pATal46 pATal45.html pATal46.html pATal47.html ஏரெழுபது மகாகவி கம்பர் 46. கருப்பிடித்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 45. களைகளைதற்சிறப்பு. | 47. ஈற்றேறுஞ் சிறப்பு. | அகெடமி

பயிர்க்கதிரில் பால்பிடித்தல் கருப்பிடித்தலெனப்படும். 46. கருப்பிடித்தற் சிறப்பு. திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும் உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும் தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி கருவடையிற் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. (இ—ள்.) தரு அடையும்கற்பகமரத்தை யொத்த, கொடை — கொடைத்தொழிலை, ஆளர் — மேற்கொண்ட வேளாளர், தண் வயலில் — குளிர்ந்த வயலிலே, செஞ்சாலி — செந்நெற்பயிர், கரு அடையின் — கருவைக் கொள்ளுமாயின், (யாவர்க்கும்), திரு — செல்வங்கள், அடையும் — தோன்றும், திறல் — வெற்றி, அடையும்—; சீர் அடையும் — புகழும் உண்டாம்; செறிவு அடையும் — தேகவலிமையும் உண்டாம்; உரு அடையும் — வடிவழகு உண்டாம்; உயர்வு அடையும் — மேன்மையுண்டாம்; உலகு எலாம் — உலகத் துயிர்களெல்லாம், உயர்ந்து ஓங்கும் — மேன்மைபெற்று நிற்கும்; பூதலத்தில் — இப்பூமியில், கலி — தரித்திரமென்பது, அடையமாட்டாது; (எ - று.) பயிர் கருவையடைந்து தானியம் விளைந்தால் யாவரும் பசியாமலுண்ணலாமாகலான், அப்போது திருமுதலியன அடையு மென்றவாறு. இச்செய்யுள் ஒழித்துக்காட்டணியின்பாற்படும். பசியினால் வாடும்போது உருவமும் பொலிவழியு மாதலால், பசியின்றி வயிறாரப்புசிக்கும் பருவத்து “உருவடையும்” என்றாரென்க. தரு — தற்சமவடசொல்; மரப்பொதுப்பெயராகிய இது, சிறப்பாய்த் தேவதருவெனப்படுங் கற்பக தருவை யுணர்த்திற்று. — (46)
பொருளடக்கம் | 45. களைகளைதற்சிறப்பு. | 47. ஈற்றேறுஞ் சிறப்பு. | அகெடமி