூதநாதர்பலர் செல்லவே.
418. விழவிடுங்கிரிகள் கீமுமுள்ளபில
மேழுமூடுருவ வீழவே
எழவிடுங்கிரிகள் சூழுமண்டமுக
டேழுமூடுருவ வேறவே.
419. ஓமகூடகிரி நின்றெடுத்தெறிய
வண்டகூடமுரு விப்புறத்
தேமகூடமொடு சித்ரகூடமெரி
கனககூடமென வெரியவே.
420. எயிறிரண்டருகு வெண்பிறைக்கிவை
யிரண்டுடுத்தொடைகொ லென்னலாய்
அயிறிரண்டனைய பல்லொழுங்குக
ளலங்குசோதியொ டிலங்கவே.
421. மாகமேயனையர் தம்மகோதரமு
மெம்மகோததியு மாயமேய்
மேகமேயனைய ராகமேகடவுண்
மேருவேயனைய ரூருவே.
422. உடுத்தநேமிகிரி நெரியவொருவர்நக
முருவுமேயுலகு வெருவுமே
எடுத்தசூலமொடு காலபாசமினி
வீசயாதும்வெளி யில்லையே.
423. ஒருவரேயகில லோகமும்புதைய
வேறுவேறுடம் புடையரே
இருவரேதெரிய வரியர்தாமிவரை
யெங்ஙனேதருவ ரென்னவே.
424. கொண்டகோலமிவை யாகவண்டசத
கோடிகோடிநிரை தானையின்
வண்டகோளகை வளாகமொன்றினு
ளடங்கிநின்றன மடங்கியே.
425. எங்ஙனேயிறைவ ருலகுபொதிவடிவ
மெவ்வுடம்பினு மடங்குமா
றங்ஙனேயவர்கள் விசுவரூபமு
மடங்கிநின்றபடி யதனிலே.
426. சாய்வதின்மையி னெருக்கிமேருமுத
றாமுநின்றவர் தாணிலந்
தோய்வதின்மையி னிடங்கிடந்தபடி
தோயுமேலவையு மாயுமே.
427. நிலத்தினும்பல பிலத்தினுஞ்சுரபி
நிலையினுந்திகிரி மலையினுஞ்
சலத்தினுங்கன கலத்தினும்புடை
யடங்கிநின்றதுயர் தானையே.
வேறு
428. ஊழியேறுகட னீரண்ட கோளகையுடைத்
தும்பர்நீரொடு கலந்தனைய தொக்குமுடனே
பாழியேறுதிணி தோள்வீர பத்ரகணமும்
பத்ரகாளிகண மும்படை யெழுந்தபடியே.
தேவியின் படைச் செயல்கள்
429. கார்முகக்குமிர வென்னவிருள் குஞ்சிவிரிவார்
கடன்முகக்குமகல் வாயன கபாலமுடையார்
பார்முகக்குமுரு முக்கழு நிரைத்தபடையார்
பலமுகக்குமுத வாயிறைவி பைரவர்களே.
வேறு
430. பாரப் பணைமுலைக் கொலையினுஞ் சிலபுரூஉப்
பங்கத் தினுமடுப் பனவடுப்பகவினுங்
கூரப் புறவமுல் லைம்முகை நகையினுங்
கொல்லுகை தவிரா விறைவிசா கினிகளே.
வேறு
431. வெளிபடப்பட முகிழ்த்தெயி றெறிக்குநீலவார்
விழிபடக் குழை சுடச்சுட ரெறிக்கும்வெயிலார்
அளிவளர்த்தன வெறிக் குழ லெறிக்குமிருளா
ரறுமுகத்ரிபுர பயிரவி யகம்படியரே.
432. அடவியாகிவரு வாரசல மாகிவருவா
ரமரராகிவரு வாரவுண ராகிவருவார்
புடவியாகிவரு வார்புணரி யாகிவருவார்
புவனநாயகிதன் யாமள புராதனர்களே.
433. இடிபொறாமலொரு பாலதிர்வர் சாகினிகளே
யெரிபொறாமலொரு பானகுவர் டாகினிகளே
படிபொறாமலொரு பால்வருவர் யோகினிகளே
பகருமாறரியர் நாயகி பதாகினிகளே.
தேவர்கள் இந்திரனுக்குத் தெரிவித்தல்
வேறு
434. இப்படையோடுமையன் மகராலயத்தில்
ரவிபோலெழுந் தருளுமென்
றப்படையோடுநின்ற சுரர்சென்றுதங்க
ளரசற்கிசைத்த பொழுதே.
இந்திரன் கூற்று
435. ஆவபுகுந்தப்ரத்த மறியாதடுப்ப
தறியாததேவ ரெதிர்தன்
பாவமனங்கவற்றா வறிவின்மைகொண்டு
சிலவச்ரபாணி பகர்வான்.
436. பேதைமணந்தகெளரி யழையாமலிங்கு
வருவாளிகழ்ந்து பெரிதுந்
தாதைமுகங்கொடாது விடுவானமக்கு
முலகுக்குமென்கொ றவறே.
437. முகடுநகர்ந்துசித்த முரிசக்ரவாள
கிரியேபிடித்து முகிலென்
பகடுமெழுந்துபெய்யு மகராலயங்க
ளவைசெய்வதியாவர் பணியே.
438. தரையையகழ்ந்துதின்று கடலேழுநக்கி
வடமேருவாதி தடமால்
வரையைவளைந்துதின்னும் வடவானலத்தின்
வலியேநமக்கு வலியே.
439. அடியடையப்பறித்த குலபூதரங்க
ளழியாகவூழி யறையும்
படியடையப்பிதிர்கு மொருவாதராஅ
னவனிற்கயாது பகையே.
440. மாயிரநேமியாதி மலைசுட்டுவேலை
நிலைசுட்டயின்று மடியா
ஆயிரமானவெய்ய கதிராறிரண்டு
மெவனேவசெய்வ தவரே.
441. உம்பருமேனையோரு மலைமத்திலிட்ட
வுரகம்பிடிக்கு மமுதத்
தம்பமமைந்துடம்பு சலியாதுநின்ற
தனிமன்னன்யாவர் தமரே.
442. பருதிபடப்பரந்து புகைகண்டகப்ப
வுலகங்கண்மூடு பகுவாய்
நிருதிசெருக்குறிக்கி னுளரேதெரிக்கி
னினியென்படைக்கு நிகரே.
443. மதுநுரைவார்கடுக்கை யொருகண்ணிசூடி
மழுவாள்வலத்து வரநம்
பதினொரு தேவரேறு பதினொன்றுமேறி
னுலகங்கள்யாவர் பரமே.
444. சொற்பலசொல்லியென்கொ லுயிர்வீசுபாசம்
விடுகாலன்யாவர் துணையே
பற்பலகோடியண்ட மொருதண்டிலெற்றும்
யமராசன்யாவர் படையே.
445. கருடரியக்கர்சித்தர் கடிபூதநாதர்
நிசிசரர்தான வர்கள்கிம்
புருடர்முதற்குலத்த பதினெண்பதாதி
புடையேபரந்த படையே.
446. முனிவருமாழியானு மிமையோரும்யானு
மினையோனுநிற்க ரவிமுன்
பனிவருமென்னவிங்கு வருகின்றதென்கொ
லொருசூலபாணி படையே.
447. வறுமையெவன்கொலென்க ணொருதன்படைக்கு
வலியாவதென்கொ லிமையோர்
சிறுமையெவன்கொலென்னை மதியாதுசேனை
விடுவானெவன்கொல் சிவனே.
வேறு
448. யானாள்பதி யமராபதி யீமந்தன தெனதேழ்
கானாள்சூல கிரிதன்மலை கயிலைச்சிறு கறடே.
449. குலவெண்பணி யானேபணி கொள்வேனணி கொள்ளும்
பலவெண்பணி யவையுஞ்சிலர் வித்தந்தன பண்டே.
450. கரும்பூத விழும்பேயொடு சூழ்பத மவற்கைம்
பெரும்பூதமு மெல்லீரு மெனக்கேபடை பெரிதே.
451. கோலந்தரு தருவின்குளிர் குழைநீழல் விடேன்யான்
ஆலந்தரு வறுநீழலி னிடைவைகுவ தவனே.
452. எண்கூறவ னொருபேருரு வதனிற்கனன் முதலேழ்
திண்கூறு மெனக்கேபடை யென்கொண்டுகொல் செருவே.
453. வானேறுரு மெனதாயுத மவனாயுத மழுவாள்
யானேறுவ தயிராபத மவனேறுவ தெருதே.
454. என்கண்ணினி லிவையாயிர மெதிராய்வரு மீசன்
தன்கண்ணினின் முக்கண்ணினி யார்கண்ணதுதாழ்வே.
455. எம்மின்னுயி ரȨயீர்படை யெல்லாமுடன் வரநீர்
வம்மின்னென விடைநல்கின னிதுவாசவன் வகையே.
தேவர்கள் படையெழுச்சி
வேறு
456. சிகரக்குலக்கிரிகள் சிதரத்தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக்களிக்களிறு மறுகக்கடற்கரசன் வரவாரவே.
457. கலகக்கனற்கொடிகள் ககனப்பரப்பிலெரி கதிரூடுபோய்
உலகக்கவிப்படைய வுருகக்கடைக்கனலு முடனேறவே.
458. பலவெற்பெடுத்தடவி பறியப்பறித்துநதி பலவாரிநீர்
விலகிப்புடைப்பவிட விவைகைப்படுத்தனிலன் விளையாடவே.
459. தொழின்மிக்கசெக்கரெரி சுடரிட்டெரித்துலகுசுடுவார்கள்போல்
எழின்மிக்கிரட்டியறு வருமொக்கவர்க்கர்தம ரதமேறவே.
460. குமுதப்பரப்புமிதழ் குவியப்பனிப்பதொரு குளிர்கூருமால்
அமுதக்கதிர்க்கடவுள் ரவிகட்கிரட்டிதனி யறைகூறவே.
461. எரிகக்குமுக்கணின ரிடியொக்குமுக்குடுமி யெறிவேலினோர்
செருவிற்குருத்தெதிர்வர் சிலமுத்தெருத்தர்பதினொருதேவரே.
462. மறவைத்தனித்திகிரி வளையொத்திரட்டைநிதி வரவானிலே
பறவைக்கழுத்தில்வரு மரியொத் தியக்கர்குல பதிபோதனே.
