கேசவப்பெருமாள் பதிகம்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
ஸ்ரீ
ஸ்ரீராமஜெயம்.
கேசவப்பெருமாள் பதிகம்.
சென்னை சூளை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
1923
சடகோபர்துதி — வெண்பா
சீரார்தவமுனிவர் சேர்கான்பரியூர்வாழ்
ஏராருங்கேசவன்ற னின்னடியிற் பேரார்
திடமாகவோர் பதிகஞ் சிந்தையுடன்செப்பச்
சடகோபனேயருணீ தா.
ஆசிரியவிருத்தம்.
திருமணியிமைக்கு மகுடசேகரமுந் திருவருட் பொழியு நேத்திரமுந்,
தெருளணிமதியை யனையமா முகமுஞ் செப்புதற்கரிய செங்காமும்,
மருவியவேதச் சிலம்பொலிபதமும் வறியனேன்காண வந்தருள்வாய்,
கெருடவாகனனே கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 1
தஞ்சமென்றடைந்த கஜேந்திரனிடுக்கந் தவிர்த்தி டவில்லையா முன்ன,
மஞ்சிடாதுயருங் கிரிதனைத்தூக்கி யா[த]வரைக் காத்திடவிலையா,
வஞ்சனையில்லாம லென்ற னைக்காக்க மனமிரங்காவித மென்னோ,
கிஞ்சுகமுலவுங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 2
கொடுமைசெய்பத்மா சூரனையெரித்த கொண்டல் வண்ணா வுனக்குகந்த,
அடிமையென்றெண்ணா திருந்திடிலுன்னை அனைவரும்வைகுவ ரன்றோ,
நெடுகிலுங்கவலை கொள்ளுமென்பலத்தை நீக்கியாண்டிடுவதுன் கடனாங்,
கெடுமையில்லாத கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 3
மருமலற்குழலிற் சொருகுமின்மடவார் மயல்வலைப்பட் டகமகிழ்ந்து
பொருடனையுலகி லீட்டிநின்றிவ்ய பொற்பதத் துணையினைமறந்து,
கருங்கடற் றுரும்புபோ லலைந்திடுமிக் கடையனைக் காத்தருள் புரிகுவாய்,
கிருதுகள் வளருங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 4
அரிகரிவீர ராகவாவேத வாதிநாராயணா முகுந்தா,
கரிவரதா, கோபாலா கோவிந்தா கர்த்தனே மாயவாவுன்றன்,
விரிமலரடியைத் துதித்திடவறியா வினைய னேன்றன்னை யாள்குவையே,
கிரிவளர்ந்தோங்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 5
சுரந்தலைவலி காமாலைவெண் குட்டஞ் சோகைநீரிழிவு விப்புருகி,
உரம்பெறுபேய் சூனியமுதலிய யாவுமுன் றிருச்சன்னிதி காணப்,
பரிதியைக்கண்ட பனியெனவகலும் பகரவுன்மகிமை யென்றாமோ,
கிரண மாமதில்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 6
தந்தை சொல்மிக்க மந்திரமிலெனச் சாற்றியமொழிதனை யகற்றி,
அந்தநற்பிரக லாதனைக்காத்த வருநரசிங்கமே யரசே,
எந்தையேயடியே னினிப்பிறவாம லிருந்திடநீ யருள்புரிவாய்,
கொந்துவானரஞ்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 7
ஒன்றிரண்டல்லவே யென்குறை யெழுத வோலையிலடங்கிடா தந்தோ,
வின்றுசன்னிதிமுன் னிருந்து சேய்கதற வெங்குவந்தா யுனக்கென்ன,
வென்றுகேளாம லிருந்திடின் முனமிவ் வேழையேன் செய்தவப் பயனோ
கின்னரர்துதிக்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 8
ஒளிரு நெய்யுந்தண் டிருந்துழாயுங் கொண்டுள் ளோர்வினைகளை யோட்டத்,
தெளிவுடன்வழங்கி வருவதைக்கேட்டுத் தேடியான்வந்து நின்றேன்,
உன்னிரு கமலக் கடைக்கணானோக்கி நல்லருளீந்திடிற் பெரிதோ
கிளானமுலவுங் கான்பரியூர்[வாழ்] கேசவா மாசிலாமணியே — 9
என்ன தீவினையைப் புரிந்தனனந்தோ வேழையே னின்னதென் றறியேன்,
பன்னுருமுனது மலர்ப்பதநாளும் பணியுமென் மனக்குறை யகற்ற,
வின்னிலத்தேவந் தருள்புரியாம லிருப்பதுன்சீர்க் கழகாமோ
கின்னரிமுழங்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 10
அற்புதவிபீஷணற்கு முன்னபயமளித்த வைகுந்த வாசாநின்,
பொற்புறுமலர்த்தாடு திக்கவுநாவிற் பொருந்திடக் கல்வியும் புகழுஞ்,
சற்பனரிணக்கமும் பெருநிதியுந்தமியனுக் கீந்துகாத்தனிப்பாய்,
கெற்பனங்கள்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 11
கேசவப்பெருமாள் பதிகம் முற்றிற்று.