மீனாட்சியம்மன்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
அம்பிகை துணை
மதுரை
மீனாட்சியம்மன்
சென்னை சூளை
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
அறுசீரடி யாசிரிய விருத்தம்.
எனக்குஅயன் விதிப்படியோ
பூருவத்தின் செயல்தானோ வேதோவம்மா
உனக்கடுமை யானபின்பு
யேதுகுறைவந்தாலும் யுனக்கேபாரம்
வனக்கிளியே மலர்த்திருவே
சொக்கரிடபங்கில்வளர் வனசமாதே
யென்மனக்கவலையார்க்குரைப்பேன்
யெனக்கிறங்கவேண்டுமம்மா மதுரைவாழ்வே. — 1
இனம்பிரிந்த மானதுபோல்
உடல்பதைத்துவலுமையோ டிளைத்தென்னாளும்
மனம்பதறி உழன்றுழன்று
அடியேனுக்கருள்சொற்ற கல்நெஞ்சோதான்
நிசம்படைத்த பெருக்கமதோ
திருவனந் தம்பராமுகமோ தாயேயென்மேல்
வனம்பரவிக் கடம்பவன
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 2
தாயிழன்ற கன்றதுபோல்
பரதவித்து நிலைகுலைந்து தவித்தென்னாளும்
தீயிலும் மெழுகதுபோ
லுருகிமனம்வெருங்கூடாய் திகைத்தேனம்மா
தூயமலர் புரந்திருவே
நடம்புரியும்பதத்தாளே தோகைமாதே
மாயவற்கு சகோதரியே
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 3
பொல்லாத நெடுநீவி
பழிக்கஞ்சிபழிசுமக்கப் போராய்போராய்
சொல்லாத நாளுமுண்டோ
சொன்னாலுங்கேட்கிலையோ யென்சொற்கூந்தல்
யெல்லாரும் வாழ்ந்திருக்க
நானொருவன் தாழ்ந்திருக்க இயலோ அம்மா
வல்லாறு களபமுலை
மாமயிலே மீனாட்சி மதுரைத்தாயே. — 4
இருபொழுது வருமையினா
லனுதினமும்பிணியதனா விளைத்துவாடி
உருகுவது அயன்விதியோ
அல்லவென்றாலுன்செயலோ உரைக்கமாட்டேன்
திருவுருவே அருளொளியே
தெள்ளமுர்தேசேயிழையே தேவர்போற்றும்
மருவணியுங் குழலணங்கே
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 5
நச்சுகின்ற போதுபே
ருலகில்மயங்கிவருமையில் னலிந்தென்னாளும்
சஞ்சலமே சமுத்திரமாய்
அலையதனில் துரும்பதுபோல் தவித்தேனம்மா
கொஞ்சுகிலி மொழியாளே
கஞ்சமலர்கரத்தாளே தோகைமானே
வஞ்சியிடை திருவனங்கை
சொக்கர்பங்கில் மீனாட்சி மதுரைத்தாயே. — 6
அதிமதூர விதரணம்
பாடுவது உன்செயலோ அதுவல்லாமல்
நதிதரித்தோ ரிடப்பாகம்
விளங்குகின்றமாமயிலே நளினமானே
கெதிபெறவே யடியேனுக்
குனதுபதந்தந்தருள்வாய் கிருபைவைத்து
மதினுதல்போல் திருவனங்கை
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 7
உலையிலிடு மெழுகதுபோ
லுருகிமனம் வெங்கூடா யுலர்ந்துவாடி
நிலைகுலைந்து மதிமயங்கி
நின்று மிகபரதவிக்க நீதியோசொல்
கலைமகளே வடிவனங்கை
மகலமுகத்திருமாலே கருணையாளே
மலைமகளே அகந்தழைக்கும்
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 8
இளமைதனில் வருமையினால்
மனதுமிகநொந்துருகி இடைந்துவாடி
விளைநிலத்தில் களர்விழுந்த
வாரதுபோலடியேனும் விளங்கநின்றேன்
குளையுடச்சி யன்னநடை
குயில்மொழிச்சி நீகருணை கூர்ந்தூாட்சி
மழலைமொழி குயிலனங்கை
சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 9
திடமுடனே யுனைப்பாட
செல்வம்வுண்டாம் கல்வியுண்டாம்
அடவுடனே யிப்புவியில்
யெந்தனுடமொழிக்கிரங்கி அருளேசெய்து
சடைமுடியா ரிடப்பாகம்
பச்சைநிறமாய்நின்ற தையல்மானே
மடமயிலே உன்னுடைய
மலர்ப்பாதம் தந்தருள்வாய் மதுரைத்தாயே. — 10
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம்
முற்றிற்று.