463. அரிகட்குவைத்தவெழு நரகக்குலப்பகுதி யணியேழினோ
டெரிகட்பணைத்தபட ரெருமைப்பகட்டின்மிசை யமனேறவே.
464. முடியிட்டுமுட்டவரு முதுகற்குவட்டுமலை முதல்காறும்வீழ்
இடியிட்டுவெட்டுவன வெரியிட்டுருக்குவன வினமேகமே.
465. கரியைத்தொகுத்துழுவை கஞலப்பெருக்கியுயிர் கவர்யாளியோ
டரியைப்பரப்பியது ரருவிக்குலக்கிரிக ளணிகூரவே.
வேறு
466. தொக்கமேக மாகவெளி சுற்றுமோடி மூடிவன
துர்க்கம்யாவும் வெனெவெரி துற்றுவெறு மேறுகொடு
மிக்ககோடு கோடிபல வெற்பநேக பாகைபட
வெட்டிவாரி வாரிவர விட்டுவீசி மேல்விழவே.
467. பைத்தசோதி யாறிருப திற்றுநூறு காயவிரை
பச்சைவாசி நாலிருப திற்றுமேலு நாலுறழ
அத்தசால மீரருகு மத்ரசாலம் வீசிவர
வர்க்கத்வாத சாதிபரி ரட்டியாறு தேர்விடவே.
468. சுத்தஞான போதர்கழல் சுட்டியானை தோறுமிடு
தொட்டிதோறு மேறியிடை தொட்டகார்மு காசனியர்
அத்தசாம கோடியென நிற்பராவ நாழிகையி
லப்புமாரி தூவிவரு மட்டலோக பாலகரே.
469. முற்றுமேரு வாதிகளை முக்கவாரி யூழியெரி
முததனீல மோலியென முட்டவோத மீதெரிய
மற்றையால காலவெரி வர்க்கலோக கோடிசுடு
மத்தசாக ரேசனொடு மச்சராசன் மேல்வரவே.
470. தக்கன்யாக சாலைவினை தப்பமாடு சாமரைகள்
தைப்பவீசி மீதுவிரி சத்ரசாயை தோயவுடன்
மக்கள்யானை சூழவர மற்றைநாலு கோடுடைய
மத்தயானை யேறிவரும் வச்ரபாணி வாசவனே.
வேறு
471. அங்கண்வாசவற் கிளையவாசவற்
காகவாகஞ் செய்கபோயெனத்
தங்கள் சேனையின் பின்புநின்றதன்
றானையேவினன் சக்ரபாணியே.
472. சக்ரபாணியுட னேசகத்ரயந்
தருதசப்பிதா மகர்கடம்மொடும்
பக்கமாமுனி கணத்தர்தம்மொடுங்
கூடிநின்றனன் பத்மயோனியே.
வீரபத்திர தேவருடைய படைகளின் செயல்
473. உம்பரும்பெரும் படையுமிப்படி
யுடன்றுநிற்கமற் றவரையூடறுத்
தெம்பெரும்படைத் தலைவராகும்
போதராதிக ளிரைந்துமண்டியே.
வேறு
474. அருக்ககனப் பரப்படையப் புயத்துறவிட் டடைத்தே
உருக்குமெரிப் பிழப்பொளிபுக் குழிப்புகவிட் டுளைத்தே.
475. தனித்துரகத் தடத்தெரியைத் தழைத்தெரியச் சமைத்தே
பனிப்பரவைப் பரப்பினிடைக் கடைக்கனலைப் பழித்தே.
476. செயிர்த்துதரத் தெரிச்சுரர்பொற் சிகைக்கதுவச் சிரித்தே
உயிர்ப்பிலிணைக் குருக்களையிட் டுருக்கிநகத் துரைத்தே.
477. திறத்தவுணக் கணத்துருவச் செறித்துகிரைப் பறித்தே
புறத்திகிரிப் புகக்குருதிப் புதுப்புனல்கொப் புளித்தே.
478. கொதித்துவணக் கொழுப்பரிபொற் கொடிக்குமுறக்குமைத்தே
கதித்துரகக் கழுத்தின்முடிக் கவர்படையக் கழித்தே.
479. கலத்தமிர்தப் பரப்படையக் கவுட்புடையிற் கவிழ்த்தேழ்
பிலத்துருவப் பிளப்பிடியப் பிடித்துதிரப் பிதிர்த்தே.
480. அரக்கருரத் தரத்தமடுத் தழுக்கையெயிற் றரைத்தே
புரக்ககனப் பொருப்பர்களைப் பொடித்தெரிகட் பொரித்தே.
481. கனத்தகளக் கொளுத்திலறக் கவிற்றணியைக கடித்தே
இனத்தகுறைப் பிறக்கமெயிற் றெதிர்ப்பவயீற் றெடுத்தே.
482. அழித்தமதிக் கதர்க்குளிரிட் டருக்கருருப் பவித்தே
விழித்தவெயிற் ப்ரபைக்கனலைப் பனிப்ரபையிட் டவித்தே.
483. தகட்டுமுடிப் பசுக்கள்வசுக் களைத்தழுவிச் சமைத்தே
பகட்டினொடித் துருத்திரரைத் திருக்கைமுடப் படுத்தே.
484. தடுத்தகுலப் பொருப்பைமுடித் தடத்துடையத் தகர்த்தே[தே
உடுத்தொடையற் றழைத்துநிலத் துழைப்பவுதைத் துகைத்
485. குனித்தகளத் தளக்குதிரைக் குளப்படியைக் குறைத்தே
பனிப்பகையைப் பனிச்சுடர்விட் டெறிப்பனபற் பறித்தே.
486. சுமப்பனதிக் கயத்துடனத் திசைச்சுரரைத் துணித்தே
தமப்பனடிக் கழுத்தடையத் தனிப்பகழித் தறித்தே.
487. நிழற்கடவுட் சுடர்த்தொகையைத் திரைத்துநிலத் தரைத்தே
தழற்கடவுட் டடக்கைகளைத் தறித்துமழுப் பொறித்தே.
488. இனத்தமரர்க் கிறைக்குயிலைப் பிடித்திறகைப் பறித்தே
பனத்தியைவிட் டசட்டுவசிட் டனைப்பசுவைப் பறித்தே.
489. அகத்தியனைத் தமிழ்ப்பொதியிற் குகைப்புகவிட் டடைத்தே
இகத்தியெனப் புல்த்தியனைத் துடிக்கவடித் திழுத்தே.
490. இகற்றருமற் கெடுத்தகொடித் தடுத்திறைவற் கொடுத்தே
பகற்சுடரிற் பகற்குருகட் பரப்பிருளைப் படுத்தே.
491. சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துகுப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.
492. அடுத்தகுலப் பொருப்பையிருப் புலக்கைபிடித் தடித்தே
எடுத்தனகற் பகப்பொழில்கட் கடைக்கனலிட் டெரித்தே.
493. குலப்பிரவைப் பரப்படையக் கடைக்கனலிற் குடித்தே
சிலப்பரசைத் திருப்பரசுக் களிற்சிதையத் துடைத்தே.
வேறு
494. வேவினுள்வயின் வேவதீதெனப்
பாவகன்றகர் சுடாதுபற்றியே.
495. ஏழுமானையும் ரவியிழக்கவுள்
வாழுமானையு மதியிழக்கவே.
496. செம்பொடிப்புரத் திக்கயங்களைக்
கொம்பொடித்தடிக் குருகுதுற்றியே.
497. தருமனோளியோ டிவுளையைத்தகர்த்
தெருமையோரொரோ புகழ்கெடுத்துமே.
498. வருதியென்றுபே யூர்திவெளவியே
நிருதிதன்னையே நிலைநிறுத்தியே.
499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன்வாகனங் களைமடக்கியே.
500. ஆர்வமாளுநா ரணரநேகர்தம்
மார்வமாளுமா நெளவிவவ்வியே.
501. நாமராசியை யுதிர்த்துரோணிதன்
சோமராசியள கஞ்சுலாவியே.
502. சேயமாதிரத் தேவர்தேவிமார்
மாயமேகலா பாரம்வாரியே.
503. மையலான்மிகுந் தக்கன்மக்களாந்
தையலாரையுந் தாளிவாரியே.
504. என்னமாமியென் றியாகபன்னியைக்
கன்னபூரமுங் காதுமள்ளியே.
505. பாபதண்டிதன் பசுவைவிட்டதன்
யூபதண்டுகொண் டோடவெற்றியே.
506. விவிதமுத்தழன் மீதுவெய்யநெய்
அவிதவிர்த்துநீர் பெய்தவித்துமே.
507. பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய்
மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவே.
508. எடுமடாநமக் கென்றுசென்றுபுக்
கடுமடாவெலா மறவருந்தியே,
509. புக்கபூதவே தாளயூதமே
தக்கன்யாகமிப் படிசமைக்கவே.
வேறு
510. மாலைநாக மார்பர்மேக மாகிநின் றிடிப்பவான்
மேலைநாகர் கீழைநாகர் போன்மயங்கி வீழவே.
வீரபத்திர தேவர்
இறந்தவர்களை உயிர்ப்பித்து மீட்டும் பொரச்செய்வித்தல்.
511. விழுந்தநார ணாதிகட்கு மீளவாழு நாள்கொடுத்
தெழுந்துபோர் தொடங்குகென்று குன்றவில்லி யேவவே.
யுத்தம்
வேறு
512. சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன
சரமுஞ் சரமுந் தறிப்பவே.
513. கனமுங் கனமுங் கனைத்தன
சினமுஞ் சினமுஞ் சிறக்கவே.
514. கடையுங் கடையுங் கலித்தன
தொடையுந் தொடையுந் துரப்பவே.
515. தாருந் தாருந் தழைத்தன
தேருந் தேருந் திளைப்பவே.
516. தோலுந் தோலுந் துவைத்தன
கோலுங் கோலுங் குளிப்பவே.
517. தோளுந் தோளுந் தொடங்கின
தாளுந் தாளுந் தரிப்பவே.
518. கிரியுங் கிரியுங் கிடைத்தன
கரியுங் கரியுங் கடுப்பவே.
519. தலையுந் தலையுந் தகர்த்தன
சிலையுஞ் சிலையுஞ் சிலைப்பவே.
520. குடையுங் குடையுங் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே.
வேறு
521. மடிந்தன குவலய வலயமே
இடிந்தன குலகிரி யெவையுமே.
