குள்ளத்தாராசிந்து
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சிவமயம்.
குள்ளத்தாராசிந்து
சென்னை — சூளை
நிரஞ்சனவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
விநாயகர் வணக்கம்.
விருத்தம்.
சிந்துசூழுலகிலுள்ளோர் திரௌபலங்கொள்ளவேண்டி
விந்தைசேர்மனதுக்கோதும் வியன்மதி மாலைதன்னை
கந்தமார்சிந்தாய்கூறக் கரிமுக னுபயபொற்பூங்
கொந்தலர்க்கழலைகளுங் கூப்பியேபுணிகுவாமால்.
தூன்முகம்
சிந்து கண்ணிகள்
சித்திவிநாயகனை ஏ குள்ளத்தாரா நீ
சிந்தைதனிலேவகிப்பாய் ஏ குள்ளத்தார நீ
ஏகுலிக்கி தில்லாலே நீ முன்னாலே நான்பின்னாலே
சிந்தை தனிலேவகிப்பாய் ஏ குள்ளத்தாரா — ௧
பாடலீசன் பொற்பதத்தை ஏ குள்ளத்தாரா நீ
பக்தியுடன் போற்றிசெய்வாய் ஏ குள்ளத்தாரா — ௨
பேர்பெரியநாயகியை ஏ குள்ளத்தாரா நீ
வெற்றியுடன்போற்றிசெய்வாய் ஏ குள்ளத்தாரா — ௩
வேலவனைப்போற்றிடுவாய் குள்ளத்தாரா நீ
வினைகளகன்றிடுவாய் குள்ளத்தாரா — ௪
வள்ளிதெய்வானைபதங் குள்ளத்தாரா நீ
வண்மையுடன்போற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௫
ஆதிமூலப்பொருளை குள்ளத்தாரா நீ
யன்புடனேபோற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௬
செந்திருவின் பொற்பதத்தைக் குள்ளத்தாரா நீ
சிந்தையிலிருத்திடுவாய் குள்ளத்தாரா — ௭
தாயார்சரஸ்வதியை குள்ளத்தாரா நீ
சந்ததமும்போற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௮
ஆருயிர்க்குருதுணையாங் குள்ளத்தாரா என்
தன்பின்வழியேநடங்கிற் குள்ளத்தாரா — ௯
சந்த்ரகாந்தமேடையுண்டு குள்ளத்தாரா வதைச்
சாரவும்பொன்னேணியுண்டு குள்ளத்தாரா — ௰
பன்னிருகால்வாசியுண்டு குள்ளத்தாரா வத்தப்
பற்றப்பரிசுத்தனுண்டு குள்ளத்தாரா — ௧௧
சோமவட்டமாம்பதியிற் குள்ளத்தாரா நீ
சுகித்தமுர்தமுண்டிருப்பாய் குள்ளத்தாரா — ௧௨
ஏமனுமடறுவானோ குள்ளத்தாரா நீ
என்வழிநடப்பையாகில் குள்ளத்தாரர — ௧௩
இந்திரப்பட்டமும்பெறுவாய் குள்ளத்தாராசொல்
இருவினையகன்றீடுவாய் குள்ளத்தாரா — ௧௪
கட்டிலுண்டுமெத்தையுண்டு குள்ளத்தாரா நாம்
கலந்துசுகிக்கலாமே குள்ளத்தாரா — ௧௫
தலையிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா ரத்ன
சடைபில்லைதானுமுண்டு குள்ளத்தார — ௧௬
சடைநாகந்தானுமுண்டு குள்ளத்தார வதைச்
சார்ந்தகுச்சுகுப்பியுண்டு குள்ளத்தாரா — ௧௭
காதிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா நல்ல
கம்மல்சிமிக்கியுண்டு குள்ளத்தாரா — ௧௮
கொப்புமுருகுமுண்டு குள்ளத்தாரா நற்
கொந்தளப்பொன்னோலையுண்டு குள்ளத்தாரா — ௧௯
கத்திரிப்பாவலுடனே குள்ளத்தாரா நல்ல
கனத்தசம்புலுமுண்டு குள்ளத்தார — ௨௦
நத்தூமூக்குத்தியுண்டு குள்ளத்தாரா நீ
நாணயமாய்பூட்டிக்கொள்ளக் குள்ளத்தார — ௨௧
கழுத்திலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா உயர்
கண்டசரமாலையுண்டு குள்ளத்தாரா — ௨௨
கைக்குத்தங்கக்காப்புமுண்டு குள்ளத்தாரா
