நீதிநெறி
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சிவமயம்
நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம்.
சென்னை சூளை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
1923
நேரிசை-வெண்பா
சீராருஞானச் செழுஞ்சுடரா யன்பர்களுக்
காராவமுதமா யாரணமா — யேராரு
மூ[மு]ச்சுடராய் முக்குணமாய்
முப்பொருளாய்நின்றொளிரும்
அச்சுதனார் பூங்கழற் காப்பாம்.
தரு-புன்னாகவராளி ராகம்-ஆதிதாளம்,
நல்லவருடன்கூடு மனதே
நாரணன்புகழ்பாடு
கல்லைப்பெண்ணாக்கிய காகுத்தன்பதங்களை
அல்லும்பகலும்போற்றா அபலருறவைவிட்டு — நல்
பெண்டாட்டிபேச்சைகேட்டு பெற்றவளை மொத்துகின்ற,
சண்டாளருறவைத் தாரணிதனில்விட்டு — நல்
வாத்தியார்கூலியை வாயிற்போட்டுக்கொண்டு
கூத்தியாருக்குக்கொடுக்குங் கொடியருறவைவிட்டு — நல்
சுத்தமான தாய் தந்தைக்கு சோருதண்ணீர்காட்டாமல்
உற்றபெண்டுபிள்ளைகளோ டுண்ணும்பா தகரைவிட்டு — நல்
பெண்டாட்டியுடன்சேர்ந்த பேச்செல்லாம்பிறருக்குக்
கொண்டாட்டமாயுரைக்குங் கொடியருறவைவிட்டு — நல்
கொண்டவள்கைசோற்றைவிட்டுக் கூத்தியார்கைசோ ற்றை,
உண்டுகாலங்கழிப்போ ருறவையுலகில்விட்டு — நல்
பத்துமாதந்தாங்கிபெற்றுப் பால்கொடுத்துவளர்த்த
பெற்றதாய்க்குக்கஞ்சிவாராப் பெரும்பாவிகளை விட்டு — நல்
ஊழ்வினை நீங்குங்கதைகண் மூதுலகிற்கேளாத
கோள்களைக்கேட்கச்செவியைக் கொடுக்கும்பேர்களை விட்டு — நல்
சந்திபதபஹோமம் சாஸ்திரங்கள்யாவும்விட்டு
அந்திபகல்கடிதாசி யாடும்பாதகரைவிட்டு — நல்
பெற்றவளை திட்டு தற்குப் பெண்டாட்டிக்குநன்றாகக்
கற்றுக்கொடுக்குங்கொடிய கயவருறவைவிட்டு — நல்
நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம்.
தாய் பெண்ணுக்கு புத்தி சொல்லுதல்
சேரவேண்டாமயிலே யென்சொல்புத்தியை
செவ்வையாய்க்கேள் தையலே.
நாரணனாதிதெய்வம் நாயகனேயென்று
நம்பும்பெண்களோடல்லால் நலமிலாப்பெண்களுடன் — சே
விடியற்காலத்தெழுந்து வீட்டுவேலைபாராமல்
தடிபோலத் தூங்குகின்ற தகையிலாபெண்களுடன் — சே
காமனாரைப்போலேதன் கணவனைபற்றெடுத்த
மாமனார்க்குக்கஞ்சிவாரா மாபாவிகளுடனே — சே
எட்டுவீட்டுசண்டையைத் தானிருக்கும்வீட்டிலிருந்தே,
சட்டமுடனிழுக்கின்ற தண்டுபஜாரிகளுடன் — சே
மாப்பிள்ளைக்கொருவிதமு மச்சினர்க்கொருவிதமும்
சாப்பாட்டில்வஞ்சனைசெய் சதிகாரப்பாவிகளுடன் — சே
மாமியாற்கெதிரில்காலை மடக்காமல்நீட்டிக்கொண்டு
சாமியாரைப்போலிருக்குஞ் சறுதார்பெண்களுடனே — சே
ஓரகத்திநாத்தினாரை யோரவஞ்சகஞ்செய்து
தீரமுடன்சிலுவாணஞ் சேர்க்கும்பெண்களுடனே — சே
சாக்கெட்டுபோம்படி நாயையும்பூனையையும்
சாக்கிட்டுவைவதில்முதற் றாம்பூலம்வாங்குவோரை — சே
ஒருநாளுக்கொருவர்க்கன்பாய் உவந்திட்டசோற்றை
பலநாளுமேச்சிக்காட்டும் பாவைமாருடனேநீ — சே
கள்ளப்புருடருடன் கலந்ததினாற்கிடைத்தப்
