ஞானவுடற் கூறு. contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. ஞானவுடற் கூறு சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

வெண்பா சுழியறியார்க்கென்னநலஞ் சுகமறியார்க்கென்னகுரு வழியறியார்க் கென்னவெய்தும் — வாறுகாண் சுழியறியாமூலமறிந் தவ்வழியில்முத்தியடையார்க்கு நமன்காலமவர்க்கேமரணங் காண் சந்தணம்பூசிநீ சாகப்போறாய் — உன்னை சேர்ந்தபந்துக்கள் ளீமத்திற்கொண்டுபோய் செந்தணலாக்குவார் மானிடனே — ௧ அஞ்சடிவெட்டி அடிபடைபோட்டு அதற்குமேல்வீடு கட்டுகிறாய் — நீ கட்டினவீட்டுக்கு காரணமாரணங் கண்டதுண்டோசொல்லு மானிடமே — ௨ எட்டுகட்டுவீடு கட்டுகிறாய்நீ எங்கெங்கேதனத்தைப் புதைக்கிறாய் — நீ புதைத்ததனத்தை யின்னாருதென்று பிரித்துச்சொல்லடா மானிடமே — ௩ மட்டக்குதிரைமே லேறிக்கொண்டுநீ பட்டணமெங்கும் சுற்றுகிறாய் பொட்டெனவேஏம னோலைவந் தால் புரப்பட்டுபோவாயே மானிடமே — ௪ கிணத்தைச்சுற்றிப்பில் முளைத்ததுபோல கிளைக்குதேநீர் செய்தபாவம் — நீ செய்தபாவம் துலைக்கவேதான் விஷ்ணுவைத்தேட்டா மானிடமே — ௫ பருப்போடும்பர மானந்தத்தோடும் பசும்நெய்போட்டுநீ உண்ணுகிறாய் நெருப்பிலேபோட்டு கொளுத்திவிட்டால் — நீ நீராய்போவாயே மானிடமே — ௬ ஆத்திரத்தாலே பணங்காசைதேடிநீ மூத்திரக்குழியில் மாளுகிறாய் — நாளை சூஸ்திரத்தாரையை கண்டுவிட்டால் சொல்லாமல்போவாயே மானிடமே — ௭ அரியாதவஸ்துவை அரியலாமென்றார் அரியனாம்பலனை அரியுமென்றார் மதுறாநெல்லூர் சாமிகளெல்லோரும் வெறுத்துசொல்வாயே மானிடமே — ௮ ஞானவுடற்கூறு — முற்றிற்று.
Contents | Home