ஏற்றப்பாட்டு
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
ஸ்ரீ
ஸ்ரீகிருஷ்ண விலாசத்தில்
புன்னைமரச்சேவை கீர்த்தனம்
சென்னை
பாரதி அச்சுக்கூடுத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
பல்லவி.
மாதேயசோதையே கேளம்மா — உன்மகன் செய்த
சூதே நான் சொல்லுகிறேன் கேள் — தாயே
அநுபல்லவி.
போதும்போதுமொரு சூதும்வாதுந்தெரி
யாதகிருஷ்ணன் வெகு சாதனமென்றான். — மா
சரணங்கள.
ப(பூ)ட்டிக்ச(க)தவைத்திறந்துவிட்டான் பாலூட்டுதென்று
திட்டி புருஷரைக்கூப்பிட்டான் அவரங்கேபோனார்
கட்டியெங்களை விட்டான்
எட்டியவுறிதனில் கட்டிய தயிர்வெண்ணை
சட்டியெல்லாங் கொள்ளை இட்டாண்டியம்மா. — மா
பெருகி நீரோடும்வேளைக் கண்டான்
சேலையைவாரி
மரமீதிலேறி ஒளித்துக்கொண்டான்
துறையேசேலை
தரவேண்டுமென்று நாங்கள் கேட்டோம்
நீங்களெல்லோரும்
கரைமீதில் வந்தால்தாறே னென்றான்
நீர் எங்கள் மானத்தைக்
காப்பாற்ற வேண்டுமென்று கேட்டோம் — மாதே
மற்று மொருகன்னியிடத்தில் தானும்
படுத்திருந்தால்
மெத்தை மீதினில் வந்திருந்து
சண்டாளப்பாவி
விந்தைக ளென்னசெய்தானே
நாங்களென்ன செய்வோம்
நித்தியம் தங்களை தொடுத்தானே
சுற்றிலும் மாதர்கள்
இத்தனை பேரிலே பத்தினியொருத்தி இல்லையே. — மா
புன்னை மரச்சேவை கீர்த்தனம், முற்றிற்று.