ஆத்திசூடிசிந்து
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
ஆத்திசூடிசிந்து
ஓரடித்தங்கப்பண்
சென்னை — சூளை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
வெண்பா
சென்னைவளரச்சுத் தலைவர்களே செப்பக்கேள்
நன்னெறியாமிச்சிந்தை நாடியே — இன்னொருவர்
அச்சிடவந்தாலும் அவர்க்குவிடைதாரா
இச்சிறுவன் விண்ணப்பமிது
பொல்லாமனதே
புகழில்லாப்புண் மன
கல்லாதேமனதே கெட்டமனதே
கழறுவேன்கேனினிதாய்
அத்திமுகத்தோனை — அனுதினமறவாதே
ஆதிசிவமூர்த்தி — அடிகள்மறவாதே
இவ்வுலகில்யாவருக்கும் — இடரினைத்தேடாதே
ஈநனர்தமைசேர — எள்ளைவுநினையாதே
உலகத்திலெந்தாளும் — குலப்பழுபேசாதே
ஊமைகுருடர்முதல் — வொருத்தரைமேசாதே
எவர்க்குப்பிரியவனாய் — இருக்கவேயெண்ணுவாய்
ஏழையர்தமைக்கண்டு — ஏளனஞ்செய்யாதே
ஐயமெனவந்தோரை — நையவேபேசாதே
ஒருத்தர்க்கென்னாளும் — ஒருதீங்குந்தேடாதே
ஓதுவித்தோன்தனக்கு — ஒர்குறையுஞ்செய்யாதே
ஔவியம்பேசி — அகலத்திற்றிரியாதே
அக்கரையாய்பொருளை மனதே
அன்பாகத்தேடிடுவாய்
கட்டினமனைவிதன்னை — கண்ணீர்சோரவையாதே
காசுபணஞ்சேர்த்து — கணுகக்கிட்டலையாதே
கிள்ளைமுதல்பட்சிக்கும் — கேடுநினைக்காதே
கீழ்மக்களோடு — கிட்டியுரவாடாதே
குற்றம்நினைந்தால் — சுற்றமும்பொய்யாதே
கூரானவார்த்தைகூறி — கொடுமைவிளைக்காதே
கெடுக்கும்தூர்நேசரிடம் — அடுத்துநீசேராதே
கேட்டுங்கேளாமலே — கிட்டிசண்டைசெய்யாதே
கைப்பொருளைநம்பிமெய்ப் — பொகு[ரு]ளைவிக்காதே
கொம்பனைமார்சண்டைதனில் — வம்புதீர்க்கபோகாதே
கோபத்தையெந்நாளும் — குடியரசுக்கொள்ளாதே
சத்தியத்திற்குட்படுவாய் — மனதே
அசத்தியத்திற்குட்படாதே
சரதிப்போர்தம்மிடஞ் — கார்ந்துரலாடாதே
சிறுவர்களோடுநீ — சினேகிக்கமாடாதே
சீரில்லாவார்த்தைகளே — செவிதனிற்கொள்ளாதே
சுகத்திலிருக்கும்போது — அகததைபபடைக்காதே
சூதுவாதும்பேசி — வேதனைக்குள்ளாகாதே
செப்புபேரிவ்வுடலைச் — சதமென் றுபெண்ணாதே
சேதிசொல்லவந்தோரைச் — சீறிமுழியாதே
சையெனவேயாரும் — சாற்றத்திரியாதே
சொல்லும்பெரியோர்தம் — சொல்லைநீதட்டாதே
சோம்பருடையரோடு — தேங்கித்திரியாதே
சௌரியந்தன்னைப்பேசி மனமே
சங்கைகொண்டு நின்றிடாதே
தந்தையதுவார்த்தை — தள்ளிநடக்கொணாது
தாயின்மனபெரிய — தாய்வகைச்சொல்லொணாது
திருடர்களோடுநீ — சினேகஞ்செய்யொணாது
தீவினையாமென்னுந் — தீங்கைநினைக்கொணாது
துன்னும்பெரியோரை — தூஷணைசெய்யொணாது
தூரிக்கலப்போரைத் — துணைவரென்றெண்றொணாது
தெய்வமதில்லையெனச் — செப்பவுமெண்ணாது
