கபாலீசர் பதிகம்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை
மைலாப்பூர்
கபாலீசர் பதிகம்.
சென்னை சூளை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
1923
காப்பு — வெண்பா.
மண்டலத்தோர்சூழ மயிலைவாழ்கபாலீசர்
தண்டமிழ்ப்பாமாலைதனைச் சாற்றவே — அண்டம்பூ
தாடுணைவனோடுசரந் தாங்கிமகிழ்கூர்ந்திடுகூத்
தாடுமிளங்களிரே யாள்.
சொல்லரிய சதுர்மறையின் முடிவிலின திணையடிக டுகிபுரியுமடியரினமா,
நல்வர்களுளமதனி னடனமிடு தெய்வமே நாதனே நாயடியனே,
னல்லல்கள றக்கரு ணைபுரிகின்ற நாளெந்த நாளோ வருந்திலேன்சீர்,
மல்லல்வன மோங்குதிரு மயிலையம் பதியினி[த] மருவுறுகபாலீசனே. — ௧
கூவிளநறுங்கொன்றை மாலைபுனைசங்கரா குவலய மெலாந்தருமுமா,
தேவியொரு புடைமேவு தேவனே சிறியனின் றிருவடி தொழாத பொல்லாப்,
பாவியெ னினுங்கடைக் கண்பார்த் திரட்சைசெய் பரமுனக்கே பங்கய,
வாவிசூழ்ந் திலகுதிரு மயிலையம் பதியினி[க] மருவுறுகபாலீசனே. — ௨
கஞ்சனெடுகண்ணனுங் காணவரிதாயமுக்கண்ணனே கடலில்வந்த,
நஞ்சணிகளாசருதி நாயகா நாயினே னானிலந்தன்னிதமுஞ்,
சஞ்சலப்படுதனின் றண்ணருட்கழகோ சதானந்தனே சம்புவே,
மஞ்சளவுசோலைசூழ் திருமயிலையம்பதியின் மருவுறுகபாலீசனே. — ௩
மின்னுசெஞ்சடை தன்னி லரவமோடறுகுமதிவே ணியுமணிந்தவிமலா,
என்னுடையமனவிரு ளகற்றிநின்னதுதா ளிணைக்கன்பனாக்கியருள,
இன்னுமெத்தனை நாட்கள் செல்லுமோ வறிகிலே னென்செய்வ னெந்த நாளு,
மன்னுதிருமயிலையம் பதியிலுறை யடியார்க[க்] மருவுறுகபாலீசனே — ௪
ஐயனேயெனக்கருள்செ யப்பனேயென்றுநின தினையடிக டொழுபவர்வினை,
நையவேயருள் செய்யுநாக பூஷணனேவி ணாடர்கடுதிக்கு மழுமான்,
கையனே கடையனேன் கவலைதீர்த்தாள்வ தெக்காலமோ வறிகி லேன்யான்,
வையமேத்தித் துதிசெய் திருமயிலையம்பதியிள்[ல்,ன்] மருவுறுகபாலீசனே. — ௫
பானன்மொழியாளுமையோர் பாகனே பரமனே பகவனே பாபஅரனே,
ஞானசொரூபாவடியர் நாடுபுனி தாசெய்ய நளிம்பாதாதற்பரா,
யீனனெனை யாளவுன் னுளமிரங்காவண்ணமே தெனக்குளவு புகலாய்,
வானமளாவியமாடமல்கு திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபாலீசனே. — ௬
பொங்குகடல் சூழுமிப் புடவிதனிலுழலுமென் புந்தியை மயக்கிடுமலக்,
கம்[ங்]குலறநின்கருணை யெனுஞான வொளிதா[ந்]து காத்திடா விடிலடியனே,
னெங்குசென் றார்க்குரைப் பேனெனுட்குறையெலா மினியேனு நீக்கி யருள்வாய்,
மங்குறவாழ்புன்னை வளர் திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபாலீசனே. — ௭
கறைமிடற்றண்ணலே கரைதிரையிலாதவுயர் கருணையங்கடலேபசுஞ்,
சிறையுடைக்கலபவுரு வாயம்மை பூசித்த செல்வமேசிறியனேனுட்,
குறைகளைந் தாளற்கு னுளமினுமிரங்காக[க்] கொள்கையேதோ வறிகிலேன்,
மறையவாசசெயமகநீடு திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபரலீசனே. — ௮
காரிகையர் காமவா ரிதிபடிந்தேறவொரு கரையறி கிலாதுழலுமிப்,
பூரியனினடியர்பணி விடைபுரியவருள் செய்பரி பூரணாகமழ்கடுக்கைத்,
தாரிலகுமணிமார்பனே சுந்தரசேகரசதா சிவபராமாதமும்,
மாரிபொழி திருமயிலையம்பதியினடியார்க[க்] மருவுறுகபாலீசனே. — ௯
அளவரியவொருபரம் பொருளாகி நின்றிலகு மப்பனே வொப்பிலாயென்,
னுளமதனிலுறுதுயர்க ளுரைசெய வென்வசமலநி னுளமறியு மருள்புரிவையே, கோ
மளவுமையோடொரு விடையிலடியர்துய ரகலவரும் வள்ளலேதெள்ளமுதமே,
வளமைமிகு திருமயிலையம்பதியிலடியர்க[க்] மருவுறுகபாலீசனே. — ௰
திருமயிலைக் கபாலீசர்பதிகம் முற்றிற்று.