கேசவப்பெருமாள் கீர்த்தனம்
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
ஸ்ரீ
ஸ்ரீராமஜெயம்.
கேசவப்பெருமாள் பேரில் கீர்த்தனம்.
சென்னை சூளை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
1923
இ-ம் நாதநாமக்கிரியை தாளம் ரூபகம்.
பல்லவி
இதுநல்லசமையம் அருள்ரிஷிகேசவா
இதுநல்லசமையம்
அநுபல்லவி,
பதியினிற்சிறந்தகான் பரியூரிலெந்நாளும்
பாசமுடனமருங் கேசவனே நீவர — இது
சரணங்கள்
தொண்டர்கட்குட்சிறு தொண்டநென்றெண்ணிஎன்
பண்டைவினையகற்றிப் பாலகனைக்காக்கவே — இது
தாயிலாப்பிள்ளைபோற் றளர்ந்தழுதேங்குமிச்
சேயின் குறையகற்றி திருவருள் செய்யவே — இது
அருடருதெய்வமென றருமறைதுதிப்போனே
இருளையகற்றியிவ் வேழையைக்காக்கவே — இது
மாதர்வலையிற்சிக்கி யயக்கிவீழாமலுன்
பாதத்தைநாடோறும் பணிந்திடவரந்தர — இது
சுற்றிவந்துன்றனை நித்தந்துதிசெய்யும்
பத்தனாம்ராஜகோ பாலனுக்கருள்செய்ய — இது
கீர்த்தனம் முற்றிற்று.