பிள்ளைகளைக்கரைக்கும் பெரும்பாவிகளுடனே — சே
புருஷன் மடியிற்கையைப் போட்டுநடுத்தெருவில்
வருவார்போவார்சிரிக்க வம்பாடும்பெண்களுடன் — சே
வாயில்வருவதெல்லாம் வர்னாச்சாரமில்லாமல்
நாய்போல்குலைக்கின்ற நயமிலாப்பெண்களுடன் — சே
கொண்டவனடித்தாற் கூடையினாலடித்து
அண்டையயலறிய அழுகின்றபெண்களுடன் — சே
தன்னிடத்திலேகுற்றங்கள் ஜாஸ்தியாய் வைத்துகொண்டு,
அந்நியர்குற்றம்எடுத்து அதிகம்பேசும்பெண்கள் — சே
அண்டைவீட்டுக்காரிக்கவாளாண்புடையானகை செய் தால்,
கண்டுசகிக்காமலேதன் கணவனைக்காய்பவளை — சே
மாத்தரையில் துன்மார்க்க வார்த்தைகளைப்பேசுகின்ற
கூத்துகளைபோய்பார்க்கும் கொடியபெண்களுடனே — சே
கணவன் சம்பாதனையைக் கண்டுசெலவுசெய்து
கணவனை மீத்தாமல் கடன்காரராக்குவோரை — சே
அண்டைவீடெதிர்வீடு எல்லாவீடும்நுழைந்து
சுண்டுகறிபதம் பார்க்குஞ் சுறணைகெட்டவருடன் — சே
பூர்த்தியாய்வீட்டில் திருடும் பொருள்களையண்டைவீட் டில்,
சேர்த்துவைத்து மோசம்பொருந்தியபெண்க ளுடனே — சே
ஊற்றைப்பல்லைவிளக்காமல் உதையத்தெழுந்திருந்து
சோற்றுப்பானைதொடுகின்ற சுறணைக்கெட்டவருடன் — சே
அன்புடையகறிசோறு அமாவாசைக்காக்கிவைத்து
பின்பு தலைமுழுகுமப் பீடைபிடித்தவளுடன் — சே
வீட்டில்மாமியாரைத் தெருவிளக்குந் துடப்பத்தைக்
காட்டிகாட்டிதிட்டுகின்ற கடைகெட்டவளுடனே — சே
கனிவுள்ள புருஷனைக் கண்டபடி திட்டியூர்க்குத்
தனிவழியோடுகின்ற சண்டாளப்பெண்களுடன் — சே
தாய் தந்தைபேச்சை தள்ளி தன்பேச்சைகேட்பானெ ன்று
வாய்சோற்றில் கணவற்கு மருந்திடும்பாவியுடன் — சே
இதுவுமது.
புன்னாகவராளிராகம் — ஆதிதாளம்
நல்லமழை பெய்யுமம்மா — கருப்பு நீங்கி
நாடு செழிக்குமம்மா.
இல்லாதவனாயினு மிருப்பவனாயினும்
கல்லாதவனாயினுங் கணவனைப்பூசித்தால் — நல்ல
வேறொருத்தியைக்கணவன் விரும்பினபோதிலும்
மறுவார்த்தைசொல்லாதே மனையாளிருந்தாக்கால் — நல்ல
தன்னுடையநகைகளை சக்களத்திக்கியென்றாலும்
நன்னயமாகக்கொடுக்கும் நாயகிகளிருந்தாக்கால் — நல்ல
மாமனாரைமாமியாரை மாநிலத்தில்தெய்வமென்று
பூமலர்க்கொண்டர்ச்சிக்கும் பூவைமார்களிருந்தால் — நல்ல
காலையிலெழுந்திருந்து கணவனடிபணிந்து
சீலமுடன் வீட்டுவேலை செய்யும்பெண்களிருந்தால் — நல்ல
தன்குழந்தையைப்போலும் சக்களததிபெற்றதை
இன்பமுடன் பார்க்கின்ற யேந்திழைமாரிருந்தாள் — நல்ல
நாயகனடித்தாலும் நடுவொன்றும்பேசாமல்
வாய்மூடிக்கொண்டிருக்கும் வனிதையரிருந்தால் — நல்ல
வந்தவிருந்தினரை மகிழ்வோடுபசரித்து
அந்தமுள்ள நற்புகழை யடையும்பெண்களினால் — நல்ல
சத்தியந்தயாளதர்மம் சாந்தமுதலான
உத்தமகுணங்களை யுடையபெண்களிருந்தால் — நல்ல
மாமழிசை ஜெகநாதன் வழுத்துநீதியின்படி
பூமியில்நடக்குமென்னைப் புரக்குந்தாய்மார்களாலே — நல்ல
நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம் முற்றுப்பெற்றது.