தேவியைவிட்டுவிட்டு — தெரிவிற்றிரியொணாது
தையலார்மங்கையவள தன்சொல்லைகேட்கொணாது
தொல்லைஎன்றில்லரத்தை துறந்துமேசெல்லொணாது
தோப்புந்தடாகம்பூந் — தோட்டமழிக்கொணாதி
நல்லோர்மனதுநோக — மனமே
நாட்டிற்றரியொணாது
நாவலர்கள்தமக்கு — நவின்றதைத்தரவேண்டும்
நித்தமிரப்போர்க்கு — நினைலாய்த் தரவேண்டும்
நீதியநீதியை — நிதானித்தரியவேண்டும்
நுட்ப[ம்]தரயொருவர் — பெட்பையரியவேண்டும்
நூல்களபுராணமதை — நுடகருத் தரியவேண்டும்
நெஞ்சுருதியாக — நிலத்துலறையொணாது
நேத்திருந்தாரென்று — நிசமேவொண்ணொணாது
நையவொருவரைப் — பையவேபேசொணாது
ணெத்துசொல்லாரையும் நுணுக்கமாய்சொல்லொணா[து]
பத்தமில்லர்க்கொடிய மனதே
பகருவேனின்னமுங்கேள்
பாதகத்தொழிலைப் — பார்க்கவுமொண்ணாது
பிறர்மனையின் மேல் — பிரியம்வைக்கவொண்ணாது
பீட்டையவென்றால் — பெரியோர்கள்நேசந்தேடு
புலலர்கள்தம்மோடு — புணர்ந்தேகவொண்ணாது
பூமியிலிரப்போரை — புகுந்தடிக்கவொண்ணாது
பெண்ணாசையாலேநீ — பித்தனாகவொண்ணாது
பேடியென்றேயுலகில் — பேர்வகிக்கவொண்ணாது
பைநாகத்தோடுநீ — பரிக்ஷிக்கவொண்ணாது
பொறுமையெந்நாளும்நீ — பொருந்தியிருக்கவேண்டும்
போகாதயிடத்திற்கு — போகவுமொண்ணாது
மண்ணின்மீதினில்நின்று — மனதே
வழக்கோரஞ்சொல்லொணாது
மாமியார்வீட்டினில் — மருவியிருக்கொணாது
மித்துர்க்குத்துரோசும் — நினைக்கவேயொண்ணாது
மீண்டொருவர்வத்தாலும் — விளம்பவேயொண்ணாது
முன்னோர்மொழியை — முனிந்தழிக்கவொண்ணாது
மூடர்கள்தம்மோடு — கூடவேயொண்ணாது
மெல்லியரைவிட்டு — வேரிடஞ்சொல்லொணாது
மேழியதனை — வெறுக்கவேயொண்ணாது
மையனசுகண்ணிதம் — வலையிற்சிக்கொணாது
மொழிந்ததோர்சொல்லை — மறக்கவுமொண்ணாது
மோசமதுசெய்து — காசைசேர்க்கொண்ணாது
வஞ்சகரோடுறவு மனதே
வையாதோருநாளுமே
வாதஞ்சொல்லேனென்று — வழங்கியலையேதே
விலையைக்குறைக்காதே — வீண்வம்புபேசாதே
வீணானவார்த்தைகூறி — காலம்ஒழிக்கொணாதே
வுண்டதோர்வீட்டுக்கு — ரெண்டகம்நினையாதே
வூரார்ருடைமைக்கு — பேராசைகொள்ளாதே
வெஞ்சமரின்முன்னே — வேடிக்கையாய்நில்லாதே
வேந்தன்றன்சொல்லைநீ — வெறுத்துநீதள்ளாதே
வையகத்தோர்சொல்லும் — வழியைத் தடுக்காதே
ஒருவர் பேச்சைநீ — ஒருவரோடுகூறாதே
ஓதுமிராசாத்னம் — உரைத்ததைதள்ளாதே
ஔவைசொன்னதுமிதுவே மனதே
ஐயனருள்பெற்றுவாழி
வேதியர்குலமும்வாழி வேந்தர்கள் தானும்வாழி
ஆதிபிலவ்வைசொன்ன அருந்தமிழ்நீதிவாழி
கோதிலாக்குணம்படைத்த சூ[கு]வலயத்தோர்கள்வாழி
நீதிநன்னெறிகற்றோர்க[ள்]நீடூழிவாழிவாழி
முற்றிற்று.