ஏற்றப்பாட்டு
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
ஸ்ரீ
விவேகவிளக்கக் கீர்த்தனம்.
சென்னை
பாரதி அச்சுக்கூடுத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
இ-ம்-முகாரி-அடதாளம்-கண்ணிகள்.
எதுவேணும்கேள் மனமே-பாவிமனமே
உனக்கெதுவேண்டாம் சொல்மனமே.
கதியென்று கணநாதன் துதிசெய்து பணிந்திட
கர்மவினை களறுமே — அயன்
விதியன்றிவேறொரு சதிகர்ப்பனைகள் யாரும்
வேரறுந்தோடிடுமே. — எது
நன்மார்க்கமாகவே யென்னாளுமிருந்திட
நாதனருள் வேணுமா — இல்லாமல்
துன்மார்க்கமாக வலைந்து திரிந்திடும்
துஷ்டருறவுவேணுமா. — எது
சோதிசுடர்ப்பொருள் ஆதிசிவகுரு
சண்முகனருளவேணுமா — இல்லாமல்
மாதரைக்கைகோர்த்து மண்டலம் திரிகின்ற
மடையருறவுவேணுமா. — எது
பையரவ மணிந்த பக்தரக்ஷகரெனும்
பரமதயாளன் வேணுமா — இல்லாமல்
மையிட்டுக்கண்காட்டி சாடைகள் செய்திடும்
மங்கையுரவுவேணுமா. — எது
மச்சாவதாரஞ்செய் தீனரட்சகனெனும்
மால்மருகோன்வேணுமா — இல்லாமல்
பிச்சையென்று வருவோரை மயிர்பிடித்தடித்திடும்
பேயருறவுவேணுமா. — எது
ஆடையளித்துடல் அன்னங்கொடுத்திடும்
ஆண்டவனருள்வேணுமா — இல்லாமல்
சாடைகள் செய்து கண்ணால்மயக்கிடும்
தாசியுறவுவேணுமா. — எது
கனிமாங்கனிக்காகப் பூவலம் வருங்கதிர்
காமன் கருணைவேணுமா — இல்லாமல்
அனியாயமா யேழைகள் மேல்பகை தொடுத்து
அலங்கோலஞ் செய்பவன் வேணுமா. — எது
தன் மானம்பிறர்மானம் என்று என்னாளும்
தற்காத்திடுபவன்வேணுமா — இல்லாமல்
சன்மார்க்கமில்லா தலைந்துத் திரிந்திடும்
சண்டாளருறவுவேணுமா. — எது
எந்தவகையாலும் மனைவிமக்களைக் காப்பாற்றி
ஈடேற்றும் வகைவேணுமா — இல்லாமல்
சொந்தமனைவிக்குச் சோறுதண்ணீரிடாமல்
சோரமான விவேணுமா. — எது
ஆறுமுகம்படைத்த ஐயன்றிருவடியை
அனுஷ்டித்தல் தான்வேணுமா — இல்லாமல்
தாறுமாறாகத்திரியும் தருதைையப்போல்
சண்டாளருறவுவேனுமா. — எது
உத்தமருடன் சேர்ந்து உண்மையைப்பாவித்து
உலகநடைவேணுமா — இல்லாமல்
மத்தகஜம்போல் கொழுத்துத் தலைமீதில்
மண்போட்டுக் கொள்ளவேணுமா. — எது
எச்சமயத்திற்கும் எங்கும் நிறைவுள்ளோன்
ஏகன்பதம்வேணுமா — இல்லாமல்
இச்சையில்லாமற் சிவபூசைசெய்திடும்
ஈனருறவுவேனுமா. — எது
ஆலம்போலச்சீறி சாலன்பாசந்தனிற்
கட்டுண்டுழலவேணுமா — இல்லாமல்
காலந் தனையளந்த மால்முருகேசன் மலர்ப்
பாதபங்கயம்வேணுமா. — (எதுவேணும்)
விவேகவிளக்கக் கீர்த்தனம் முற்றிற்று.