நடபாயச்சிந்து. contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் திரு அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் நடபாயச்சிந்து. சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923 நெ-24, தாண்டவராயப்பிள்ளை வீதி.
Contents | Home

வெண்பா. அற்புதமாகவே அன்பனாள்வார்செட்டி செப்பெரியபங்களாவும் செய்துவைத்த ­— மெம்பொரு[ரு]ளாம் பார்த்தனிடச்சாரதியிப் பவனிவருமானந்தம் நேத்திரத்தால்காணு நின்று. இ-ம்- இந்துஸ்தான். பல்லவி. காவித்திருபங்களா அத்தாவில்வசந்தமாக காரணபார்த்தசாரதி வரும்பவனி — (காவித்) அநுபல்லவி காவித்தென்னஞ்சோலை வாழைக்கமுகம்சாலை கநிபலாஅகில்புன்னை விருக்ஷத்தில்கூவி குயில்கள்கொஞ்சிஆடி மயில்களமிஞ்சுநாடி கெம்பீரத்துடன் வாராரே ­— (காவித்) சரணங்கள். சித்திரவிசித்திர தேவர்மகிழ்கின்ற சிப்பிகள்சமைத்தோர் மாளிகை லஸ்தர்குளோபுடன் சரகுளோபுகள்தொ[ங்க] லக்ஷணமானதோர் படங்களும்தூக்கி — (காவித்) அண்டமளாவிய அரும்பச்சைபந்தலிலே அனேகவாழைமரம் தூக்கியே கண்கொண்டகாட்சியாய் கதிர்சுடர்தீபங்கள் காட்சியிதுவேகாட்சி காணவே — (காவித்) இருபுரமும்தடாகம் இரங்கும்நடபாயி அல்லிசெந்தாமரை பூர்க்கவும் கரும்வண்டுதும்பிரண்டு விரும்பியதேனையுண்டு கதிச்சுழன்றுகீதம் பாடவும் — (காவித்) மேளவாத்தியமுழங்க மேலோர்கண்டுபுகழ வெற்றிவிமானத்தில் ஏகிட ஆலவட்டம்குடை கௌரிவெண்சாமரைகள் அன்பாய்பந்நீர் கொண்டு வீசவும் — (காவித்) வேதவேதியர் வேதம்புரியவும் விஷ்ணுநாமம் பக்தர்பாடவும் பேதகமில்லாதெய்வ ரம்பையர்போலுமே பெண்கள்பிடித்து நின்றாடவும் — (காவித்) அதிரவெடிகளும் புருசுபாணங்களும் அனேகவிதகம்ப பாணமும்மதியென பிரம்மிக்கமத்தாப்பு சோதியால் மண்டலமெங்கும் பிரகாசிக்க — (காவித்) தாமிஷமில்லாமல் சர்வோத்திரட்களும் சரணாகெதியென்று துதிக்கவே சுவாமிபிள்ளைசீஷன் யானுந்துதித்திட சனார்த்தவனா யெனையாளவேணுமே — (காவித்) நடபாயச்சிந்து முற்றிற்று.
Contents | Home