முருகர் சிந்து
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
முருகர் துணை
திருப்போரூர்
முருகர் சிந்து.
சென்னை சூளை
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
சுந்திரமுருகர் சிந்தெனும்பாட்டை
விந்தையதாயுரைக்க — விநாயகா
உன்டிையுந்துணையே — ௧
திருத்தனி[ணி]முருகா திருமகன்மருகா
வருத்தஞ்செய்யாமலிப்போ — முருகையா
வந்தெனையாளுமையா — ௨
தணிகாசலவாசா தெய்வானைநேசா
பணியுமடியேனிடர் — முருகையா
போக்கியெனையாளுமையா — ௩
எட்டிகுடிவேலா உமையவல்லிபாலா
சிட்டர்தொழுஞ்சீலா — முருகையா
சிறியேனை வந்தாளுமையா — ௪
செந்திற்பதியானே சேவற்கொடியானே
இந்திரர்போற்றும்வேல் — முருகையா
எளியேனைக்காருமையா — ௫
சிங்காரவேலா சூரர்கள்காலா
கங்காதரன்பாலா — முருகையா
கருணை புரிந்தாளுமையா — ௬
பழனிமலையாண்டி பாதமதைவேண்டி
தொண்டனடியோனிடர் — முருகையா
தொல்வினையைத் தீருமையா — ௭
திருப்போரூரானே திருச்செந்திலூரானே
வருத்தப்படுவோனை — முருகையா
வந்தாண்டுகொள்ளுமையா — ௮
சண்முகதேவா சாஹித்யபாவா
உன்மனமுமிறங்கி — முருகையா
உகந்தெனையாளுமையா — ௯
கந்தாகுகனே கதிர்வேல்முருகா
எந்தாயிதுவேதருணம் — முருகையா
இணையடி தந்தாளுமையா — ௰
ஆறுமுகநாதா அடியேன்மேல்வாதா
வேறு முகம்பாராமல் — முருகையா
வந்தெனையாளுமையா — ௧௧
உன்பதந்தானே உருதியாய்நானே
எண்ணித்துதிப்பதற்கு — முருகையா
எண்ணிமனந்தாளுமையா — ௧௨
எந்தன்மீதே னித்தனைவாது
சந்தஞ்செய்யாது — முருகையா
சற்றுமுகம்பாருமையா — ௧௩
உனையன்றிவேறே தெய்வமுண்டோகூறு
எனைவந்தாளுகற்கே — முருகையா
இதுசமயம்பாருமையா — ௧௪
உந்தனைத்தேடி உருகினேன்வாடி
வந்தனையேநாடி — முருகையா
வரமருள்கோடியையா — ௧௫
கல்விப்பொருளால் கருத்தில்துதிக்கில்
செல்வப்பொருளளித்து — முருகையா
செல்வனையாளுமையா — ௧௬
பாவியிலும்பாவி பாரிலுனைத்தாவி
கூவிக்கதறுமுந்தன் — முருகையா
குழவியெனையாளுமையா — ௧௭
பவளச்செவ்வாயா பார்புகழ்தூயா
மூவர்கள்சகாயா — முருகையா
மூத்திதந்தாளுமையா — ௧௮
மாமலர்ப்பாதா மறையவர்போதா
தாமதஞ்செய்யாமல் — முருகையா
தமியேனைக்காருமையா — ௧௯
புள்ளிமயிலேறும் வள்ளிமணவாளா
வள்ளமுகவழகா — முருகையா
வடியேனைக்காருமையா — ௨௦
சுரர்துதிநாதா நிரைததுபோதா
மருமலர்பாதாவுந்தன் — முருகையா
மனமகிழ்ந்தெனையாளையா — ௨௧
அல்லும்பகலும் அறுபதுநாழிகை
அல்லல்படுமெனையும் — முருகையா
ஆதரித்தாளுமையா — ௨௨
விளங்கியவேதம் விண்ணோர்கணிதம்
களங்கமறபோற்றிப்பதம் — முருகையா
