ஏற்றப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. இந்ததொண்டைநாட்டில் மேழிற்குடியாளர் சுப்பிரமணியர்பேரில் பாடியிறைக்கும் ஏற்றப்பாட்டு. சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடுத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923 நெ-24, தாண்டவராயப்பிள்ளை வீதி
Contents | Home

காப்பு வெண்பா. வையகத்திலுள்ள வளமுடையசென்னெலுக்குப் பையஜலமிறைத்துப் பாங்குடனே — உய்யவிந்த ஏற்றப்பாட்டைப்பாடி யென்குறைகள் தீருதற்கு போற்றினேன் ஐங்கரன்றாட் போது. ——— விநாயகர் தோத்திரம். பிள்ளையாரேவாரும் எண்ணும்பிள்ளையாரே உன்னைத்தொழுவேனே உனக்கடிமைநானே எனக்கு தெய்வம் நீயே ஐந்துகரத்தோனே ஆனை முகத்தோனே தும்பிமுகத்தோனே தொந்திவயற்றோனே பார்வதிகுமாரா பரமனருள்பாலா மாயன்மருகோனே மங்கையுமைபாலா இனிமறவேன்வேலா ——— (௨-ம்-பரியம்.) இரண்டுடனேவாரி எட்டுடனேவாரி எப்படியும் நம்மை ரட்சிப்பரேகர்த்தர் கச்சிப்பெருந்தேவி கரிவரதன்றேவி கம்பன்மனையாட்டி காமாட்சித்தாயார் ஏலவாகுழலி எகாம்பரனாதர் உனை மறவேன் வேலா ——— (௰-ம்-பரியம்.) ஒருபதியாலெட்டாம் உலகமெல்லாமாதா உமையவளொருத்தி பரமன் மனையாட்டி பார்வதிகௌரி ஐங்கரனைப்பெற்ற மங்கைசிவகாமி இனிமறவேன்வேலா ——— (௨0-ம்-பரியம்.) இருபதியாலெட்டாம் இளங்குழவித்திங்கள் பரமன்முடிமேலே வீசுங்கொன்றைமாலை ஈசர்முடிமேலே கங்கையலை மோதும் கர்த்தன் முடிமேலே முருகனை மறவேன் ——— (௩0-ம்-பரியம்.) முப்பதியாலெட்டாம் மோகபாணம்விட்டான் மூலபலமான ராமபாணம்விட்டான் ராவணனும்பட்டான் கோதண்டம்வளைத்தான கும்பகர்ணன்பட்டான் இளையவனம்பாலே இந்திரசித்தன்பட்டான் நான்மறவேன்வேலா ——— (௪0-ம்-பரியம்.) நாற்பதியாலெட்டாம் நாரணன் பிறந்தான் தேவகிமகனாய்ப் பார்த்திபன்பிறந்தான் பாரதப் போர் செய்ய தனஞ்செயர்க்கு மூத்த தருமனும்பிறந்தான் விசையனுக்குமூத்த வீமனும்பிறந்தான் நரபதிக்கிளைய நகுலசகாதேவர் குந்திமக்களைவர் குருகுலத்துமன்னர் பாண்டுமக்களைவர் பாஞ்சாலிக்கணவர் அடிதொழுதேன்வேலா ——— (௫0-ம்-பரியம்.) அன்பதியாலெட்டாம் அண்ணாமலைதன்னில் உண்ணாமுலைத்தாயார் பண்ணினாள்தவசு பாகம்பெறவேண்டி உமையவள் தவசை பரமனும்மகிழ்ந்து பெருமானருளாலே பெற்றாளிடப்பாகம் ஆறுமுகவேலா —————————— ——— (௬0-ம்-பரியம்) அறுபதியாலெட்டாம் அம்பலத்திகூத்து ஆடினார்பரமன் தந்திரமாய்க்காளி தானாடினாள்கூட தேவரெல்லாங்கூடி திருநடனம்பார்த்தார் தோராமலேகாண் வாதாடினாள்கூட சிவபெருமானப்போ துக்கிநின்றார்காலை நாணிநின்றாள் காளி தேவர்சபைமுன்னே ஏழைபங்குவேலா ——— (௭0-ம்-பரியம்) எழுபதியாலெட்டாம் எழில்பெரியகாஞ்சி நார்தனிலேவாழும் கம்பன்மனையாட்டி காமாட்சித்தாயார் ஆற்றுமணல்சேர்த்து அரனைபூசைசெய்தாள் கம்பாநதிவெள்ளங் கரைபுரண்டுஓட உமையவள்பயந்து தழுவினாள்சிவனை தையல்முலைரெண்டும் அரன்மேலழுந்த கைவளைத்தழும்பு கர்த்தன்மேலழுந்த பரமனதுகண்டு திருவுளமகிழ்ந்தார் எண்ணுந்துணைவேலா ——— (௮0-ம்-பரியம்) எண்பதியாலெட்டாம் எங்கும்புகழ்பெற்ற கங்கைநதிசூழ்ந்த காசிவிஸ்வநாதர் தேவர்துதிசெய்யும் மாதுமையாள்பாகன் அன்னபூரணியாம் அன்னவிசாலாட்சி தொழுதனடிவேலா ——— (கூ0-ம் பரியம்) தொண்ணூறோடேவெட்டாம் தோகைமயிலேறி வேலாதோவாறார் பச்சைமயிலேறி சுப்ரமணியர்வாறார் கானமயிலேறி