வள்ளியம்மன் ஆயாலோட்டம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. வள்ளியம்மன் ஆயாலோட்டம் குறவஞ்சி. சென்னை — சூளை சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காருலவும்பூவுலகைக் கனிக்காயவலம்வந்த சீருலவும்போரூரன் றேவியெனத்தார்புனைந்த மங்கைவள்ளிநாயகியின் மாகுரத்தைப்பாடுதற்குத் துங்கவைங்கரன்றாள் துணை. குறம். தினதந்தினா தினதெந்தினா தினதெந்தினா தினனா தென்னாதி னாதினனா தினதந்தினா தினனா சித்தர்கள்வாழ் மலையருயருகில் சிறந்தநல்ல வனத்தில் தேவிவள்ளி மான்வயிற்றில் திருவுருவா யமைந்தாள் — தின மான்வயிற்றில் வந்துதித்த வஞ்சிகுற வள்ளி வானமிர்தம் வேண்டியவள் வாய்விட்டழுக லுமே — தின நம்பிராசன் சேனைகளும் நல்லமைந்தர் தாமும் நாடியந்த வனந்தனிலே யோடிவந்தா ரவர்கள் — தின வனவேட்டை யாடியவர் வருகின்ற போது வள்ளிபசி யால்மெலிந்து துள்ளியழு தாளே — தின அழுதகுரல் கேட்டவேடர் ஆச்சரியங் கொண்டு அதிதுரித மாகவள்ளி யருகில்வந்துநின்று — தின மான்வயிற்றில் வந்துதித்த வஞ்சிதனைக் கண்டு மறவனவன் மனைவியவள் வாரியெடுத் தணைத்தாள் — தின வாரி யெடுத்துமவள் மடிமீதி லமர்த்தி வன்னமுகந் தான்துடைத்துக் கண்ணைமுத்த மிட்டு — தின வார்காது மூக்குருவி வடிவுகளுஞ் செய்து வாழ்த்தவள்ளி யென்றுசொல்லிப் பேருமிட்டா ரப்போ — தின . ஒய்யார நெற்றிலே சுட்டிகளுங் கட்டி ஓசையுள்ள தண்டைகொலுசு பாதத்தி லணிந்து — தின தளராமல் பசியாற்றித் தையல்வள்ளி தன்னை தாமிருக்குங் குடிசைக்குள்ளே கொண்டுசென்றா — தின வர்னப்பொன் தொட்டிலிலே மாதரசை வளர்த்தி வகைவகையாய்த் தாலாட்டி மகிழ்ந்திருந்தா ரப்போ — தின மணிகுலுங்கு தொட்டிலிலே மானீன்ற மகளும் மாயநித்திரை செய்துபின்பு தூயகண்கள் விழித்தாள் — தின வாரியெடுத்துக் குறத்தி மடிமீதில் வளர்த்தி வாய்த்துடைத்து முத்தமிட்டு வள்ளியரைக் கொஞ்சி — தின நாளொரு மேனியுமாய் நலமுடனே வள்ளி நாயகியும் வேலவற்கு மீறிவளர்ந் தாளே — தின ஓராண்டு ஈராண்டு மூவாண்டு சென்று உயர்ந்தநல்ல சந்திரன்போல் ஓங்கிவளர்ந் தாளே — தின ஐந்திரண்டு வயதுதனில் கொஞ்சிவிளை யாடி ஆறிரண்டு வயதுதனில் குறக்கூடை யேந்தி — தின கொஞ்சிக்கொஞ்சிக் குறியுரைத்துக் கோதைவளர் நாளில் கொம்பனையாள் வள்ளியரைத் தினைப்புளத்துக் கனுப்ப — தின ஏழுபே ரண்ணமார்கள் இவளருகில் வந்து இளங்கொடியாள்வள்ளியரைத் தினைப்புனத்துக்கழைக்க — தின நல்லதென்று அண்ணருக்கு நாயகியா ளுரைத்து நடந்தாளே யிடைகுலுங்க நங்கையரு மப்போ — தின காடுவெட்டி முள்பொறுக்கக் கதித்ததினைப்புனத்தில் கன்னிவள்ளி ஆயாலோட்டக் கடுகிநடந் தாளே — தின மேடுவெட்டி முள்பொறுக்கி விரைத்ததினைப் புனத்தில் மெல்லிவள்ளி ஆயாலோட்ட மெள்ளநடந் தாளே — தின கொஞ்சித்தழை தானொடித்துக் கொற்றவர்கள் வேடர் கொம்பனையாள் வள்ளியற்கும் பரணைகட்டி யமைத்தார் — தின அண்ணமா ரமைத்துவைத்த அழகுள்ள பரணையில் அம்மைவள்ளி நாயகியும் ஆயாலோட்டி யிருந்தாள் — தின தேவாரம். கள்ளராமசுரர்காலா கங்கைவேணியர்க்குப்பாலா புள்ளிமாமயிலிலேறும் புனிதனேபோரூரானே வள்ளிநாயகியாள்காத்த