காட்சிக்கண்ணி contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சிவமயம். திருவருட்பிரகாசவள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் அருளிச்செய்த காட்சிக்கண்ணி. வாணீவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

வெண்பா. கந்தமுறுமெஞ்ஞானச் சோதியுமாய்வந்த வித்தகஞ்சேராமலிங்க வேளுரைத்தவுத்தமஞ்சேர் கர்த்தனருளாங்காட்சிக் கண்ணிகளைச்சிந்தித்தால் அத்தமுடமுத்தியுல காம். சாமா-சாப்புதாளம். ஆணிப்பொன்னம்பலத்தே கண்டகாட்சிகள் அற்புதக்காட்சியடி — அம்மா அறபுதக்காட்சியடி — ௧ ஜோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு வீதியுண்டாச்சுதடி — அம்மா வீதியுண்டாச்சுதடி — ௨ வீதியிற்சென்றேனவ் வீதிநடுவொரு மேடையிருந்ததடி — அம்மா மேடையிருந்ததடி — ௩ மேடையிலேறினேன் மேடையிலங்கொரு கூடமிருந்ததடி — அம்மா கூடமிருந்ததடி — ௪ கூடத்தில்நாடவக் கூடமேலேழ்நிலை மாடமிருந்ததடி — அம்மா மாடமிருந்ததடி — ௫ ஏழ்நிலைக்குள்ளு மிருந்தவதிசயம் என்னென்றுசொல்வேனடி — அம்மா என்னென்றசொல்வேனடி — ௬ ஓர்நிலைதன்னி லொனி[ளி]ர்முத்துவெண்மணி சீர்நிலமாச்சுதடி — அம்மா சீர்நிலமாச்சுதடி — ௭ பாரோர்நிலையிற் கருநீலஞ்செய்ய பவளமாச்சுதடி — அம்மா பவளமாச்சு நடி — ௮ மற்றோர்நிலையில் மரசுகப்பச்சைசெம் மாணிக்கமாச்சுதடி — அம்மா மாணிக்கமாச்சுதடி — ௯ பின்னோர்நிலையிற் பெருமுத்துவச்சிர பேர்மணியாச்சுரடி — அம்மா பேர்மணியாச்சுதடி — ௰ லேறோர்நிலையில் மிகும்பவளத்திரள் வெண்மணியாச்சுதடி — அம்மா வெண்மணியாச்சுதடி — ௧௧ பகலோர்நிலையிற் பொலிந்தியகன்மணி பொன்மணியாச்சுதடி — அம்மா பொன்மணியாச்சுசடி — ௧௨ பதியோர்நிலையிற் பகர்மணியெல்லாம் படிகமாச்சுதடி — அம்மா படிகமாச்சு தடி — ௧௩ ஏழ்நிலைமேலே யிருந்ததோர்கம்பம் இசைந்தபொற்றம்பமடி — அம்மா இசைந்தபொற்றம்பமடி — ௧௪ பொற்றம்பம்கண்டேறும் போதுநான்கண்ட புதுமையென்சொல்வேனடி — அம்மா புதுமையென்சொல்வேனடி — ௧௫ ஏறும்போதங்கே பெதிர்ந்தவகைசொல்ல என்னளவல்லவடி — அம்மா என்னளவல்லபடி — ௧௬ அங்கங்கேசத்திக ளாயிரமாயிரம் ஆகவந்தார்களடி — அம்மா ஆகவந்தார்களடி — ௧௭ வந்துமயங்க மயக்காமனானருள் வல்லபம்பெற்றேனடி — அம்மா வல்லபம்பெற்றேனடி — ௧௮ வல்லபத்தால்வந்த மாதம்பத்தேறி மணிமுடிகண்டேனடி — அம்மா மணிமுடிகண்டேனடி — ௧௯ மணிமுடிமேலோர் கொடி முடிநின்றது மற்றதுங்கண்டேனடி — அம்மா மற்றதுக்கண்டேனடி — ௨௦ கொடிமுடிமேலாயிரத தெட்டுமாற்றுபெற்ற கோயிலிருந்ததடி — அம்மா கோயிலிருந்ததடி — ௨௧ கோயிலைக்கண்டங்கே கோபுரவாயிலிற் கூசாதுசென்றேனடி — அம்மா கூசாதுசென்றேனடி — ௨௨ கோபுரவாயிலுட் சத்திகள்சித்தர்கள் கோடிபல்கோடியடி — அம்மா கோடிபல்கோடியடி — ௨௩ ஆங்கவர்வண்ணம்வேல் வண்ணஞ்செவ்வண்ணமுன் ஐவண்ணமாகுமடி — அம்மா ஐவண்ணமாகுமடி — ௨௪ அங்கவரெல்லாயிங் காரிவரென்ன அப்பாலேசென்றேனடி — அம்மா அப்பாலேசென்றேனடி — ௨௫ அப்பாலேசென்றே னங்கோர்திருவாயில் ஐவரிருந்தாரடி — அம்மா ஐவரிருந்தாரடி — ௨௬ மற்றவர்நின்று வழிகாட்டமேலோர் மணிவாயிலுற்றேனடி — அம்மா மணிவாயிலுற்றேனடி — ௨௭ கண்ணிமவ்வாயிலிற் பெண்ணோடாணாக இருவரிருந்தாரடி — அம்மா இருவரிருந்தாரடி — ௨௮ அவகவர்காட்ட யணுகத்திருவாயிலில் அன்போடுகண்டேனடி — அம்மா அன்போடுகண்டேனடி — ௨௯ அந்[த்]திருவாயிலி லானந்தவல்லியேன் அம்மையிருந்தாளடி — அம்மா அம்மையிருந்தாளடி — ௩௦ அம்மையைக்கண்டே னவன[ள]ருள்கொண்டேன் அமுதமுமுண்டேனடி — அம்மா அமுதமுமுண்டேனடி — ௩௧ தாங்குமவரருளாளே நடராஜர் சந்நிதிகண்டேனடி — அம்மா சந்நிதிகண்டேனடி — ௩௨ சந்நிதியிற்சென்று நான்பெற்றபோது சாமியறிவாரடி — அம்மா சாமியறிவாரடி — ௩௩ ஆணிப்பொன்னம்பலத்தே கண்டகாட்சிகள் அற்புதக்காட்சியடி — அம்மா அற்புதக்காட்சியடி — ௩௪ வானத்தின்மீதுமயி லாடக்கண்டேன் மயில்குயிலாச்சுதடி — அக்கச்சி மயில்குயிலாச்சுதடி — ௧ துள்ளைவிட்டுத்தொடங்கினேன்மன்றாடும் வள்ளலைக்கண்டேனடி — அக்கச்சி வள்ளலைக்கண்டேனடி — ௨ சாதிச்சமயச் சழங்கைவிட்டேனருட் சோதியைக்கண்டேனடி — அக்கச்சி சோதியைக்கன்டேனடி — ௩ பொய்யையொழித்தப்புறப்பட்டேன்மன்றாடும் ஐவரைக்கண்டேனடி — அக்கச்சி ஐவரைக்கண்டேனடி — ௪ காட்சிக்கண்ணி முற்றிற்று.
Contents | Home