522. அற்றன வெழிலியொ டசனியே
வற்றின வெழுபெரு வாரியே.
523. உதிர்வன வெழிலியு முடுவுமே
அதிர்வன புடவிக ளடையவே.
524. நெரித்தன மாசுண் நெற்றியே
இரிந்தன மாசுண மெவையுமே.
525. அழுந்தின குலகிரி யடையவே
விழுந்தன திசைபல மிதியிலே.
526. சிதைவது சூழ்வரு திகிரியே
புதைவது சிலைகொல் பொருப்புமே.
527. பறிந்தன வடவிகள் பலவுமே
மறிந்தன பலகுல மலையுமே.
528. பெருத்தன வமரர் பிணங்களே
பருத்தன பூத பசாசமே.
529. அயின்றன வெருவையொ டலகையே
பயின்றன பிணமவை பலவுமே
530. முழங்கின முகிலென முரசமே
தழங்கின வெதிரெதிர் சங்கமே.
வேறு
531. மாகலக்கமூன் வாரணங்கண்முன்
பாகலப்பசா சுகள்பரக்கவே.
532. வெள்ளிவாய்மதிக் குடைவிளித்தவோர்
கொள்ளிவாய்நெடும் பேய்கொளுத்தவே.
533. விரவிவெள்ளியிற் றெரிவிபஞ்சியிற்
புரவிவெள்ளமுற் றும்புரட்டவே.
534. மாக்கணங்கொள்படை வானநாடரைத்
தாக்கணங்குக டரைப்படுப்பவே.
இறந்த தேவர்களைப் பிரமா மீட்டும்படைத்தல்.
535. அடப்படப்பொறா தமரர்தம்படை
படப்படப்ரசா பதிபடைக்கவே.
பூதகணங்களின் செயல்.
மலைகளையழித்தல்.
வேறு
536. பள்ளசிக் குன்றும்விற் குன்றுமொழி யச்சிறகறுப் புண்டுபாழி
வெள்ளிக் குன்றுபொற் குன்றுகற் குன்றடைய வீழவே.
வேறு.
537. வெள்ளிக் குலக்குன்று பொற்குன்று கல்லின்
விழுக்குன் றெனப்பட்ட குன்றியாவும் வீழக்
கிள்ளிச் சிறைப்பார முகிரிற் கிடப்பக்
கிளர்ந்தும்பர் கோமானை மாங்க் கெடுத்தே.
538. பொற்பூ டறக்கற்ப கக்காடு சாடிப்
புகுந்தும்பர் கோன்முன்பு பூதப் பிரான்மார்
வெற்பூ டறப்போய் வெறுங்கைக ளாலே
விழுத்தோகை யான்வாகை வென்வேலை வென்றே.
539. குமிழ்க்குங் குவட்டேழு குன்றும் பிலத்தே
குளிப்பக் குறும்பூத மொன்றே குமைத்துத்
தமிழ்க்குன்றின் வாழுஞ் சடாதாரி பேர்யாழ்
தழங்குந் திருக்கைத் தருக்கைத் தவிர்த்தே.
540. கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதிக்
காதுஞ் சிறைக்கை களைக்கைக ளாலே
மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூத
மல்லர்க் கடந்தானை மானங் கெடுத்தே.
541. அலங்கற் பணைத்தோ ளிணைக்குன்றி னொன்றா
லடற்பூத மொன்றேழை யாகண்ட லன்றன்
விலங்கற் குழாமாரி போய்நீறு நீறாய்
விழப்பண்டு கன்மாரி வென்றானை வென்றே.
542. புடைக்கால மற்றொத் துருக்குண்ண வேழ்பொற்
பொருப்புங் கனற்கட் கடைச்சுட்ட பூதங்
கடைக்கால மெக்குன்ற முஞ்சுட் டுருக்குங்
கடுங்கோள்க ளீராறு நாணக் கலித்தே.
543. கைந்நாக மேமேயு மாநாக நாகக்
கணங்கூட வாரிக் கவுட்கொண்ட பூதம்
மைந்நாக வெற்பொன்றை யுந்தன் வயிற்றே
மறைக்குங் கடற்கோனை மானங் கெடுத்தே.
544. சோரிக் கடற்சாடி யிற்குன்ற மொன்றைச்
சுழற்றித் துழாய்வெண் ணிணந்துய்த்த பூதம்
பாரித்த பெளவங் கடைந்தார்க ளென்னும்
பராவின்மை தேவா சுரர்க்குப் பணித்தே.
545. மேலாழி யார்வெள்ளி வேதண்ட லோகம்
விழிக்கே யுருக்குண்ண வெள்ளஞ்செய் பூதம்
பாலாழி யுந்தாழ வவ்வாழி வைகும்
பரந்தாம னுந்தாழ வுட்பள்ளி கொண்டே.
546. சென்றெட்டு வெற்பும் பணிப்பத் துணிப்பச்
செயிர்த்தெண்மர் கணநாத ரினமிண்டு சிகரக்
குன்றெட்டு மிட்டெண் டிசாதேவ ரேறுங்
கொல்யானை யெட்டும் விழக்குஹ்து வித்தே.
547. தம்பூத ராதிக ளொடுங்கூடி யாடித்
தயிராக வயிறா கரக்குன் றிளக்கிக்
கும்போத ராதிகள் குடித்துத் தடித்துக்
கொள்ளாத வச்ரகா யங்கொண்டு கொண்டே.
548. தீவாய் வயிற்றிண்பொருப்பிட் டுருக்கிச்
செவ்வாய் தொறுங்கொண்டு கொண்டும்பர் சென்மார்
வாய்வாய் தொறுங்கொப்பு விப்பார் களிப்பார்
மழுவாளி யார்சார மாணியென வந்தே.
549. அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே
லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே.
550. மின்வெள்ளி பொன்கொல் லெனச்சொல்லு முப்போர்
விலங்கற் குழாமோர் விழிச்சுட்ட பூதம்
பொன்வெள்ளி யெஃகென்ன வானத் துலாமுப்
புரஞ்சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே.
பூதகணங்களின் பிற செயல்கள்.
551. பொங்கக் களிற்றீ ருரிப்போர்வை கொண்டும்
புலித்தோ லுடுத்தும் படுத்தும் புயத்தே
சிங்கப் பசுந்தோல்கொ டேகாச மிட்டுஞ்
செய்யப் பெறாவல்ல பஞ்செய்து சென்றே.
552. சங்கும் பொலன்கற்ப கக்காவு மாவுஞ்
சதுர்த்தந்தி யுஞ்சர்வ முந்தேரும் வாரிப்
பொங்குங் கடற்கே புகப்போக வீசும்
பூதந் தபோவாரி கோதம் புரைத்தே.
553. நீரின்றி யேசென் னெருப்புண் டறுத்தும்
நெருப்பின்றி யேநீரை நேரே குடித்துங்
காரின்றி யேநின் றிடிக்கின்ற பூதங்
கடற்குங் கனற்குங் கடுங்கெளவை கண்டே.
554. மஞ்சூடு வேவக் கொளுத்துங் கனற்கண்
மாநாக மோரெட்டு மட்டித் தவற்றின்
செஞ்சூடி காகோடி சிந்தப் பறித்துச்
சிறைப்புட் குலங்காவ லன்சீர் சிதைத்தே.
555. கட்டுக்கொள் பொற்றேரின் ஞாயிற்றை யுந்தண்
கதிர்க்கோளை யும்பரி டஞ்சென்று கெளவிச்
சுட்டுக்கொல் கூசிக்கொல் விட்டும் பிடித்துந்
தொடர்ந்திராகு கேதுக்கள் சீலந் தொலைத்தே.
556. மக்கா ணுமக்கம்ம தாய்காணும் யாநீர்
மறந்தீர்க ளென்றென்னு வஞ்சப்பெ ணங்குப்
புக்காண் முலைக்கண்க ளாலாவி யுண்டப்
பொய்ம்மாய னார்செய்தி போகப் புணர்த்தே.
வேறு
557. எயிறார வாயார மிடறார வொருகாலு மெரிதீயறா
வயிறார வாறாத வடவாற விமையோரை வரவாரியே.
558. அரிதின்று போரென்று கோனஞ்ச வமிர்தோடு மமிர்துண்டெழுங்
கரிதின்று பரிதின்று தேர்தின்று முளிகூளி களிகூரவே.
தேவர்கள் இறந்து பேய்களாதல்.
559. தேரில்லை கரியில்லை பரியில்லை யிவைநிற்க தேவென்பதோர்
பேரில்லை சுரராசன் விடுசேனை பேய்தின்று பேயாகியே.
வேறு
560. பரந்தர னார்படை யூழியி லாழியை யொத்தது
பாயெரி கொன்று படுங்கடல் போற்குறை பட்டது
புரந்தர னார்படை வந்து படும்படு மும்பர்கள்
பூதமும் வேதா ளங்களு மாயே புகுதவே.
561. தந்தடி தின்றனர் தந்தலை மூளை விழுங்கினர்
தத்த முரத்துகு மாறு தடுத்து மடுத்தனர்
சிந்தடி வன்குற ளாலல கைக்குல மாகிய
தேவர் பிறப்பு மிறப்பு மிலாதவர் செத்தே.
562. ஆடாவிழியிணை காகமிருந்து பறிப்பன
வடிபடி தோயா தனகத நாய்க ளலைப்பன
வாடா மிஞிறிமி ராமுடி மாலை துகைப்பன
வல்வா யெருவைகள் வானோர் பொருமிதம் வாழியே.
வேறு
563. போர்த்தே ரிவுளி தின்றாளும் பாகு மிசைந்து பூட்டழித்தே
தேர்த்தே ரென்ன வரும்பேய்த்தேர் தேவ ருலகிற்றிரியுமால்.
564. அமையோ மென்னு மலகையினந் தின்றுவிடாய் பண்டமிர்துண்ட
இமையோ ரிமையாப் பேயாகி யிந்த்ர லோகத் தீண்டுவரால்.
வேறு
565. முடைகமழ்ந்து தசையிழந்து முதுநரம்பொ டென்புமாய்
அடையவிந்த்ர லோகமும் பசாசலோக மாகவே.
566. முடையழுங்கி யமிர்தநாறி யழகமைந்த மொய்ம்பினால்
அடையவும் பசாசலோக மிந்த்ரலோக மாகவே.
பிரமா பின்னும் படைத்தலும் அமர்மூளுதலும்.