கந்தரதோவாறார் வெற்றிமயிலேறி வேலாதோவாறார் (௱-ம்-பரியம் முற்றும்.) ——— வள்ளிபுலம்பாய பிள்ளையாரேவாரும் பிள்ளையாகப்பெற்ற பேயன்மைந்தனல்லோ ஆயவனைநீலி அறுமுகவன்கொண்ட குறத்திமகளாலும் குறைவுவந்துசேர்ந்து மறைக்கதெய்வயானை மணம்புரிந்துவுங்கள் குலத்திலொருபெண்ணை வலப்புரத்தில்வைத்து முடுக்காய்கலியாணம் தொடுத்துகட்டதாலி வயறுவுப்பினாலும் பேயன்மகனென்று பெண்கொடுக்கமாட்டார் இரண்டெனேவாரி எட்டுடனேவாரி எ[ண்]ன்கு[ண]னத்தோன்மைந்தன் ஏழைகள் மேல்பட்சம் ஏத்திவையும்நாதா ஐந்துடனேயொன்று ஐயமற்றபாதம் ஒழுக்கமழைபேய்ந்து ஓங்குங்குடிபயிர்கள் ஓங்கிமிகவயல்கள் ஓய்தலில்லாநெற்கள் கண்களித்துப்பார்த்து களிப்புடனேகொய்து காளைகளால்துவைத்து காணுந்தொம்பைறொப்ப கீழ்மறையோர்க்கீந்து கீர்த்திமிகப்பெற்று குறைகலில்லாவாழ்வை குழந்தைமனையோடு கூட்டிவையும் நாதா உனை மறவேன்வேலா ——— (௰-ம்-பரியம்) ஒருபதியாலெட்டாம் ஒருமழைதவக்கம் பயிரெல்லாம் வதக்கம் ஒருமழைபெய்யாதோ பயிர்களை தீறாதோ குடிவளமாகாதோ இனிமறவேன் வேலா ——— (௨0-ம்-பரியம்) இருபதியாலெட்டாம் இருபுறமுஞ்சோலை மதுரைவளநாடு பக்கமெல்லாஞ்சோலை பாண்டிவளநாடு சுற்றிலெல்லாஞ்சோலை சோழவளநாடு முருகனைமறவேன் ——— (௩0-ம்-பரியம்) முப்பதியாலெட்டாம் முப்புரமெரித்தார் தற்பரன்சிரித்தான் தேவரெல்லாங்கூடி தேவருருவானார் சூரியனும்திங்கள் சுழலும்வண்டியானார் வேதமொருநான்கும் வெண்புரவியானார் சாரதிபிரமன் சமைந்தார்தேரோட்ட ஆதிசேடன்தன்னை நாரியாகப்பூட்டி மேருமலைதன்னை வில்லாகவளைத்து மாயவனார்தம்மை பாணமாய்த்தொடுத்து போர்செய்யதானும் புறப்பட்டார் சிவனார் நான்மறவேன்வேலா ——— (௪0-ம்-பரியம்) நாற்பதியாலெட்டாம் நாகலோகமாளும் ஆதிசேடமூர்த்தி அந்தரத்தையாளும் இந்திரனரசன் மண்ணுலகையாளும் அண்ணல்ரகுராமன் அடிதொழுதேன்வேலா ——— (௫0-ம்-பரியம்) அன்பதியாலெட்டாம் ஆருருச்சிவனார் தேரோடுந்தெருவில் தொண்டர்சுந்தர்க்காக தூதாகநடந்தார் பா[வை]வவதன்மனைக்கு பாதினாளிரவில் திருவடிசிவக்க சென்றாரேசிவனார் ஆறுமுகவேலா ——— (சு0-ம்-பரியம்) அறுபதியாலெட்டாம் அலைகடல்கடைய விஸமதில்பிறக்க அமரர்கள்நடுங்க சரணமென்றடைய தஞ்சமென்றவாக்கு அஞ்சலென்றருளி அமுதுண்டார்விடத்தை ஆதிசிவனாரும் ஏழைபங்குவேலா ——— (௭0-ம்-பரியம்) எழுபதியாலெட்டாம் எருமைக்கிடாயேறி எமதர்மனும்வந்து திருக்கடையூர்தன்னில் சிவனைபூசைசெய்யும் பதினாறுவயது பாலன்மார்க்கண்டனை பாசம்போட்டிழுத்தார் பாலனும்நடுங்க கர்த்தன் கோபங்கொண்டு காலனையுதைத்தான் பூமியும்நடுங்க காலனும்விழுந்தான் எண்ணும்பதினாறாய் அண்ணல்வரம்தந்தார் எண்ணுந்துணைவேலா ——— (௮0-ம்-பரியம்) எண்பதியாலெட்டாம் ஏழை ரகுராமன் சீதைமணவாளன் கோசலைகுமாரன் கோதண்டவில்லாளி அயோத்திநகறாளும் ஆண்மையுள்ளராமர் தொழுதனடிவேலா ——— (௯0-ம்-பரியம்) தொண்ணூறோடெட்டாம் தென்மதுரை சொக்கர் மண்சுமந்தாரப்போ வைகையணைகட்ட வாங்கிக்கொண்டார்கூலி வாணிச்சிகைபிட்டு வாயிலிட்டுப்போவார் பிட்டுமாண்டிடுமாம் ஒருதட்டுமண்போட்டு மறுபடியும் வருவார் வாணிச்சிகைபிட்டுக்கு ஓடிவந்துநிற்பார் ஓடிபலம்பாய ——— (௱ம்-பரியம்) பிள்ளையாரேவாரும் பிடித்தேனையாஎ[ஏ]ற்றம் விக்கினரேவாரும் விட்டுவிட்டேன்ஏற்றம் ஆக-பரியம்—௨0—க்கு இலக்கம்—௧0௩. ஏற்றப்பாட்டு முற்றிற்று.
Contents | Home