மாசிலாமணீஸ்வரர் பதிகம்
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சிவமயம்.
திருமுல்லைவாயல்
மாசிலாமணீஸ்வரர் பதிகம்.
சென்னை
ஆதிமூலம்பிரஸில்
பதிப்பிக்கப்பட்டது
1922
கடவுள் வாழ்த்து.
முக்கணனென்னு முதல்வனையேத்தப்
பக்குவப்பதிக்கம் பத்தும்வகுமே.
ஆசிரியவிருத்தம்.
ஆதியேபரனே யருட்பெருங்கடலே
யப்பனே பிரமன்மாற்கறிய
சோதியேசுடரே சுடர்மணிக்குன்றே
சுத்தனேயென்னை யாண்டருள்கூர்
நீதியேநிறைவே நின்மலவொளியே
நித்தனே திருமுல்லைவாயல்
தீதிலாதுரையுஞ் சச்சிதானந்த
தேசனே மாசிலாமணியே. — ௧
மாலொடுவிதியுந் தேடியுங்காணா
மன்னனே மன்னவர்க்கரசே
பாலொடுகலந்த தேனிநற்சுவையே
பன்னகாபரணனே வடியேன்
காலனுக்கஞ்சா துன்கழலடியை
கருணைசெய் கருணைவாருதியே
சீலமாதவர்சூழ் திருமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௨
வானவர்போற்றும் வள்ளலேசோதி
வரையுறுவாகியே முன்னம்
ஏனமாலயனுஞ் செருக்கள[ற]நின்ற
வெந்தையே தீவினைக்காட்டை
ஞான நற்றீயால் கொளுத்தியுட்புடலத்தை
நலம்பெறத்திருத்தி யேர்க்கருள்கூர்
தேனலர்பொழில்சூழ் திருமுலைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௩
கடவுளர்காணாக் காரணவொளியே
கவினுலாங் கபிலைநாயகனே
கொடியிடைவல்லி யிடம்படர்பவளக்
குன்றமே கோதிலாவமுதமே
கடையனேற்றன்னை யாள்மதுன்பாரமே
கற்பகப்பூந்துணர்க் காகவே
திடமதிற்சிகரி திருமுல்ளை வாயல்
தேசனே மாசிலாமணியே. — ௪
பிரமனுங்காணாத் திருமுடிவளைத்து
பிராமணப்பிள்ளை முன்காண்
அருளுநல்வழிக்குத் துணைவனென்றறிந்து
மன்பிலே னெவ்வகையுய்வேன்
திருவடிக்காட்டித் தீவினையோட்டிச்
சிவானந்தத் தெள்ளமுதூட்டி
தெருளினைக்கூட்டி யருணமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௫
கதிர்மதியனன்முக் கண்ணனே விண்ணேர்
கண்ணனென் கண்ணற்குமரிதாய்
துதியடியவர்முன் னெளியதாய்வருமெய்ச்
சோதியே யாதியம்பரனே
ததியினென்கோப தாபமுந்தீர்த்து
தன்னருள்புரி தயாபரனே
ததியருக்கன்னந் தருமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௬
மாயவன்சால வன்பினாலுருகி
மலர்க்கணா லர்ச்சனைபுரிய
நேயமாயுவந்தி நேமிமுன்னளித்த
நித்தனே நிராமயச்சோதி
தூயமேனியனே கொடியிடைத்துணைவி
துணைவனே தோன்றிடாத்துணையே
தீயனேற்கருளுந் திருமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௭
கன்மியாமடியேன் கலவிநோய்தீகக்
கருணை மாமருந்தினை ரளித்துன்
தன்மயமாக்கி யென்மயநீக்கிச்
சன்மவாதனை வலிபோக்கி
நன்மயதாகு நின்மயந்தருவாய்
நதிமதிமுடித்த வேணியணே
சின்மயமான திருமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௮
மன்னவர்மன்ன னாகியசோழன்
மகிழ்வுறத் தடுத்துவந்தருள்கூர்
அன்னையேயென்ற னப்பனேகுருவே
ஆதறித்தாளுந் தெய்வமே
வன்னிமாமலையாய் மாலயற்கரித்தாய்
வளர்ந்தமெய்ப் பரஞ்சுடர்க்கொழுந்தே
தெனனவன்முதலோர் தொழுமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௯
அகமாயானந்த பேதமாமுயிரை
யளித்ததினிறைந் தளித்தழிக்க
நிகரிலாமூன்று வுருபமாய்நின்ற
நித்தனே மெய்த்தனர்வாழ்வே
பகரருமறையின் முடிவினிற்படர்ந்த
பராபரநிராமய வொளியே
சிகரகோபுரநீ திருமுல்லைவாயல்
தேசனே மாசிலாமணியே. — ௰
மூவரும்வாழ்க மோன்
மந்திர முதலாயுள்ள
தேவரும்வாழ்க நல்ல
சிவனடியார்கள் வாழ்க
யாவரும்வாழ்க ஞான்
வஞ்செழுத்தென்றும் வாழ்க
மாவருந்தவத்தோர் வாழ்க
மாசிலாமணியே வாழ்க.
மாசிலாமணீஸ்வரர் பதிகம் முற்றிற்று.