வேறு
567. பின்னையும் பிதாமகன் படைக்கப் பேரமர்
முன்னையி னெழுமடி முடுகி மூளவே.
568. பித்த வானவ ரெங்கே பிழைப்பது
மொய்த்த பூதம் வயிற்றெரி மூண்டவே.
569. மேலுங் கீழும் வெளிப்பட வான்விடுங்
கோலுங் குந்தமு மேவிளை கொள்ளியே.
570. விட்ட தேரெலாம் வாரி விழுங்கவோ
இட்ட பேருத ரத்தீ யெரிவதே.
571. புக்க வேழும் பொரியப் புகைபுறங்
கக்க வேழு பொழிலுங் கதுவவே.
572. இரிந்த தப்புற மிந்திர னேவலால்
விரிந்த தீயடை யச்சென்று விம்மவே.
573. சேனை யெல்லாந் திரிய விழுந்தன
ஆனை யெல்லா மணியணி யாகவே.
574. ஆழமெட்டுங்கொ ல்வ்வயி றெண்டிசை
வேழ மெட்டும் புகப்புக வீழவே.
575. விழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்றுவீழ்ந்
தாழ்ந்த தண்ண லயிரா பதமுமே.
576. மெய்ய டங்கவெந் தார்சிலர் விண்ணவர்
கைய டங்கிய செந்தீக் கதுவவே.
577. சோற்றுப்ப் பாவகன் வெந்தனன் சூழ்திசை
வேற்றுத் தேவ ரெழுவரும் வேவவே.
578. சாலத் தீயி லரக்க ருபாதிகள்
ஆலத் தீயி லறவெந் தவியவே.
579. அடைய வெந்தனர் துவாதசா தித்தரும்
உடைய வெங்கதிர் தம்மை யுருக்கவே.
580. தடஞ்செ யேகா தசரைத் தனித்தனி
முடஞ்செய் தேயவர் முத்தெருத் தெற்றியே.
581. திங்க டண்மையிற் றேரோ னவிந்தனன்
தங்கள் வெம்மையிற் றண்மதி வேவவே.
582. கால்கொ ளுத்துமச் செந்தீக் கடவுளும்
மேல்கொ ளுந்தகர் வீழ்ந்துழி வீழவே.
583. ஏறு தூக்கு மிடியெரி தீந்தவர்
ஆறு தூக்குமம் மேக மடங்கவே.
584. காந்த மூளத் திருக்கட் கதிர்க்கெதிர்
போந்த வெல்லாப் பொருப்பும் பொரியவே.
585. எப்புத் தேளு மிடிமெப் பணிகளும்
வெப்புத் தீயில் விரவி யெரியவே.
586. அனிக மாய்வரு மாகண்ட லன்விடு
முனிக ணத்தர்த முத்தழல் மூழ்கவே.
587. விரிமு கக்கட லேழ்பெரு வெள்ளமும்
பரிமு கத்தொரு செந்தீப் பருகவே.
588. வேட்டுத் தீவர விட்டன காட்டுவெங்
காட்டுத் தீயின மூண்டு கதுவவே.
589. பெருக வெந்தன செந்தீப் பிழம்பெழ
உருக வெந்தன தாரகா லோகமே.
590. முன்ன முன்ன வடைய முளியுமால்
பின்னை யாரவர் கையிற் பிழைப்பரே.
தேவர்களைப்பத்துப்பிரமரும் மீளப்படைத்தல்
591. பாவ காரப் பதின்மரும் யாவரும்
வேவ வேவப் படைத்தனர் மீளவே.
பத்திரகாளியினது படையெழுச்சி
வேறு
592. படைத்துவிட்டசுரர் சேனையைத்தலைவி
பத்ரகாளிபடை கண்டுபண்
டடைத்துவிட்டபடி யன்றியேயிறைவர்
முன்புநின்றனபின் பாகவே.
593. மோகமோகினிகள் யோகயோகினிகள்
யாகசம்மினிகண் முலைவிடா
நாகசாகினிகள் வீரபைரவிக
ணாதசாதகர்க ணண்ணியே.
594. யானையாளிபரி யேதிதேர்களென
வெண்ணில்கோடிபல பண்ணியிச்
சேனையாளென வநேகபூதமொடு
செய்தபேய்களொடு செல்லவே.
வேறு
595. கொண்டதிருக்கோ லங்களிருக்கும்
படியடியோமே கூறவிருப்பேம்
அண்டமனைத்துஞ் சூழவரும்பே
ராழிகளாமே யாழியவர்க்கே.
596. உலகுவகுப்பா ருலகுதொகுப்பா
ருலகுபடைப்பா ருலகுதுடைப்பார்
அலகுவகுப்பா ரகிலகலைக்கூ
றடையவிடுப்பா ரவளடியாரே.
பத்திரகாளியின் படைகள் தேவசேனைகளோடு பொருதல்.
வேறு
597. மொய்யானையு மாளு முடன்றுபொரா
மொய்யானையு மாளும் விழுங்கினவே.
598. பொய்யாளியி லாளிடு மெஃகிடைபோய்
மெய்யாளியொ டிற்றனர் விஞ்சையரே.
599. பொய்த்தேரணி முட்ட வெறும்பொடியாய்
மெய்த்தேரணி யற்றனர் விண்ணவரே.
600. பொய்வாரி பரந்து புகப்புரளும்
மெய்வாரி பிறங்கி விசும்புறவே.
601. பொய்வந்த பதாதியு ளாவி புகா
மெய்வந்த பதாதி விழுந்தறவே.
602. பொய்யாயுத வாயுமிழ் பொங்கழலால்
மெய்யாயுதம் யாவையும் வெந்தறவே.
603. பொய்ந்நின்ற பதாகினி தந்ததுபோய்
மெய்ந்நின்ற பதாகினி மெய்கெடவே.
பட்சிசாதிகணங்களின் செயல்.
வேறு
604. நுங்கள் கூறுகொன் றிரினி நொய்யகூ
றெங்கள் கூறெமக் கேவிடு மென்னவே.
605. பானி லாவைப் பசுங்கதிர்க் கொத்தொடு
மேனிலாவுஞ் சகோரங்கண் மேயவே.
606. கோனம் போதரங் கும்போ நரம்புக
வானம் பாடியே கூடி மடுப்பவே.
607. ஏறு மேறு மலைகளெல் லாம்புக
வேறு வேறு கபோதங்கண் மேயவே.
608. பதங்கர் வெங்கதிர் பன்னிரண்டாயிரங்
கதங்கொ ணீலிகைக் கிள்ளை கவரவே.
609. யூத் நாயக ரோடுர கேசரை
வேத நாயகி தோகை விழுங்கவே.
610. முன்ன ரம்பினு முத்தர் மிடற்றினுங்
கின்ன ரஞ்சுரர் நெஞ்சங் கிழிக்கவே.
611. சக்ர மாய்ச்சென்று சக்ரவா கங்களே
விக்ர மாயுத வெள்ளத்தை வெட்டவே.
612. திருட னிந்திர னுய்ந்து திரியுமோ
கருட னாயிரங் கண்ணுங் கவரவே.
பத்திரகாளி வாளியேவுதல் முதலியன.
613. ஆளி யேறி யகிலாண்ட நாயகி
வாளி யேவி யுலகை வளைப்பவே.
614. எக்க வந்தமு மெப்பிண முங்கிரி
ஒக்க வந்தொரு வாளிக் குதவவே.
615. பூமிவட்டமும் போரொளி வட்டமு
நேமி வட்டமு தேரொத்து நிற்கவே.
616. கொன்ற தன்றிவை யோர்பிணங் கூளிகள்
தின்ற சீர்தந் திருவுள்ளஞ் சேர்த்தியே.
வேறு
617. புங்கவாளி யொன்றினாற் புரத்ரயஞ் சகத்ரயஞ்
சிங்கவாளி யொன்றினா லிருவருஞ் சிதைப்பவே.
வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்
வேறு
618. இப்படிப் பட்ட பின்னு மிமையவர் படைகண் டையர்
அப்படை யின்ன நின்ற தென்கொலென் றருளிச் செய்ய.
கணநாதர் விண்ணப்பஞ் செய்தல்
619. படப்பட வயனு மக்கள் பதின்மரும் படையா நின்றார்
விடப்பட வணியோயென்று விண்ணப்பஞ் செய்யக் கேட்டே.
வீரபந்திரதேவர் செயல்
620. சீறிய சினத்தீ யுண்ணத் திரிபுர மெரித்த நாளில்
ஏறின திருத்தேர் நின்று மிழிந்தன னெங்கள் வீரன்.
வேறு
621. மாணெனெண்மரு நான்முகத்தன மூகைசூழ வமைந்ததோர்
ஞாணென் மஞ்சன மென்கொல்காரண நாரணாதித ணுசமே.
622. காடுபோகு சடாமுடிக்கபி டேகமண்ட கபாலமே
ஊடுபோக வநந்தகோடி சகத்ரதாரை யொழுக்கவே.
623. செய்யகைத்திரு நாணணிந்தருள் செய்கெனத்திரு மங்கலத்
துய்யதும்புரு நாரதாதிகள் வேதவீணை தொடங்கவே.
வீராத்திரதேவர் போர்க்கோலம் கொள்ளுதல்.
624. பொதியில்வாழ்முனி புங்கவன்றிரு வாய்மலர்ந்த புராணநூல்
வீதியினால்வரு தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே.
625. கச்சியிற்சுர சூதசீதன பல்லவங்கன லிற்கலித்
துச்சியிற்பனி வீசுகண்ணியின் வெண்ணிலாவை யொதுக்கவே.
626. மாறில்பேரொளி வட்டமிட்டு வரம்பிலாமறை மாநிறுத்
தீதில் காழை ஞாலமுங்கொடு செய்ததேர்மிசை யேறியே.
627. கால்பிடித்து நிவந்ததேர்கம காணியாய்வழி வந்துமுட்
கோபிடித்து வலஞ்செய்தேறி விரிஞ்சனேகுசை கொள்ளவே.
628. மாகமேவரு மூரிறக்க விளைந்தநாளில் வளைந்ததோர்
நாகமேகொல் பினாகமேகொ லிடத்திருக்கையி னண்ணவே.
629. புரங்கொலம்புகொல் வந்துவந்திடை
போனபோன புராணர்பொற்
சிரங்கொ லம்புகொ லென்கொலொன்று
வலத்திருக்கை திரிக்கவே.