வளமைசேர்தினைப்புனத்தில் தள்ளுநற்குறத்தைப்பாடத் தேசிகாவருள்செய்வாயே குறம். பத்தினியாள் வள்ளியரும் பரணதிலே யேறி பாமசிவன் தன்னருளால் ஆயாலோட்டு கின்றாள் — தின சிவப்புக் கவணதனைச் செங்கையினா லெடுத்து தேவிவள்ளி நாயகியுஞ் சீக்கிரமா யெறிந்தாள் — தின தங்கக் கவணெடுத்துத் தையலந்த வள்ளி தந்தையைப்போல் வாய்திறந்து ஆயாலோட்டுகின்றாள் — தின ஆயக்கிளி நீலக்கிளி — ஆலாலோ ஆலோ அச்சமுள்ள பச்சைக்கிளி — ஆலாலோ ஆலோ — தின புதுநீர்க் கிளிகளாம் — ஆலாலோ ஆலோ தூதுவர்னப் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின வெள்ளைவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ விருந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின பச்சைவானப் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ பறந்துமேயும் பூங்கிளிசாள — ஆலாலோ ஆலோ — தின சிவப்புவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ சேர்ந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின ஊதாநிறக் கிளிகளா — ஆலாலோ ஆலோ உகந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின பஞ்சவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ பறந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின சிட்டுநல்ல குருவிகளா — ஆலாலோ ஆலோ சிறுகுருவி பெருங்குருவி — ஆலாலோ ஆலோ — தின மயினாக் குருவிகளா — ஆலாலோ ஆலோ மஞ்சட் குருவிகளா — ஆலாலோ ஆலோ — தின காக்காய் கழுகுகளா — ஆலாலோ ஆலோ காட்டில்வாழும் பட்சிகளா — ஆலாலோ ஆலோ — தின கொக்குகளா கோழிகளா — ஆலாலோ ஆலோ கோகினங்களா அன்னஙகளா — ஆலாலோ ஆலோ — தின வட்சிகளா பறவைகளா — ஆலாலோ ஆலோ பறந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின அன்னங்களா மயிலினங்களா — ஆலாலோ ஆலோ அழகுள்ள கோரங்களா — ஆலாலோ ஆலோ — தின புள்ளினங்காள் குயிலினங்காள் — ஆலாலோ ஆலோ வனத்தில்மேயும் பட்சிகளா — ஆலாலோ ஆலோ — தின சேர்ந்துமவ ளாயாலோட்டிக் சிந்தைமிகக் களித்து தினப்புனத்தில் தோழியுடன் தானிருக்கும் வேளை — தின ஆயாலோட்டும் வள்ளிகுறல் அறிந்துவடி வேலர் அருமுனிவர் தமைகழைத்து ஆலோசனை கேட்டு — தின மயிலேறித் திருநீரிட்டு வடிவேலர் தாமும் மாதுவள்ளி தினைப்புனத்தில் வந்துநின்றா ரங்கே — தின வள்ளியரைக் கண்டப்போ வடிவேலர் மயங்க மனதுமிரங்கி வார்த்தைசொல்லி வடிவேலர் நின்றார் — தின புத்தகத்தை மாற்றடிக்கும் பொக்காலி னழகும் பூஞ்ச[சி]லம்பு தண்டைகளும் பொறபீலி யழகும் — தின குரும[ம்]பிநிழை காதழகும் கும்பஸ்தனத் தழகும் கோத்தமுத்து சரமதுபோல் கொம்பனைபல் வழகும் — தின முருக்கம்பூ இதழழகும் முத்துநிகர் பல்லும் மெய்க்குழலின் திருமேனி யனிச்சமபூ நிற்கும் — தின அழகைக்கண்டு வேல்முருக ராசைமிகக் கொண்டு அம்மைவள்ளி நாயகியை யழகுமணம் புரிந்தார் — தின மாலையிட்டு வடிவேலர் மனமகிழ்ந்து அப்போ மாதுவள்ளி யுடனாக வந்தார்திருத் தணிகை — தின வள்ளிகுறம் பாடினவர் வடிவேல ரருளால் மாறாமல்வையகத்தில் வாழிவாழிவாழி — தின வள்ளியம்மன் ஆயாலோட்டம் குறவஞ்சி முற்றிற்று.
Contents | Home