அடுக்கு நிலைபோதம்
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
அடுக்கு நிலைபோதம்.
சென்னை
பூமகள்விலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
நெ-24, தாண்டவராயப்பிள்ளைவீதி
நூல்.
சொல்லிறந்தவிடமெங்கே முப்பாழெங்கே
துவாரபாலகரெங்கே முதற்பாழெங்கே
நல்வசங்குநதியெங்கே வைகுந்தமெங்கே
நாரணனும் ஆலிலைமேற் படுத்ததெங்கே
அல்லல்படும்ஐம்புத மொடுக்கமெங்கே
ஆறஞ்சுயிதழ்ரெண்டு முளைத்ததெங்கே
சொல்லவல்லாருண்டானா லவரைநாமும்
தொழுதுகுருவெனப்பணிந் துவணங்கலாமே. — ௧
உந்தியெனுநிலையெங்கே அறுகோணமெங்கே
ஒங்காரநிலையெங்கே வுற்றவிடமுமெங்கே
மந்திரமுஞ்சாஸ்திரமும் பிறந்ததெங்கே
மறைநாலும்விரித்தவயன் தானுமெங்கே
முந்திவருங்கணபதியும் பிறந்ததெங்கே
முக்கோணமுனையெங்கே யடிதானெங்கே
இந்தவகைபொருளறிந்து சொல்வார்தம்மை
இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௨
பற்பதத்திபொங்கிவரும் வழிதானெங்கே
பரிந்துமுறைகொண்டுநின்ற அறிவுமெங்கே
உற்பனமாங்கருநின்று விளைந்ததெங்கே
யொருபா தந்தாக்கிநின்ற வடையாளமெங்கே
தற்பரமாயாகிநின்ற நிலைதானெங்கே
சர்வவுயிராயெடுத்த சிவனுமெங்கே
இப்பொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௩
அடிமுடியுநடுவான நிலையுமெங்கே
அறுசுவையுங்கொண்டொளித்த விடமுமெங்கே
வடிவான வைந்தலைமா ணிக்கமெங்கே
வரையானவூமையெனு மெழுத்துமெங்கே
இடமாகஆடிநின்ற பாதமெங்கே
இச்சையுடன்பேசிநின்ற எழுத்துமெங்கே
அடைவாயிப்பொருளறிந்து சொல்வார்தம்மை
அடிதொழுதுகுருவென்று நம்பலாமே. — ௪
சற்குருவுஞ்சந்நிதியு மானதெங்கே
சாகாதகாலெங்கே வேகாத்தலையுமெங்கே
முப்பொருளுமொருபொருளாய் நின்றதெங்கே
முனையெங்கேதலையெங்கே முகமுமெங்கே
நற்கமலமாயிரத்தெட் டிதழுமெங்கே
நாலுகையொருபாத மானதெங்கே
இப்பொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௫
நஞ்சணிந்தான்முகந்தா னைந்துமெங்கே
ஞானக்கண்மற்றக்கண் மூன்றுமெங்கே
அஞ்சுவுயிர்தனைக்கொடுக்கும் யேமனெங்கே
வாயிரங்கண்ணிந்திரனார் தாமுமெங்கே
பஞ்சறிவால்நின்ற பராசத்தியெங்கே
பதினாலுலோகமனு மதுதானெங்கே
வஞ்சமறப்பொருளறிந்து சொல்வாராகில்
வணங்கிகுருபரனென்று வாழ்த்தலாமே. — ௬
நகைபிறந்தவிடமெங்கே கோபமெங்கே
நரகமேழாநரக மானதெங்கே
திகைத்துமறந்திடமெங்கே நினைப்புமெங்கே
தீராதகுறைவந்து சூழ்ந்ததெங்கே
பகைத்தவிடந்தானெங்கே ஒழுக்கமெங்கே
பகலிறவுயிருந்தவிடந் தானுமெங்கே
வகைபொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கிகுருபரனென்று வாழ்த்தலாமே. — ௭
ஆறுகாலமுகமாறு மானதெங்கே
அறுபத்துநாலுகலை நின்றதெங்கே
சீறுகால்பனிரெண்டிற் கழிந்ததெங்கே
செத்திடமுஞ்சாகா திருந்திடமுமெங்கே
பூருவநீயிருந்துவந்து பிறந்திடர்தானெங்கே
புத்திதனிலன்பத்தோ ரட்சரமுமெங்கே
வேறுபொருளுறையா துள்ளபடியேசொல்வார்
மெல்லடியிலேபணிந்து மெலியலாமே. — ௮
ஆதிகதிற்சந்திரனும் பிறந்ததெங்கே
அவரொடுங்கிநிற்குமது விடமுமெங்கே
சாதிபலவொன்றாகக் கண்டதெங்கே
சத்திசிவமென் றுபிரி யாததெங்கே
ஓதியுணர்ந்தேபூசை மறந்ததெங்கே
வுச்சிட்டநிட்டத்தே விடமுமெங்கே
சோதிபோல்ஞானமொரு பெற்றபேர்கள்
சொல்லியதெல்லாமுடலிற் சொல்லுவாயே. — ௯
இருள்பிறந்தவிடமெங்கே ஒடுங்கிடமுமெங்கே
இரண்டுதிருசங்குநின்ற விடமுமெங்கே
அருள்பிறந்துபாடிநின்ற விடமுமெங்கே
அறுத்தடைந்தவாசலொன்று கண்டதெங்கே
திருபிறந்தவிடமெங்கே எழுகிணறுமெங்கே
திருக்கிணத்தையெறைக்கின்ற ஏத்தமெங்கே
விருப்பமுடனடுக்குநிலை போதகத்தை
விளம்பினோம்மெஞ்ஞான அறிவுளோர்க்கே. —
அடுக்குநிலைபோதம் முற்றிற்று.