630. ஏனமெய்தன சிங்கமெய்தன கற்கியெய்தன வெண்ணிலா
மீனமெய்தன வாழையெய்தன வாவநாழிகை விம்மவே.
631. பிடித்த வில்லி னெறிந்த நாணொலி
யண்ட பித்தி பிளந்துபோய்
வெடித்த வோசையி லப்பு றத்வனி
போல மேலெழ விம்மவே.
632. சூல மோபுவ னங்க ளுக்கு
முகுந்த னாதி சுரர்க்குமாய்
கால மோவென வந்த தந்தில்
கணிச்சி யுங்கனல் காலவே.
633. புனைந்து வந்த மதிக்கு முன்பு
பயந்த வேலை பொறாமையால்
நினைந்து வந்தமு தஞ்சொ ரிந்தென
மாலை வெண்குடை நிற்பவே.
634. அமைய நிற்கு மலங்க லேறு
பிறங்க வெண்கொடி யாடுமால்
இமைய வெற்பு மதன்க ணின்று
மெடுத்த கங்கையு மென்னவே.
தேவர்கள் வலியழிதல்
635. வாச வன்றச நூறு கண்ணு
மறைந்து பேரிருண் மண்டவே
கேச வன்றகை மெளலி போயிருள்
கெட்ட கேடு கிடக்கவே.
636. சடைகொல் வெம்மழு வாய்கொ லுண்டு
புனற்பெ ருந்தகை சாயவே
கடைகொ றிகொள் கரங்கொல் வவ்வி
யிருந்த னத்தி கரிந்தவே.
637. திங்கண் மண்டில மேற வெந்து
களங்க மல்லது தீயவே
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற
ளிழுங்கி யொத்து மழுங்கவே.
638. சூட வென்று வகுத்த தும்பை
புராரி சேவடி தோயவே
வீட வென்று வகுத்த தும்பை
சுரேசர் மெளலி மிலைச்சவே.
639. சூட வென்று வகுத்த தும்பை
புராரி சேவடி தோயவே
வீட வென்று வகுத்த தும்பை
சுரேசர் மெளலி மிலைச்சவே.
640. வீட்ட வூர்தி யனைத்து மும்பரை
வீசி வந்தன விம்மவே
தொட்ட வாயுத முற்று மற்றவர்
கைது றந்தடி சூழவே.
641. போகை யேயென வைன தேயனு
மன்ன முங்குடி போகவே
கூகை யேமிடை காக மேயவர்
கொடி மிசைக்குடி கொள்ளவே.
இந்திரன் போர்தொடங்கல்.
642. பின்ன ருஞ்சுட ராழி யானடு
வாக மீதுபர தானராய்
முன்ன ருஞ்சுர ரோடு மிந்திரன்
வந்து தோமர முட்டவே.
வேறு
643. புரண்டு மின்னுநெடு நாணு டங்குவன
மேக ராசிபொழி யப்புறத்
திரண்டு வில்லுமென விந்த்ர சாபமுடன்
யந்த்ர சாபமு மிறங்கவே.
திருமாலின் போர்.
644. சேய கண்கனன் முராரி தங்கள்கடல்
செல்க வென்னவது சென்றதால்
நாய கன்பரசு பாணி வேணியொரு
நாக நாவினை நனைத்ததால்
645. படப்ப டப்பெரும் பரவை யாயிரம்
பளி மாலெதிர் பரப்பினான்
விடக்க ருங்கணின தையர் கைத்தொடி
விழித்த தன்றவையும் வேவவே.
646. வைய முண்டுதனி துஞ்சு மாலைவர
மாய னார்விலக நாயனார்
ஜெய முண்டுதரு மம்ப ணித்தருளு
மாதி யால்பொரு தழித்ததால்.
647. ஆழி மாயன்விட வாதி வானவன்மு
னாட கச்சிறகி னருகுபுக்
கூழி மாருத மிரண்டு பாடும்வர
வூடு சென்றதவ னுவணமே.
648. இறகு தீயவுயிர் தீய வீயுமதன்
வெற்று டம்புலகி னெல்லையின்
பிறகு தீயென வெழுந்து வீழ்ந்திட
வுயிர்த்த தையர்விடு பெற்றமே.
649. சக்க ரப்படை முகுந்த னேவவது
தானு மெங்களிரை தானெனா
நக்க ரப்படை சடாட விப்புடையி
லுண்ட றுத்ததொரு நாகமே.
650. ஆல மொன்றுமமு தென்று பண்டமுது
செய்யு மையர்பணி யன்றியே
சூல மொன்றுதனி சென்று மற்றவன்
மணித்து ழாய்முடி துணித்ததே.
இந்திரன் படையேவுதலும் அவை அழிதலும்.
651. வளையு மாழியு மருங்கு பற்றியதொ
ரிந்த்ர நீலகிரி மறிவதொத்
திளைய வாசவன் விசும்பி னின்றும்விழ
வெரிசி னந்திருகி யிந்த்ரனே.
652. மேக வெள்ளநதி வெள்ள நூறுகென
வும்பர் நாயகன் விளம்பினான்
மாக வெள்ளநதி கொண்ட தோர்சடை
வளைந்து கொண்டதவை வற்றவே.
653. மெத்து வேலைகளை வச்ர பாணிவர
விட்ட போதரி விரிஞ்சரைக்
குத்தும் வேல்கொறலை வெட்டும் வாள்கொலெயி
லெய்யு மம்புகோல் குடித்ததே.
654. வளைத்து வந்தன புரந்த ரன்குல
வலங்க லைப்பணி மதாணியோன்
விளைந்து வந்தன வெறும்பொ டித்தனது
கைப்பொ டிச்சிறிது வீசவே.
655. காடு கொண்டபடை கொண்டு வந்தகர
ரீசன் விட்டதொரு கற்பகக்
கோடு கொண்டதனை யும்ப டைப்பையு
மடக்கி நின்றதவர் கொன்றையே.
656. இடிப்பெரும்படை யெரிந்து மண்டிவர
விண்ட லத்தரச னேவினான்
அடிப்பெருங்கடவு ளூழி யீறுதொறு
மாடு மஞ்சன மவித்ததால்.
657. வச்சி ரப்படையு மிந்தி ரன்படையில்
வந்த தாலதனை வல்லவன்
முச்சி ரப்படையும் வேறு செய்திலது
நீறு செய்ததெதிர் முட்டியே.
658. நிலத்தை யேவ நிசித்தனு மோரடித்
தலத்தை யேவினன் முற்றுத் தகரவே.
659. ஓத மேவ வொருகுறும் பூதத்தை
நாத னேவின னாவை நனைக்கவே.
660. தீயை யேவச் சிரித்தொரு கொள்ளிவாய்ப்
பேயை யேவின னெங்கள் பிரானுமே.
661. காற்றை யேவ வுயிர்ப்பதொர் கட்செவிக்
கூற்றை யேவின னைய குறனனே.
662. வானை யேவ வயப்புய மாம்பெருஞ்
சேனை யேவின னெங்கணுஞ் செம்மலே.
தேவர்களும் பிறரும் அழிதல்.
663. அண்டர் யாவரு மாழி கடைந்துபண்
டுண்ட வாரமு தோடு மொருங்கவே.
664. அமுதில் வந்த வயிரா பதமவர்
குமுத வாயுமிழ் நஞ்சிற் குளிப்பவே.
665. பாற்க டற்படு பாய்மாப் படுபுனற்
காற்க டற்கழி யுள்ளே கரப்பவே.
666. அங்க ணாயகி யங்கியி லுள்ளன
தங்கள் காறங்கை தாங்கண்ட வண்ணமே.
667. வேற்றுக் கோட்டிப் பதினொரு விண்ணவர்
ஏற்றுக் கோட்டி னுயிர்க்கழு வேற்றவே.
668. உக்கு நின்றன ரும்ப ருடம்புதாம்
புக்கு நின்ற நிலைவிடப் போகவே.
பின்னும் பிரமன் சேனையை வகுத்தல்.
669. உய்ய லாமென வும்பர் பிதாமகன்
மய்ய லாற்பின்னுஞ் சேனை வகுக்கவே.
மீள அமர் தொடங்கல்.
670. வகுத்துச் சேனையை வானவர் கோமகன்
தொகுத்து விட்டமர் மீளத் தொடங்கவே.
இந்திரன்விட்ட படைகள் அஞ்சியோடல்.
671. தேர்த்தட் டாயன் றுடைந்தது தேர்ந்துகொல்
பார்புத் தேன்பயத் தோடு பறந்ததே.
672. பண்டு மாண்மகன் றன்செயல் பார்த்தவோ
மண்டு மாழிக ளென்கொன் மறிந்தவே.
673. ஊழித் தீயுவந் தாடுவ தோர்ந்ததோ
மாழித் தீதடு வென்கொல் பனிப்பதே.
674. உயிர்ப்ப வர்க்குநா மென்பதை யுள்ளியோ
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே.
675. தம்மை மாய்க்குத் தழற்பிழம் பென்பதோ
வெம்மை மாறி விசும்பின்மின் மீண்டவே.
676. ஐயர் வேணி யரவமங் காப்பவோ
வெய்ய நாயிறுந் திங்களு மீண்டவே.
677. உழைக்கும் பண்டை யுதைநினைந் துட்கியோ
இழைக்குங் கூற்ற மெதிரா திரிவதே.
678. வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்பு தானுள தென்றோ னகன்றதே.
679. அரிய வீழ்ந்த வருஞ்சிறை யுள்ளியோ
திரிய வீழ்ந்தன வெல்லாச் சிலம்புமே.
680. அருந்து மாழியி லாலமுண் டாரென்றோ
பொருந்து மேகங்கள் போர்விடப் போவதே.
681. எட்ட நிற்கி னுரிப்பரென் றெண்ணியோ
விட்ட மாதிர வேழங்கண் மீண்டவே.
இந்திரன் முதலியவர்கள் படல்
682. கூறு மேகக் குலிசா யுதன்பட
ஏறு மேகத் துருமே றெறியவே.
683. காய்ந்தி ரண்டு கதுப்பினுந் தன்கடாய்
பாய்ந்து பாவகப் பாவி பதைக்கவே.
684. சட்டத் தென்னவன் றன்கடா வேந்தனை
வெட்டிக் கூறிரண் டாய்விழ வீழ்த்தவே.
685. குருதி யூற்றிக் குடித்திடு கூளியால்
நிருதி யூற்ற மிழந்துயிர் நீங்கவே.
