கற்பகவல்லியம்மை பதிகம்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சிவமயம்
திருமயிலைக் கற்பகவல்லியம்மை பதிகம்.
சென்னை சூளை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
1923
காப்பு — வெண்பா.
காரூர்பொழில்மயிலைக் கற்பகவல்லிக்கன்பார்ச்
சீரூர்பதிகம்யான் செப்பவருள் — நீரூரும்
கூத்தரடையாயளந்த கோபாலனார்மருகா
கூத்தரடையானைமுகா கூர்ந்து.
நூல்.
மேகநிகரானகுழ லழகும்விற்கணையினுதல் விழியினழகும் பசியசெம்,
பூகமொப்பாகும் கழுத்தழகுமப்புயப் போதனையினடியினழகும்,
சோகமிக்கிழிஞர்சூழு விழைகடையனேனுளத் துயரறக்காண்ப தென்றோ,
மாகாளவியசோலை மயிலைகபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௧
பூசனை செயடியர்வினை பொடிபடுத்திடுமன்ன பூரணிபுராந்தகியுனை,
நேசமுடனேதுதித் துனதுநாமங்களென் னெஞ்சிற்பதித்தவுலகப்,
பாசமதறக்கருணை கூர்சவுந்தரிபரா சத்திபார்வதி பகவதி,
வாசவனோடமர்துதி மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௨
பூதரவிலேந்துபரி பூரணிதயாபரி புராதனிபவானி பொல்லா,
வேதமுடையேநினது பாதமலரேத்தவர் மீது கிருபையிலாவிடிலெனந்,
காதரவதேதுபுக லந்தரி திரியம்பகி யகோரிபைரவிவராகி,
மாதர்கண்டிக்கு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௩
அண்டரண்டங்களுக் கோரன்னையேயென்றநாவி யேயாரமுதமே,
தண்டமிழ்சொன்மாலை சாத்துவோர் க்கருளுந் தயாபரி புராண கௌரி,
விண்டையன்றொழு நளின சரணிசர்ப்பாபரணி விமலையென்வினைக ளைகுவாய்,
மண்டலந்துதிசெய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௪
பழுதினற்பத்தர்தம துதையமாகுஞ்செய்ய பதுமவாசனிபூதல,
முழுதுமுன்மிருநாழி நெற்கொண்டிர ட்சிக்க முக்கணி திரிசூலியினியெப்,
பொழுதினருள் கூர்ந்தெனது புன்கணறமாற்றுவாய் புங்கவீபுவனேஸ்வரீ,
மழுவலனிலங்கு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௫
வீரியபிராமிசிவ காமிகருணாகரி விணாடர்கடுதிக்கு மிகுசிங்,
காரிவிஸ்வேஸ்வரி சுபாகரி குணாகடாக்ஷ வீக்ஷணி புனிதையோங்,
காரியுபகாரி ஒய்யாரிவரையனருள் கௌமாரியடியேனையாள்,
வாரியுடைநிலவு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௬
சங்கரிசதானந்தி சுந்தரிசர்வேஸ்வரீ சகஸ்த்ராபி தானிவாமி,
சிங்கவாகனநீலி யந்தரீதுரந்தரீ திரோப தைதிரிபுரசுந்தரி,
திங்களணி செஞ்சடில தேவிபகவதி சச்சி தானந்தியகிலஜனனீ,
மங்களா கரியருள்செய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௭
பாம்பரிசனார்த்தனர் சகோதரிசுகாரம்ப பர்வதே ஸ்வரிசுபத்திரி,
ரந்தரிநிராதாரி நீதசுந்தரிநிமலை நித்யகல்யாணிநனினக்,
கரந்தனிற்கிளளையேந் தம்பிகையுரந்தரி கராசலாம்பரியானெனும்,
வாங்கடந்தருள்செய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௮
சத்தியம்பிகையம்மை யயிராணியமலைசிவை சாமளையுருத்திரையுமை,
பத்தியொடு தொழுமடி யவர்க்கரு ளிமயவல்லி பரைபராசத்திவிமலை,
நித்திய நிரஞ்சனி நிதானி மரகதவல்லி நிற்குனி[ணி]மனோன்மணிமலர்,
வத்திரயாமலை யருள்செய் மயிலைக்கபாலிசர்[பான்] மருவுகற்பகவல்லியே. — ௯
அம்புவியின்மைந்தர்பிழை யா[யா]மலாள்வது அன்னைதன்கடனாதலா,
னம்பினேனுன்றனிரு நளினபொற்பாதமதை நாயினுங் கடையனேன்யா,
னென்பிரா னரனார்த மிடமேவுமன்னையே ஏங்கிடாதெனையாளுவாய்;
வ[ம்]பவிழ்மலர்ச்சோலை மயிலைக்கபாலீசர்[பான்] மருவுகற்பகவல்லியே. — ௰
திருமயிலைக் கற்பகவல்லியம்மை பதிகம் முற்றிற்று.