கனத்தகொலுசுமுண்டு குள்ளத்தாரா — ௨௩
இடையிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா
இசைந்ஒட்டியாணமுண்டு குள்ளத்தாரா — ௨௪
பாதசாந்தண்டையுண்டு குள்ளத்தாராக நீ
பண்புடனணிந்துகொள்ளக் குள்ளத்தாரா — ௨௫
விரலிற்றரித்திடவுங் குள்ளத்தாரா வெகு
விந்தைமோதிரங்களுண்டு குள்ளத்தரரா — ௨௬
இழையாயிரம்பொன்பெற்ற குள்ளத்தாரா உனக்கு
சித்திரவண்ணச்சேலையுண்டு குள்ளத்தாரா — ௨௭
சரிகைரவிக்கையுண்டு குள்ளத்தாரா திகழ்
தங்கவங்கிபில்லையுண்டு குள்ளத்தாரா — ௨௮
பத்துலட்சம்விலையுள்ள குள்ளத்தாரா உயர்
பங்களாக்கள் தானுமுண்டு குள்ளத்தாரா — ௨௯
தங்கத்தாலேகிண்ணியுண்டு குள்ளத்தாரா நீ
சாதமருந்திடவே குள்ளத்தாரா — ௩௦
வெள்ளிப்பாத்திரங்களுண்டு குள்ளத்தாரா நீ
வேணதையனுபவிப்பாய் குளளத்தாரா — ௩௧
கைப்பிடிக்கக்கால்பிடிக்கக் குள்ளத்தாரா சொலுங்
கனத்ததோழிகளுண்டு குள்ளத்தாரா — ௩௨
ஏரிச்சவாரிசெய்யக் குள்ளத்தாரர் உனக்
கிசைந்தபல்லாக்குமுண்டு குள்ளத்தாரா — ௩௩
தந்தநாற்காலியுண்டு குள்ளத்தாரா நீ
சார்[ய்]ந்துகொண்டிருப்பதற்கு குள்ளத்தார — ௩௪
சோபாக்கள்தானுமுண்டு குள்ளத்தாரா என்
சுந்தரியேநீயிருக்கக் குள்ளத்தாரா — ௩௫
பொன்னுஞ்சற்பலகையுண்டு குள்ளத்தாரா என்
பொற்கொடியேயாடுதற்கு குள்ளத்தாரா — ௩௬
நன்னயமாய்பேசுதற்கு குள்ளத்தாரா நல்ல
நாத்திமானேகருண்டு குள்ளத்தாரா — ௩௭
மாமியுண்டுமாமனுண்டு குள்ளத்தாரா
மைத்துனானேகருண்டு குள்ளத்தாரா — ௩௮
சந்துமுண்டுபொந்துமுண்டு குள்ளத்தாரா
ஜாடைசெய்துகூப்பிடவுங் குள்ளத்தாரா — ௩௯
தென்னமரச்சோலையுண்டு குள்ளத்தாரா நீ
சிந்தைகளித்தாடவடி குள்ளத்தாரர் — ௪௦
பாக்குமரச்சாலையுண்டு குள்ளத்தாரார நீ
பந்துவிளையாடவாடி குள்ளக்தார — ௪௧
கற்பகத்தருவுமுண்டு குள்ளத்தாரா நீ
கருதியதெல்லாந்தரக் குள்ளத்தாரா — ௪௨
கெடிலந்தியுமுண்டு குள்ளத்தாரா வதின்
கிளர்காலுமுண்டு குள்ளத்தாரா — ௪௩
உன்னை நம்பிநானிருக்தால் குள்ளத்தாரா இந்த
உலகம் பொருக்கலையே குள்ளத்தாரா — ௪௪
அந்தமுள்ளமாதரசே குள்ளத்தாரா
யன்புடனருகில்வாராய் குள்ளத்தாரா — ௪௫
கிளனைநேர்மொழியினாளே குள்ளத்தாரா நீ
கிருபைசெய்துவாறாயோடி குள்ளத்தாரா — ௪௬
மயில்போலுஞ்சாயலாளே குள்ளத்தாரா என்
மனமுருகாதோடி குள்ளத்தாரா — ௪௭
அன்னநடைமாதேயடி குள்ளத்தாரா உன்
நகமுமிரங்காதோ குள்ளத்தாரா — ௪௮
அடைக்காயும்வெற்றிலையுந் குள்ளத்தாரா வெனக்
கருந்தவரியாயோடி குள்ளத்தாரா — ௪௯
வாசனைதிரவியங்கள் குள்ளத்தாரா நீ
வகைவகையாய்ப்பூசிக்கொள்வாய் குள்ளத்தாரா — ௫௦
சண்பகமலர்நிதமும் குள்ளத்தாரா நீ
சம்பிரமாய்மூடித்துக்கொள்வாய் குள்ளத்தாரர் — ௫௧
பாடலீசன்பொற்பதத்தைக் குள்ளத்தாரா நீ
பத்தியுடன்சேவைசெய்வாய் குள்ளத்தாரா — ௫௨
பாலும்நீறும்போலவடி குள்ளத்தாரா
நாம்பண்புடனேவாழ்ந்திருப்போம் குள்ளத்தாரா — ௫௩
மங்களமாய்வாழ்ந்திருப்பாய் குள்ளத்தாரா
இந்த வையகமுள்ளவுமடி குள்ளத்தாரா — ௫௪
குள்ளத்தாராசிந்து முற்றிற்று