686. முகர வாயன் வருணன் முதியவன்
மகர போசன மாயுடன் மாயவே.
687. மலைம ருப்பெறி மாருத மார்புதன்
கலைம ருப்பிற் கழியக் கிழியவே.
688. பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்
ஆழி யீரப் பிறையிறண் டாகவே.
689. மாறு கூர்வட கீழ்த்திசை வானவன்
ஏறுமார்பத் திறப்ப விறப்பவே.
வேறு
690. அங்கிகண் மூவரூநே ரட்ட வசுக்களுநேர்
எங்குள தேவருநேர் கின்னரர் யாவருநேர்.
691. இந்த்ர முராரிகணேர் யாமவரு ணாதிகணேர்
சந்த்ர திவாகரர்நேர் தாரகை யாவையுநேர்.
692. மண்டல மடியிடநேர் தோளிட மாதிரநேர்
விண்டல முடியிடநேர் விண்ணவ ரேயினிநேர்.
திருமால் பொர வருதல்.
வேறு
693. பொக்கந் தவிர்வியாழன் சுக்ரன் போல்வீழப்
பூகண் டகர்கோவோ டாகண் டலன்மாயத்
தக்கன் றலையானார் பக்கம் படைபோதச்
சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்வந்தே.
694. காயிற் றுவியாலோ ரசனி கதழேறுங்
கடலிற் றிரையாலோர் வடவைக் கனன்மாவும்
பாயிற் றுகளாலோர் படநா கமுமாகப்
பரமன் பூரிக்கப் பிரமன் பாரித்தே.
695. சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்முற்றுந்
தந்த்ரங் களுமெல்லா யந்த்ரங் களுமுட்கொண்
டெதிரா யவியக்கண் டீரை வரையுங்கொண்
டிறையோ னெதிர்சென்றான் மறையோ ரிறையோனே.
696. சாதித் தழலாமுத் தொகையு முக்குடுமிச்
சத்திப் பிழையாமே குத்தித் தனிநெற்றிச்
சோதித் தழலிற்பண் டெரிமுப் புரமொப்பச்
சுட்டுக் ககனத்தே விட்டுத் துகள்செய்தே.
பிரமர்கள் அழிதல்
697. பத்துத் தலையோடும் பதின்மர்க் குந்தத்தம்
பறியா வுயிர்போகப் பதுமத் திறைவற்குங்
கொத்துத் தலைநாலுங் கலனா கியமுன்னைக்
குறளைத் தலையாகக் கொளைவிற் குனிவித்தே.
திருமால் வீரபத்திரதேவரெதிர் செல்லுதல்
698. செந்தா மரையோனைக் கிளையோ டுயிர்வவ்வித்
திருமால் வருகென்றம் பெருமா னறைகூவத்
தந்தா மரையுந்திப் புதல்வன் கொலையுண்ணத்
தரியா ரின்ரென்னக் கரியா ரெதிர்சென்றே.
வேறு
699. பொருதரங்கம் வீங்குசி லம்படை சேவடிப்
புரையடங்க வூன்றவி ழுந்தது மேதினி
இருவிசும்பு தூர்ந்தற வுந்திய மோலியி
னிடைகழிந்து கூம்பின தண்டக பாலமே.
வேறு
700. தம்பொன் மகுட மண்ட கோளகை
சங்கு திகிரி சந்த்ர சூரியர்
செம்பொ னறுவை குன்ற வேதிகை
சென்ற திரும னின்ற கோலமே.
701. எங்கு முலகு நுங்கு தீயென
வின்று கனல நின்ற நீரொரு
பங்கு பெறுக விங்கு தானிது
பண்டு மறையி லுண்டு பார்மினே.
திருமாலுக்கும் வீரபத்திரதேவருக்கும் யுத்தம்.
702. என்று போதுமொரு புட்கொடி யெடுத்துமொருபே
ரிடப நற்கொடி யெடுத்துமிகு வர்க்குமிருதேர்
குன்று போல்வன விசும்புகெட மேல்வருபெருங்
கொண்டல் போல்வன புகுந்தன கொடிபடையொடே.
வேறு
703. தண்டுழாய் மார்பர்சங் கொன்றுமே யூதவுந்
தமனியக் கொன்றையார் தந்திருத் தேர்ம்சைப்
பண்டுமால் வரவரக் கொண்டநா ளிடுமிடும்
படைவிடா வலகில்சங் கிடைவிடா தூதவே.
வேறு
704. நின்ற வில்லிகொடி யிற்கருட னார்த்தபொழுதே
நிமிர்சி றைக்கருட லோகமுட னார்த்ததெழவே
குன்ற வில்லிகொடி மேலிடப மொன்றுகுமுறக்
கோவு லோகமக லோகமடை யக்குமுறவே.
705. நேமி யங்கிரி நெரிந்தது முரிந்ததிடையே
நின்ற மேருகிரி யெக்கிரியு மெக்கடலுநேர்
பூமி கம்பமு மெதிர்ந்தன வுதிர்ந்தனவுடுப்
பொருபுராரியு முராரியு முடன்றபொழுதே.
706. சந்தி ராதிகளொன் பதின்மரிரு பத்தெட்டுநா
டார காகணித ராசிசோ திச்சக்ரமென்
றிந்தி ராதிகள் விமானமொரு முப்பத்துநா
லுருவர் தேரினு மடிந்தனகொ லெங்குமிலவே.
707. ஞால நேமிதிரை நேமிவரை நேமியிவையே
நடைசுழன் றிறைசுழன் றனசுழன் றிலதுதங்
கால நேமிரத நேமியிரு காலுமுடுகக்
கடவுள் வீதியில் விசும்பிடை படக்கடுகியெ.
708. வேற நேகவித தாரகை யநேகமிடையே
வீசு மாருத மநேகமினன் மேககுலமே
ஆற நேகமிர தங்களு மநேகமவஎதா
மார்ப தங்களெதிர் நீறுபட வேறுபடவே.
709. எம்ம் பாய்புரவி யிற்றெமது தேருமிறுமே
லிடப மாய்வர வெழுந்துசும வீரெங்களுக்
கம்ம் பாய்வருகி லீர்சிலை புகுந்துபிடியீ
ரஃது போலுமினி யெம்மொடுறு மும்மதுறவே.
710. புனலன் மேனியி னிசிந்தன்விடு மம்படையவும்
புரைய டங்குமினி யப்பரசு பாணிபுரைதீர்
அனலன் மேனியின் முகுந்தன்விடு மம்படையவே
மாத லாலவர் வலத்தெரிவ தம்மவரிதே.
711. மாயோன் விடும்விடும் பகழி செய்யவெரிமேல்
வந்து வந்தடைய வெந்துபொடி யாய்மடியவே
சேயோன் விடும்விடும் பகழி மாயனுதகத்
திருவு டம்புபுக மூழ்கியுரு வச்செருகவே.
712. அறும றும்பிரமர் நாரணர்க பாலநிரைபே
ரார மார்புடையவ வீரர்திரு மேனியருகே
யுறுமு றும்பகழ்ழ்ழி வெந்துபொடி யானபடிகண்
டுள்ள பஞ்சவா யுதங்களை மொக்கவிடவே.
வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்
713. தண்டு தோள்வளை கழுத்துநுதல் சாபம் வழிவாள்
சக்ர மானன மெனத்தேவர் தானவர்களைப்
பண்டு நீரமு தருத்துமுரு வத்திலிவையே.
பஞ்ச வாயுதமு மல்லதிவை யென்னபடையே.
714. சங்க மெங்கள்குழை வில்லெமது சக்ரமெமதே
தண்ட மெங்கள்யாம தண்டமழு வின்சாதிவாள்
பொங்கு கண்ணவிவை யைம்படையு மெங்களுடனே
போது மெங்ஙன மினிப்பொருவ தென்றபொழுதே.
திருமால் அருளிச் செய்தல்.
வேறு
715. பொருமம்பு சிலைகொள்வ தில்லையிவ் வுலகையும்
பொருபினா கத்தையு மொருபெரும் பன்றியாய்
இருகொம்பி னொருகொம்பி னுதியினான் மறியவிட்
டிறமிதிப் பனின்மதிப் பொழிகவென் றிகலவே.
யுத்தம்
வேறு
716. கொம்பி ரண்டுமுக மொன்றுநடை நாலுமுதுகுங்
கூறி ரண்டுபட வீழ்புடவி நீறுபடவோர்
அம்பி ரண்டெயிறு மின்றிவெறு மோரெயிறு கொண்
டடைய வெட்டுதலு மாதியுரு வெய்தியரியே.
717. மண்ணு நீபுனது நீயனது மாருதமுநீ
மதியு நீரவியு தீயவை யனைத்தும் வழிபோம்
விண்ணு நீயென வகண்டமும் விழுங்க வரிவாய்
விட்ட விட்டவவ னைம்படையு மீளவிடவே.
718. நின்று நின்றுபடை யைந்துமவை யைந்தின்வழியெ
நெடிய மாயன்விட நாயகன் விலக்கிவிடலுஞ்
சென்று சென்றுபதி னாலுலக மும்புகவிழச்
செய்ய வாயுமிட றும்புரை யறச்செருகவே.
வேறு
719. சிங்கமுங் கற்கியும் பன்றியுஞ் செற்றவன்
றிரியநீர் செல்கெனச் சென்றுமால் சினவெரிச்
சங்கமுஞ் சக்ரமுந் தண்டமுங் கட்கமுஞ்
சாபமுன் பொடிபடத் தகனமே ககனமே.
720. பாரெழுந் நதியெழும் மலையெழும் மலைவயிற்
படுவெழுந் நடுவெழுங் கடலெழும் பகுவிதக்
காரெழும் மினலெழும் மெனவருங் கனலெழக்
கண்டுமே ருவரையிற் கடவுள்கங் கைவிடவே.
721. மேல்விசும் புடையவுங் கீணிலங் கரையவு
மிடைவிலங்கலிறவுங் குலவிலங்கலெவையுங்
கால்பறிந் திளகவுங் கடல்சுரந் தொழுகவுங்
கடவுள்யாறுபதினா லுலகமுங் கவ்வவே.
வேறு
722. அப்பெரும்புனலி லிவ்வரி வராகவுருவிட்
டாமை யாயுல களந்தவாடி வாயதுவும்விட்
டொப்பரும்பழைய சேல்வடிவு கொள்ளவிறையோ
னொருசுறாவடிவு கொண்டெதி ருடன்றுகளவே.