காணநான்வாருமையா — ௨௩
மதனவிநோதா மயமலைநாதா
நிதமலர்கொண்டுபணி — முருகையா
நேயனையாளுமையா — ௨௪
நித்தமுனைத்தேடி யேத்திபதம்பாடி
நத்துகின்றவடியேனை — முருகையா
நீதியுடனாளுமையா — ௨௫
ஒதுபவர்தங்கள் உள்ளத்திருக்கும்
வேதப்பொருளேயெந்தன் — முருகையா
வினைதீரப்பாருமையா — ௨௬
அல்லிடுநீரா ஆறுமுகத்தீரா
துள்ளிமயிலேறிவந்தே — முருகையா
தொண்டனைக்காருமையா — ௨௭
அஞ்ஞானந்தன்னை அகலும்படிக்குன்னை
மெஞ்ஞானத்தாயற்றுக்கும் — முருகையா
மைந்தனையாளுமையா — ௨௮
வேதவிநோதா வேந்தர்கணீதா
நாதாவுன்பாதமதை — முருகையா
நம்பினதினாலெனையாளுமையா — ௨௯
கன்னியரைக்கண்டு காமன்கணைக்கொண்டு
உன்னிடபாதம்மறந்து — முருகையா
உன்னருள்தாருமையா — ௩௦
மங்கையரைப்பாராமல் மயங்கித்திரியாமல்
தங்கத்திருவடிகள் — முருகையா
தந்தாண்டுகொள்ளுமையா — ௩௧
ஐம்புலனாலே அன்பாயுன்மேலே
தென்பாகயான்பாட — முருகையா
துன்பமதைத் தீருமையா — ௩௨
ஆனந்தமாக அடியேனுக்காக
தானந்தமாகவந்து — முருகையா
தமியேனைக்காருமையா — ௩௩
பாலன்படுந்துயரம் பாரெல்லாம்புகழும்
கோலப்பதந்தந்து — முருகையா
குறைவின்றியாளுமையா — ௩௪
எலிந்துமெலியாமல் நாடோறும்வாடாமல்
கலியனும்வாராமல் — முருகையா
கார்ப்பதுன்பாரமையா — ௩௫
சிறியவன்யானும் செய்தபிழைதானும்
கருணையுடன்பொருத்து — முருகையா
கனிவோடுரட்சியுமையா — ௩௬
வஞ்சகந்தீர வடியேன்கடைத்தேற
கொஞ்சங்கடைக்கண்வைத்து — முருகையா
கிருபைபுரிந்தாளுமையா — ௩௭
சம்சாரந்தன்னில் சார்ந்துலகில்
இம்சைப்படுமெனையும் — முருகையா
ஈடேறப்பாருமையா — ௩௮
அன்னைதந்தைநீ ஆதரிப்பாயே
உன்னையன்றிவேறுதுணை — முருகையா
ஒருவருமில்லையையா — ௩௯
ப[யம்]த்தியாயுன்னை போற்றவுமென்னை
சத்தியமாகவுந்தன் — முருகையா
சித்தம்வைத்தாளுமையா — ௪௦
பொன்னுலகத்தில் புரந்தானைக்காத்ததுபோல்
என்னையுமேகாத்துன் — முருகையா
இன்பம்வைத்தாளுமையா — ௪௧
நிலமையாயுன்னை நினைத்தோர்கடம்மை
உலகிலலையாமல் — முருகையா
உறுதியுடனாளுமையா — ௪௨
கோடிகொடிபிடிக்க குன்றுபோல்வந்துநீ
ஆபத்தைதீர்த்திடுவாய் — முருகையா
அடியேனைக்காருமையா — ௪௩
சத்திவடிவேலெடுத்து சங்கரனார்தன்மகனே
பக்தியுடன்றொழுதேன் — முருகையா
பட்சம்வைத்துக்காருமையா — ௪௪
வள்ளிமணவாளா வான்[வார்]மயில்வீரா
புள்ளிமயிலேறிவரும் — முருகையா
என்னைஅன்புடன்காருமையா — ௪௫
பாசமுடனாடும் பக்தர்பவமோடும்
தலம்துதிகந்தப்பன்பாடும் — முருகையா
தமிழ்நீயருள்தாருமையா — ௪௬
முருகர்சிந்து முற்றிற்று.