கீதாம்ருதம்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
கீதாமிர்தசாரம்.
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
இயற்றியது
சென்னை சூளை
ஸ்ரீ பாரதி அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
ஜாவளி-இ-ம்-பியாக்-தாளம்-ரூபகம்.
கந்தநாதா யிந்தவேளை
கருணை செய்ய வேணுமே — கந்த
தொந்தமுடைய பந்தவிடைய
துன்பத்தழுந்தி வெம்பினேன்
சிந்தை தெளிவ தெந்தன் வகையின்
செம்பொற்பாத நம்பினேன் — கந்த
பண்டுகருநூ தொண்டர் தமது
பாவந்தீர்க்க வல்லையா
அண்டுமெளிமை கண்டுமெனையா
ளாததென்ன சொல்லையா — கந்த
சோதிப்பது சாதிப்படிக்கை
சோரவிடு தன்னீதியோ
ஏதித்தனை யென் மீதிற்கொடுமை
யேழைநான் விரோதியா — கந்த
மதுரமாக மாம்பழஞ்சொன்
மகிழ்குஞ்சரி மனோகரா
பதுமமா துரிதமுலாவும்
பழனிமலை கிருபாகரா — கந்த
இ-ம்-மோகனம்-கல்யாணி-தாளம்-சாப்பு.
பல்லவி.
என் முகம் பார்த்தருளையா — நான்
ஏழையுனக்கடிமை யென்பதும் பொய்யா
அநுபல்லவி.
வன்மமென்ன பழனி மலைமுருகோனே
வகையொன்றும் தெரியாமல்வாடுகிறேனே — என்
சண்டாளனிவனென்று தள்ளாதேயென்னைத்
தண்டாயுதநீயன்றித் திக்குண்டோபின்னை — என்
தவரெத்தனை செய்திருந் தாலுமிங்குடனே
யவைமுற்று மனம்பொறுத் தாள்வதுன்கடனே — என்
வருத்துதேயடிக்கடி மாயாவிகாரந்
திருத்தியூள் வினைவலி தீர்த்திந்தநேரம் — என்
ஒன்றாவிரண்டாசும்மா வோயாததுன்ப
மென்றாலினியெந்தகா ளெய்குவதுன்பம் — என்
மாம்பழந்தமிழ்புனை வள்ளிசமேதா
பூம்பதந்தொழுநெறி புகலலாகாதா — என்
இராகம்-செஞ்சுருட்டி-தாளம் - ஆதி.
பல்லவி.
வா வா வா பொன்
மயூரமீதியென் முன் — வா
அநுபல்லவி.
தேவாதிதேவா பழனித்
தெண்டாயுதபாணி யென்முன் — வா வா
சரணங்கள்.
நன்னிலைகாணா தலைந்த நான்மிகவுமட்டி
யென்னினுநீயா லொண்ணாதா
வென்னவினியட்டி யென்முன் — வா வா
பாதவர்ச்சனை செய்யாத பாவியேனானாலும்
ஆதரிக்க வேணுந்தவ
றாதேயொருகாலு மென்முன் — வா வா
எத்தனைசொன்னாலுநெஞ் சிரக்கம்யிரதா
கத்தநிவிஷயசிற்
சொரூபனந்த போசாவென்முன் — வா வா
தஞ்சமுனையன் றியில்லாத தாமசமேனப்பா
அஞ்சலென்றிடலாகாதா
வந்தனைவெறுப்பாயென் முன் — வா வா
வள்ளிதெய்வானை விழி வண்டுநுகர்தேனே
தெள்ளியகவி மாம்பழத்
தியானிக்கும்பெம்மானே யென்முன் — வா வா
இ-ம்-பீய்-அல்லது பியாக்- தாளம் ஆதி.
பல்லவி.
ஆதரித்தென்னையினி பாண்டருள்தாயே
அசட்டைசெய்வது நீதியலநீயே
அநுபல்லவி.
மாதவத்தவரும் பூதலத்தெவரும்
வழுத்தும்பழனி மலைவடிவேலா
சாதனைத்தொழிலேனோ சோதனைக்கெதிர்நானோ
சரிவள்ளிதெய்வ குஞ்சரிலோலா — ஆதரி
கனவினுந்தாயி மனமெனும்பாவி
கலங்குவது கொஞ்ச மேகனதொல்லை
வனசமும்பொருவாத வுனதுரஞ்சிதபாத
வணக்கத்துக்கிணக்கமாய் வருவதில்லை — ஆதரி
தடியரைநாடி வடிதமிழ்பாடி
சஞ்சரித்தாலலுந் தளர்வொன்றா
கடினமதுநின் சொந்தவடிமை கதியேனெந்தக்
காலமுமுனக்கடைக் கலமன்றோ. — ஆதரி
வாக்கினிலடுத்தும் பாக்கியங்கொடுத்து
மாம்பழக்கவிச் சிங்கமதிதோற்ற
காக்குமறுமுகவா நீக்குந்துக்கவா
கன்மவஜன்மசமுநிமக் கரையேற்றி — ஆதரி
இ-ம்-மாஞ்சு -அல்லது-உசேனி-தாளம்-ரூபகம்.
பல்லவி.
வடிவே லரசேதான்
வருத்தஞ்சகிச்க மாட்டேனெனை ரட்சி
அநுபல்லவி.
அடியேநா னுன் னடைக்கலமித்ததி
அஞ்சவிடாதேயையா பழனிப்பதி — வடிவே
சரணங்கள.
அல்லும்பகலும் புண்ணாகுதேபாவிநெஞ் சையோவென் செய்வேன்
சொல்லுந்தமிழேன் றுதிசெவிகேளாதோ சும்மாகபடத்தொழிலிதுதானேதோ — வடிவே
உனது தயவு என்மே லுண்டாயிருந்தா லொரு தாழ்வுமில்லையே
ஜெனனசாகரத்திற் சுழன்றேபுத்தி தேறாதயர்தேனோ திவ்வியபராசத்தி — வடிவே
என்றுந் துணை நீதானென்று துணிந்தே னெல்லா முனைச்சார்ந்தே
சென்றிந்திரனிடர் தீர்த்தகுகாமுதிர் செந்தமிழ்மாம்பழந் தியானித்திடுங்கதிர் — வடிவே
இ-ம்-தோடி-தாளம்-ஆதி.
பல்லவி.
ஆதிசரவண பவகுகனே ஓம்
அர அர சிவசிவ — ஆதி
அநுபல்லவி.
சோதிமலை முடிவின் மீதினயனமிடுந்
தூயபரமசுக நேயமுனிவர்புகல் — ஆதி
சரணங்கள.
பந்துஜெனனமர ணந்தனில்விழும்
பாரமொழிந்துனது பதமலர்தாளுஞ்
சிந்தையுதவியருள் செய்யவயல் சூழுந்
திருமருவியசிவகிரிமிசைவாழும் — ஆதி
மதமொருவினைபுரி விதமிகமீறும்
மயில்விலகிடவரு முயர்கதிதேறும்
அதிகமதியதுதந் தான்விடையேறும்
அரனதுசெவிதனி லொருபொருள்கூறும் — ஆதி
வந்தனுதினந்தொழி மதுரப்பிரபந்த
மாம்பழந் தமிழின் மகிழவுமிகுந்த
சுந்தரஞான சொரூபகந்த
துங்கவன்வனசுப மங்களமாய் — ஆதி
கீதாமிர்தசாரம் முற்றிற்று.