723. பூத மைந்துமிரு கோளும்யய மானனுமெனப்'
புகலு மெங்களை விழுங்குக புகுந்துனதுடற்
பேத மைந்தமளி யுந்தெளியு மோதமுமுடன்
பின்னு மன்னுயிரு முண்டுயி ருயப்பெறுதுமே.
724. கொண்டு வாபொர விறப்பன பிறப்பினிவிடவாய்
கொய்த கொய்தநின் முடிப்பழைய கோவைகுறியாய்
தண்டு வாள்வளை தனுத்திகிரி யென்னுமொருநிற்
றவிரு மைம்படையு மையதிரி யத்தருதுமே.
725. என்று மேருதர னைம்படையு மீயநெடியோ
னெறிய வூதைவிழ மோதிவர வெய்யமழுவாள்
ஒன்று மேயவை யனைத்தையு மொருக்கநெடியோ
னுள்ள ழித்துதலை யைச்சிலையில் வைத்துளையவே.
726. விதைக்கு மப்பகழி விற்பொருநன் வைத்தமுடியான்
மிகவ ளைந்துருகை போய்நெகிழ விண்ணுறநிமிர்ந்
துதைக்கு மத்தலை யெழுந்துருகை கவ்வியதுவா
னுற்ற சந்த்ரனையும் ராகுவையு மொக்குமெனவே.
727. இன்ன வாறமரர் யாகபல முண்டபடியென்
றிரைவி யைத்தொழு திருந்தழுத பேய்க்கிதனைநீ
சொன்ன வாறழகி தென்றருளி வென்றருளுமத்
தொல்லை நாயகனை நாயகி நினைந்துதொழுதே.
9. கூழடுதலும் இடுதலும்
728. எண்ணு தற்கரிய கூளிபுடை சூழவிடையோன்
யாக சாலைபுக வான்மிசை யெழுந்தருளியெங்
கண்ணு தற்கடவுள் வெண்றகள மென்றுமுடியக்
கட்டு ரைப்பதென நின்றிறைவி கண்டருளியே.
729. சுமக்கு நாகநம தாதலி னதற்கினிமுதற்
சுரர்பி ணத்தொகை சுமப்பத்ரி தாகுமவைகொண்
டெமக்கு நீர்கடிது கூழமிடு நென்றலுமகிழ்ந்
தியாளி யூர்திமுது கூளிக ளெனைப்பலவுமே.
கூழடுதல்
730. மலைகளுண் மறுவே றுண்ட
மலைகளும் வான யானைத்
தலைகளு மடுப்புக் கொள்ளீர்
கடுப்பிலத் தாழி யேற்றீர்.
731. அழித்தன கற்பந் தோறுந்
தொடுத்தன நகுசி ரத்திற்
கழிந்தன கபால மாலை
குருதியிற் கழுவிக் கொள்ளீர்.
732. இரவிகள் பல்லுந் தத்த
மீரறு தேரி லவ்வேழ்
புரவிகள் பல்லுங் குத்திக்
துகளறப் படைத்துக் கொள்ளீர்.
733. வானவர் பல்லும் வானோர்
மன்னவர் பல்லு மெல்லாத்
தானவர் பல்லுந் தீட்டி
யரிசியாச் சமைத்துக் கொள்வீர்.
734. செருமுடி சுரேச ரோடு
த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த
பெருமுடி யுரல்க ளாகப்
பிறங்கிய விரிசி பெய்யீர்.
735. அசலமே யனைஅய திக்கி
லானைக்கோ டனைத்தும் பொற்பூண்
முசலமே யாக முப்பத்
திரண்டையு முறித்துக் குத்தீர்.
736. எத்திசை யானை யீரெண்
செவிகளுஞ் சுளகா யிண்டக்
குத்திய வரிசி யெல்லா
முரியறக் கொழிக்க வாரீர்.
737. இற்றைநா ளமரர் சோரி
திணுங்கிய தின்னம் பெய்ய
அற்றைநாட் குருதி பெய்த
முகில்களை யழைத்துக் கொள்வீர்.
738. தனித்தனி வயிறு வீங்கக்
குடித்துட றடித்தீர் நீரும்
இனித்தனித் திங்கு மெங்கும்
பிணமலை யருவி பெய்யீர்.
739. தாங்குகைக் குரிய வானைத்
தடவரை யருவிச் சோரி
வாங்குகைத் துருத்தி கொண்டம்
மிடாக்களிற் சொரிய வாரீர்.
740. துளிபடு கடாயா னைக்கைத்
துணிபடு சோரி வாரி
முளிபடு முடம்பின் முன்னைப்
பொரிவற மூழ்கி யேறீர்.
741. தேனிண ரலங்கன் மெளலித்
தேவர்தா னவரு டம்பிற்
றூநிண வெள்ளைக் கோவை
யெடுத்தெடுத் தரையிற் சுற்றீர்.
742. கருதியுந் தவிர யாகத்
தொடங்கிய சுரேசர் தங்கள்
குருதியின் குழம்பு கொண்டு
குங்குமச் செச்சை கொட்டீர்.
743. குடர்முடிசெறியக் கட்டிக்
கோவையாச் சேர்த்துத் தேவர்
சுடர்முடி கடக சூத்ர முடம்பெலாந்
தொடக்கிக் கொள்வீர்.
744. யாமினி யுண்ணுங் கூழிற்
கீரலை யிட்டு வைத்துத்
தாமரை மொட்டிற் செய்த
தனிப்பெருஞ் சூட்டுக் கட்டீர்.
745. அரகள வநந்த கோடி
யசோருள வமர ரிட்ட
முரகள முகுந்தன் மூங்கிற்
சார்ங்கமுண் டவற்றின் முட்டீர்.
746. எள்ளிவாய் மடங்கிக் கைக
விழந்தெரி கரிந்து போன
கெரள்ளிவாய்ப் பேயை மாட்டி
யவற்றிலே கொளுத்திக் கொள்வீர்.
747. இருந்தலை யுலைக ளெல்லாம்
பொங்கின துங்க யானைப்
பெருந்தலை வாரி வைத்த
வரிசிகள் பெய்ய வாரீர்.
748. எருவையும் பருந்து மோச்சித்
தக்கனார் யாக சாலைச்
கருவையுந் தோளுங் கொண்டு
துடுப்பெனத் துழாவிக் கொள்வீர்
749. மாறின மடுத்த செந்தீ
மலைச்சிற கடுத்துப் பற்றி
யேறின மிடாக்கள் வெந்து
சமைத்தன விழியப் பற்றீர்.
750. சேத்தன துர்தி கொண்டான்
றிருநெற்றிக் கண்ணில் வெந்து
பூத்தன மலைகள் வாங்கிப்
புண்டரம் புடையிற் றிட்டீர்.
பேய்கள் காளிக்குக் கூழ் படைத்தல்
751. எரிகல னிமைக்குங் கோலத்
திறைமக ளமுது செய்யப்
பரிகலம் பண்டை யண்ட
கபாலமாம் பற்றி வாரீர்.
752. பிரமனைப் பண்டு பெற்ற
பெருந்திரு வழுது செய்யப்
பரமனைப் பாடிப் பாடிப்
போனகம் படைக்க வாரீர்.
753. சாகினி கணமு முள்ள
சம்மினி கணமு மெல்லாம்
யோகினி கணமும் பக்கத்
துண்பன வூட்ட வாரீர்.
754. கொடுத்தத னமுதந் தானுங்
கொண்டன ளிறைவி யிண்டுப்
படுத்த பாவாடை யோடும்
பரிகலம் பேரப் பற்றீர்.
755. கமலத்தோன் கையில் வீழ்ந்த
கமண்டல நிறைந்த தண்ணீர்
அமலைக்குத் தூய தெண்ணீ
ராரமு தாக்கி வாரீர்.
756. கதக்களி றெட்டும் பட்ட
களந்தொறுங் கும்பஞ் சாய்ந்த
மதப்புதுத் தயிலந் தோய்ந்த
மணிமுத்துப் பிளவுங் கொள்வீர்.
757. உந்தியின் முகுந்தன் முன்னா
ளுயிர்த்ததா மரையு மீரைந்
திந்திர தருவுந் தந்த
விலைச்சுரு ளெடுத்துக் கட்டீர்.
758. மாயவன் சங்கு சுட்டு
வடித்தநீ றடைக்கா யோடு
நாயகி யமுது செய்ய
நாமினிப் படைக்க வாரீர்.
759. என்றுகொண் டலகை யெல்லா
மிமையவர் பிணங்கொண் டீண்டக்
குன்றுகொண் டட்ட கூழ்தங்
குடிமுறை பகுக்க வாரீர்.
கூழிடுதல்
760. அண்டர் பொன்னெயில் வட்டமுட்ட
நெருங்கு பேய்பெற வட்டகூழ்
குண்டர் பொன்னெயில் வட்டமுட்ட
குகந்த ளந்து கொடுக்கவே.
761. மைந்து கூர்நில நீர்நெ ருப்பு
வழங்கு மாருத மாகமென்
றைந்து பூதமு முண்ண வுண்ண
வடுங்க ளோடு மிடுங்களே.
762. நீல முண்ட முகிற்கு ழாமென
நின்ற பேயிது நிற்பதோர்
ஞால முண்ட வயிற்றி ரைப்பை
யடக்கு மின்க ண்டக்கவே.
763. நின்ற லைப்பன நான்மு கத்தொரு
பேய் மடுப்ப நிணம்பெய்கூழ்
தன்ற லைப்பொலி மண்டை யிற்சாத
கோடி சாடிகள் சாய்மினே.
764. பேயி ரங்க விரந்து வந்த
திருந்த கூழது பெய்ம்மினோ
ஆயி ரங்க ணிழந்த பேயை
யருத்தி தீர விருத்தியே.
765. எயிறி ழந்து நிலாவி ழந்தும்
விலாவி ழந்து மமர்ந்தபேய்
வயிறி ழந்தில வின்ன மின்ன
மருந்து கூழ்புக வார்மினோ.
766. இழந்த வான்விழி போன பின்னை
யிறந்து வந்து பிறந்தபேய்
அழுந்த வாயி லநந்த கோடி
மடாவெ டுத்து மடுக்கவே.
767. நெய்யி ழந்தது பாலி ழந்தது
நீள்பெரும்பசி தீருமோ
கையிழந்து பிறந்த பேயிது
கோடி சாடி கவிழ்க்கவே.
768. மாய்கு டிக்கு நிமித்த மாக
மகட்பெ றுந்திரு மாமடிப்
பேய்கு டிக்க வநேக கோடி
மடாவெ டுத்தவை பெய்ம்மினோ.
வேறு
769. இதுபகு வாய்த்து வயிற்றினி
லிப்பே குலகு விழங்குபேய்
மதுவொடு மண்ட கடத்தடா
மடுக்க வெடுக்க வெடுக்கவே.
வேறு
770. அடிக்க வடிக்கவெழு மருகப் பேய்கட்கும்
புத்தப் பேய்கட்கு மண்ட கபாடக்கூழ்
பிடிக்கப் பிடிக்கவுற்ம் வயிறு பழம்ப்படியே
பெருருக பெருகுகுகவாய் பருகுக பருகுகவே.
வேறு
771. இப்படிக் கழுத்தே கிட்ட
விரைந்தபுத் தப்பேய் மண்டை
கைப்பிடி பெறும்பே யோடு
கலந்தொரு கலந்தி லூண்டே.
பேய்கள் கூழ்குடித்து வாழ்த்தல்
வேறு
772. தாராக வண்டத் தொடுத்தணிந்தார்
தமக்கிடம் போதத் தமனியந்தாற்
சீராச ராசீச் சரஞ்சமைத்த
தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே.
773. நீடிய வெண்டிசை நிழல்வாய்ப்பு
நேரிய தெக்கிண மேருவென்னப்
பீடிகை தில்லை வனத்தமைத்த
பெரிய பெருமாளை வாழ்த்தினவே.
774. பிரட்டனை யேபட்டங்கட்டழித்துப்
பேரே ழரையிலக் கம்புரக்க
இரட்டனை யேயட்டங் கட்டிவிட்ட
விராசகம் பீரனை வாழ்த்தினவே.
775. அழிவந்த வேதத்தழிவுமாற்றி
யவனி திருமகட் காமன்னர்
வழிவந்த சுங்கத் தவிர்த்தபிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.
776. செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்றமிழ்ழ்த் தெய்வப் பரணிகொண்டு
வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்
மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே.
777. முன்றிற் கிடந்த தடங்கடல்போய்
முன்னைக் கடம்புகப் பின்னைத்தில்லை
மன்றிற் கிடங்கண்ட கொண்டன்மைந்தன்
மரகத மேருவை வாழ்த்தினவே.
10. களங்காட்டல்
778. ஒருமருங்குடைய மூலநாயகியொ
டொற்றை வெள்ளைவிடை யூர்திமேல்
இருமருங்குமறை தொழவெழுந்தருளி
யிராசராசபுரி யிசரே.
779. யாக நாயகரொ டேனை வானவ
ரிறந்து பேயொடு பிறந்தவா
றாக நாயகி தனக்குணர்த்திவர
வன்னை முன்னைமுனி வாறியே.
சிவபெருமான் தேவிக்குப் பேய்களைக்காட்டல்.
வேறு
780. நெடுநில மளந்து கொள்ள
வளர்ந்துதா ணீட்டு நாளில்
இடுநிழல் போல் நின்ற
விப்பெரும் பேயைப் பாராய்.
781. பொன்முக மொன்று பண்டு
போனது புகுதப் பொன்றிந்
தன்முக மைந்தும் பெற்ற
சதுமுகப் பேயைப் பாராய்.
782. அங்குநின் றேவல் செய்யு
மாமரரே யலகை யாக
விங்குநின் றரசு செய்யு
மிந்திரப் பேயைப் பாராய்.
783. விடுபுகை புயிரா தேங்கி
வெங்கன லுயிர்ப்ப வென்றும்
படுபுகை வடிவங் கொண்ட
பாவகப் பேயைப் பாராய்.
784. விசும்பினு நிலத்து முள்ள
வுயிர்பண்டு விழுங்கி யின்று
பசுந்தசை மிசையா நின்ற
தென்றிசைப் பேயைப் பாராய்.
785. தன்னகத் தங்கி யிங்கு
வயிற்றுத்தீ யாகத் தாங்கும்
பன்னகப் பாசம் வீசுங்
குடதிசைப் பேயைப் பாராய்.
786. தன்னகத் தங்கி யிங்கு
வயிற்றுத்தீ யாகத் தாங்கும்
பன்னகப் பாசம் வீசுங்
குடதிசைப் பேயைப் பாராய்.
787. வாயுவே யாய பண்டை
வடிவுற மாய்ந்து பெற்ற
ஆயுவே வடிவ மான
வழிபசிப் பேயைப் பாராய்.
788. வளரிளங் கொங்கை மங்கை
நங்கையர் வனப்புக் கேற்ற
கிளரொளி வனப்புத் தீர்ந்த
கெடுமதிப் பேயைப் பாராய்.
789. கருத்துப்பே யேற வேறுங்
கழிபசி யுழப்ப தோர்முத்
தெருத்துபே யேறி நின்ற
விப்பெரும் பேயைப் பாராய்.
790. விடைவல னேந்தி வந்து
வெண்பிறை மலைந்து சூலப்
படைவல னேந்தி மாய்ந்த
பதினொரு பேயைப் பாராய்.
791. ஓரிரு சுடரு மன்ன
யோகமே போகப் போகா
ஈரிரு மறையுந் தேடு
மெண்பெரும் பேயைப் பாராய்.
792. ஆயுநூ லாயும் பண்டென்
றரும்பசி நோய்க்குத் தங்கள்
பேயுநூல் கேட்க நின்ற
மருத்துவப் பேயைப் பாராய்.
793. அண்ங்குதீ வணங்கா யாக
வன்றிகழ்ந் ததற்குத் தானே
வணங்கியே நன்று நிற்கு
மாமடிப் பேயைப் பாராய்.
தேவி முனிவுதீர்ந்து அருளிச்செய்தல்
794. அவ்வகை யிறைவர் காட்ட
வமரர்மேன் முனிவு தீர்ந்து
மைவகை நெறிந்த கூந்தன்
மலைமக ளருளிச் செய்வாள்.
795. நின்முத லாகத் தோன்று
நெடியமான் முதலா வுள்ளோர்
என்முத லாக மாய்தற்
குறுவதெ னிறைவ வென்றே.
796. தணிந்தரு ளிறைவ யானுந்
தணிந்தன னென்று தாவிற்
பணிந்தன விறைவி நிற்கப்
பரனும்புன் முறுவல் செய்தே.
சிவபெருமான் தக்கனுக்கு மோத்தைத்தலையருளல்
797. மிக்கன பேசித் தம்மை
வேள்வியி லிகழ்ச்சி செய்த
தக்கனை முதிஅ மோத்தைத்
தலைபெற வருளிச் செய்தே.
தேவர்கட்கு உயிருமுடம்பும் அவர்கள் பதவிகளும் அருளல்
798. ஒழித்தவா நவர்கட் கெல்லா
முயிருந்தம் முடம்பு நல்கி
அழித்தவா னுலகுத் தங்கள்
பதங்களு மளிப்பக் கொண்டே.
தேவர்கள் வாழ்த்தி விடைபெற்றுச் செல்லுதல்
799. குலங்கொண்ட வமர ரெல்லாங்
குனிசிலை வீரன் றன்னை
வலங்கொண்டு விடையுங் கொண்டு
போயினார் வாழ்த்தி வாழ்த்தி.
11. வாழ்த்து
800. இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.
801. வில்லவன் வில்லமர் கோதை விடாதவோர்
வல்லவன் வல பிரான்மகன் வாழியே.
802. குறுகு முடுக்கு மிலங்கு பொலன்கொடி
மறுகும்வகுத்த பிரான்மகள் வாழியே.
803. தென்னவர் தென்மது ராபுரி சீறிய
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே.
804. தில்லை வனங்கட வுள்செறி கற்பக
வல்ல வனம்பெற வந்தவன் வாழியே.
805. மீனவன் மீனவ ரேக விடுபடை
மானதன் மான பராயணன் வாழியே.
806. ஆனிரை தந்ததி லைம்மடி மும்மத
மானிரை தந்த பிரான்மகன் வாழியே.
807. பார்தரு வார்பெற மாறில் பசும்பொற்
றேர்தரு மாபா கேசரி வாழியே.
808. கூட மெடுத்த குளத்தொடு கோபுர
மாட மெடுத்த பிரான்மகன் வாழியே.
809. கோயின்மு னேழ்நிலை கொண்டதோர் கோபுர
வாயில் வகுத்த பிரான்மகன் வாழியே.
810. எண்டரு திக்கினிற் றில்லையி னெல்லையின்
மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே.
811. இறையவ விராச புரந்தர னேத்தும்
மறையவர் வாழி மகத்தவர் வாழியே.
வேறு
812. வாழிய மண்டல மால்வரை
வாழி குடக்கோழி மாநகர்
வாழிய வற்றாத காவிரி
வாழி வரராச ராசனே.
வேறு
813. ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குத் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே.
கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே.
814. வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை
வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும்
வாழி திசைக்கப் புறத்து நாற்கவி
வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே.
***********
சீர்குரோ தனவருடம் புரட்டாசி முதற்றேதித்
திங்க டன்னிற்
காருலவுஞ் சீகாழிச் சிதம்பரநா தம்முனிவன்
கருணை யாலே
பார்புகழுந் தெட்சயா கப்பரணி தனைமுகித்துப்
பதியி னன்றாய்
ஏர்பெறுந்தா ழிசைகளையு முரைதனையும் பெரியதம்பி
யெழுதி னானே.
மூலமட்டும் உள்ள ஏட்டுச்சுவடிகளில் அதிகமாகக் காணப்பட்ட தாழிசைகள்.
1. அருண்ஞான குருபீட மடிவாழி யடியார்க
ளடிவாழியென்
இருளான பழிமாற விகலான வழிமாற
விசைவாழியே.
2. எரிபுக் கனவே டிறைவன் சடையிற்
பிறையொத்தன வைகையிலிட்டனவுங்
கிரிபுக் கனவக் கிரிசூ ழருவி
கிழியாத கடங்கள் கிழித்தறவே.
3. குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய
மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே.
4. மலையாழி கடந்த பெரும்புகழ்
மகட்காயவன் வஞ்சியன் மனுமுறை
தலையாழி கடந்த பெருந்தகை
தவிராத புரந்தரன் வாழியே.